<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-30095908</id><updated>2011-04-21T23:27:26.428+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளிகள்</title><subtitle type='html'>எங்கள் அம்மாக்களை எங்களிடமிருந்து பிரித்துக்கொண்டு, கனமான துப்பாக்கிகளை எங்களுக்குக் கொடுத்தார்கள்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>45</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-116082240502511796</id><published>2006-10-15T19:02:00.000+02:00</published><updated>2006-11-14T17:34:35.423+01:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 45</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://www.satiyakadatasi.com/images/child-soldier29.jpg"&gt;&lt;img style="WIDTH: 400px; CURSOR: hand" alt="" src="http://www.satiyakadatasi.com/images/child-soldier29.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;குடும்பச் சங்கிலி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சில நாட்களின் பின் அம்மா என்னைக் கம்பாலாவிற்குத் தனது சகோதரனொருவனிடம் அழைத்துச் சென்றார். அம்மாவின் சகோதரனுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். அவரின் பெயர் கராவெல். அவர் 21வது படையணியில் ஓர் அதிகாரியாகக் கடமையாற்றினார். உகண்டாவின் சர்வதேச விமான நிலையம் 'என்டபே'யின் பாதுகாப்புப் பணியில் 21வது படையணி ஈடுபடுத்தப்பட்டிருந்தது. உடனடியாகவே நானும் மாமாவும் ஒருவருடன் ஒருவர் ஒத்துப் போனோம். நான் மாமாவுடன் தங்கியிருப்பதைச் சொந்த வீட்டிலிருப்பது போலச் சுதந்திரமாக உணர்ந்தேன். என்னைத் தன்னுடன் வைத்திருப்பதில் மாமாவுக்கும் மகிழ்ச்சி தான் என்பதையும் தெரிந்துகொண்டேன். அவர் எல்லாவகையிலும் என்னை மரியாதையாகவே நடத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது மாமன் ஒரு திறமையான தலைவர், மிகுந்த மதிநுட்பமுள்ளவர், மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டவர். குமரிகள் அவர் மீது படையெடுத்தனர். அவரது வாழ்கை இனிமையாகவே கழிந்தது. வாழ்க்கையைப் பற்றிய கவலையே அவரிடமில்லை. எங்கள் குடும்பத்தில் யாரிடம்தான் அந்தக் கவலையிருந்தது? இவரும் அவர்களைப் போலவே கையில் கிடைத்ததையெல்லாம் செலவழித்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் நானும் மாமாவும் வீட்டின் முன்னே உட்கார்ந்து கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். நான் அவரது சுருண்ட தலைமுடிகளை அளைந்து விளையாடிக்கொண்டிருந்தேன். திடீரென ஓர் இளம்பெண் வேகமாக எங்கள் முன் வந்து நின்று 'இப்போது இந்தப் பெட்டை நாயும் உனது வைப்பாட்டியாகிவிட்டாளா?' எனப் பைத்தியம் பிடித்தவள் போல மாமாவைப் பார்த்துக் கத்தினாள். மாமா எந்தவிதத் தயக்கமுமின்றித் தனது பிஸ்டலை உருவி அந்தப் பெண்ணின் மார்பில் சுட்டார். 'இவள் எனது மகள்' என இரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் என்னைக் காட்டிச் சொன்னார். அம்புலன்ஸ் வந்து காயப்பட்ட பெண்னை எடுத்துச் சென்றது. நல்லவேளையாகக் கடுங் காயமடைந்த பெண் உயிர் தப்பினாள். கராவெல்லின் மீது எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. இதிலிருந்தே இராணுவத்தினரின் வானளாவிய அதிகாரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.யாரிடம் அதிகாரமுள்ளதோ அவர்கள் மற்றவர்களின் வாழ்கையை நிர்ணயிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சம்பவத்தின் பின் கராவெல்லின் நடத்தை வித்தியாசப்படத் தொடங்கியது. உதாரணமாக நான் இராணுவச் சீருடை அணிவதில் அவருக்கு விருப்பமில்லை எனப் பல தடவைகள் சொன்னார். அது என்னைக் குழப்பியது. இவர் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார்? வேறெந்த உடையைத்தான் நான் அணிந்துகொள்வது? என்னால் நிறைவேற்ற முடியாத வேண்டுகோள்களை அவர் என்னிடம் வைக்கின்றார். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது போல நான் சாதாரண உடைகளை அணிவதை முற்றாகவே கைவிட்டேன். இப்படியே சில நாட்கள் சென்றன. ஒருநாள் வேலை முடிந்து வந்த அவர் என்னை இராணுவ உடைகளைக் களைந்துவிட்டு வேறு உடைகளை அணியச் சொன்னார். எனது சகோதரி மார்ஜி பொன்பொன்ஸ் என்னை அழைத்துச் செல்வதற்காக அன்று மாலை அங்கே வரவிருப்பதாக மாமா சொன்னார். மார்ஜி என்னை மறுபடியும் பாடசாலையில் சேர்த்துவிட முயற்சி செய்வதாகத் தெரிந்தது. இது என்னை மிகவும் வருத்தமடையச் செய்தது. எனது சகோதரிக்குப் போதுமானளவுக்குப் பிரச்சினைகள் ஏற்கனவேயுள்ளன. அத்தோடு நானும் சேர்ந்து கொண்டால் இருவரது பிரச்சினைகளையும் நிச்சயமாக அவளால் சமாளிக்க முடியாது. ஆனால் மார்ஜி சொன்னது போலவே அன்று பின்னேரம் வந்தாள். கராவெல் என்னை எனது பொருட்களை எடுத்துக் கொள்ளும்படி சொன்னார். எனது உடுப்புக்களுக்கிடையில் இராணுவச் சீருடை ஒன்றையும் மறக்காமல் கடத்திச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது கணிப்பீடுகள்கள் சரியாகவேயிருந்தன. அவளது வீட்டில் குளியலறை இல்லை. கழிப்பறையும் வீட்டிற்கு வெளியேதான் இருந்தது. இரவில் வரவேற்பறைச் சோபாவில் தான் என் படுக்கை. அது போதாதென்று வீட்டுக்காரி வேறு எனது வாழ்கையை இன்னும் துன்பமாக்கிக் கொண்டிருந்தாள். வயதிலும் உருவத்திலும் கிட்டத்தட்ட என் பாட்டியைப் போலவேயிருந்த அவள் சாதாரண தொனியில் என்றுமே கதைத்ததில்லை. இரவு பகலாகக் கத்திக்கொண்டும் குத்தி முறிந்துகொண்டுமிருப்பாள். தன்னை ஓர் அரசியைப் போல நடத்த வேண்டும் என்பது அவளது கட்சி. அவள் தனது தர்பாரில் இழிவில் உழலும் அடிமை என்ற பாத்திரத்தையே எனக்கு வழங்கியிருந்தாள். அந்த இம்சை அரசி நான் தன்னை இடையறாது மகிமைப் படுத்திக்கொண்டேயிருக்க வேண்டுமென்று ஆசைப்பட்டாள். நாளடைவில் அவளை நான் முழுமையாக வெறுக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையிலும் எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. எனது சகோதரி கம்பாலாவின் அரச பாடசாலைகளினது எல்லாப் படிகளிலும் ஏறி இறங்கிவிட்டாள். எல்லாப் பாடசாலைகளிலும் ஒரே பதில்; காத்திருக்க வேண்டியவர்கள் பட்டியலில் எனது பெயர் பதியப்பட்டுள்ளது. இவ்வாறாக ஒரு மாதம் ஓடிப்போய் விட்டது. அதுவே எனக்கு ஒரு வருடம் போலத் தெரிந்தது. நேரமோ சவ்வு மிட்டாய் போலத் தொங்கிக்கொண்டு கிடந்தது. என்னால் வீட்டுக்குள் தனிமை நெருப்பில் அவிய முடியவில்லை. நான் இப்போது ஏதாவதொரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும். நான் கம்பாலாவிற்கு அருகாமையிலிருக்கும் இராணுவத் தளங்களின் விலாசங்களை இரகசியமாகத் தேடத் தொடங்கினேன். எனது சகோதரி என்னை ஒரு பாடசாலையில் சேர்த்துவிடத் தன்னாலான மட்டும் முயன்று கொண்டுதான் இருக்கிறாள். ஆனால் நான் பொறுமையை இழக்கத் தொடங்கி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் காலையில் மார்ஜி வேலைக்குப் புறப்பட்டுச் சென்றதன் பின்னாக நான் குளிக்கத் தொடங்கினேன். குளிக்கும் போது என் கால்களிடையே இரத்தம் பெருகுவதைக் கண்டேன். ஆனால் எனது உடலில் வலியிருக்கவில்லை. நேற்று என்ன நடந்ததென்று தலையை உடைத்துக்கொண்டு யோசித்தேன். என்னால் எதையுமே ஞாபகத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. மண்டையைக் குடைந்து குடைந்து யோசித்துப் பார்த்தேன், எதுவுமே பிடிபடவில்லை. நேரம் செல்லச் செல்ல என்னைப் பயம் பிடிக்கத் தொடங்கியது. வைத்தியசாலைக்குச் செல்ல வேண்டுமென நினைத்தேன். ஆனால் வெட்கம் என்னைத் தடுத்தது. அத்தோடு எனக்கு உடலில் வலியுமில்லை. குற்ற உணர்வுடன் என்னைக் காட்டிக் கொடுக்கக் கூடிய தடயங்களைத் தோட்டத்தில் குழி தோண்டிப் புதைத்துவிட்டு மீண்டும் படுத்துத் தூங்கிவிட்டேன். நான் தூக்கம் கலைந்து எழுந்து பார்த்தபோது நான் படுத்திருந்த சோபாவில் இரத்தம் பெருகிக் கிடந்தது. நான் அச்சத்தால் உறைந்து போனேன். எனது சகோதரி என்னைக் கொல்லப் போகிறாள். நான் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடிப் போனேன். பிரச்சினைகள் என் தலைக்கு மேற் போனால் நான் செய்வது அது தானே. &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.35.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.35.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-116082240502511796?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/116082240502511796/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=116082240502511796&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/116082240502511796'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/116082240502511796'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/10/45.html' title='குழந்தைப் போராளி - 45'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-116082116595006975</id><published>2006-10-14T12:40:00.000+02:00</published><updated>2006-11-14T17:38:23.886+01:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 44</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://www.satiyakadatasi.com/images/child-soldier36.jpg"&gt;&lt;img style="WIDTH: 400px; CURSOR: hand" alt="" src="http://www.satiyakadatasi.com/images/child-soldier36.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#00cccc;"&gt;எதுவுமே இலவசமல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரொனால்டின் கண்களில் பட்டுவிடாமலிருக்க நாங்கள் காட்டு வழியூடாக நடந்து சென்றோம். சிறிது தூரம் தான் சென்றிருப்போம், எனக்கு வழித்துணையாய் வந்தவனின் நடவடிக்கைகளில் வித்தியாசங்கள் தோன்றுவதை நான் கவனித்தேன். தயக்கத்துடன் நான் கால்களை இழுத்துக்கொண்டு நடந்தேன். அவன் என்னுடன் பேசிய முறையும் என் சந்தேகத்தை வலுவாக்கியது. இவன் எனக்காக இரக்கப்படுபவனல்ல. காட்டு வழியில் பாதியை நாங்கள் கடந்திருந்த போது அவன் எனது கையைப் பிடித்து நிறுத்தி 'இப்போது இங்கேயே நீ என்னுடன் படுக்க வேண்டும்! நீ சம்மதிக்காவிட்டால் உன்னைப் படுக்க வைக்கும் வழி எனக்குத் தெரியும்' என்று மிரட்டினான். தான் கேட்டதைச் "செலுத்துவது" முறையானதும் மலிவானதும் என்பது அவனது நியாயம். அவனிடமிருந்து தப்பி ஓடுவதற்கான வழி ஏதாவது இருக்கிறதா எனப் பார்த்தேன். இருண்ட வனம் தனது இரகசியங்களைத் தனக்குள்ளேயே புதைத்து வைத்துக்கொண்டிருக்கிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஓரிரு சூரியக் கதிர்கள்தான் இருண்ட காட்டுக்குள் இலைகளை ஊடறுத்து நெளிந்துகொண்டிருந்தன. எந்த அலறலும் அடுத்த மரம் வரைதான் கேட்கும். யாருமே எனது அலறலைக் கேட்டு வரப் போவதில்லை, யாருமென்னைக் காப்பாற்றப் போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது முந்தைய இழிவுகளை எதுவித எதிர்ப்புகளும் காட்டாமல் நான் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை. ஆனால் இப்போது எதிர்த்துப் போராடுவதென்று முடிவெடுத்துக் கொண்டேன். எனது வாழ்விற்காக நான் போராடப் போகிறேன். நானும் அவனும் எதிரெதிராக ஒருவர் முகத்தை ஒருவர் உற்றுப் பார்த்தவாறே நின்றுகொண்டிருந்தோம். பயிற்சி இராணுவத்தினர் தங்கள் பயிற்சிக் காலம் முடியும் வரை எந்தவிதமான பாலியல் தொர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்றொரு 'விதி' இருப்பது எனக்குத் தெரியும். நான் என் குரலில் ஒரு நெகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டு அவனிடம் 'நீ கேட்பதைக் கொடுப்பதற்கு எனக்கும் விருப்பம்தான் ஆனால் அதன் பின்விளைவுகளைப் பற்றியும் நீ யோசித்துப் பார்க்க வேண்டும். எனக்குச் சிபிலிஸ் நோயுண்டு. என்னுடன் பாலியல் தொடர்பு வைத்துக் கொண்டால் அது உன்னையும் தொற்றிக்கொள்ளும்' எனச் சொன்னேன். உடனேயே அவனின் பேச்சும் நடவடிக்கைகளும் தலைகீழாக மாறின. அவன் எனது வெளிப்படையான பேச்சிற்கு நன்றி கூடச் சொன்னான். மெல்ல மெல்ல என் மனம் பிரச்சினையிலிருந்து விடுபட்டு இலேசானது. அவன் என்னை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற பின்புதான் என்னை நடுக்கம் பிடிக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவின் வீடு நோக்கிச் செல்லும் வழி முழுவதும் நான் அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும் பயணித்தேன். அந்த இரவில் எனது அம்மாவின் அரவணைப்பில் அவரது மார்பு மீது தலைவைத்து ஒரு கைக் குழந்தையைப் போலத் தூங்கினேன். அது என்னவொரு நிம்மதியான உணர்வு! என்னவொரு உன்னதமான தருணம்! நான் ஏன் வீடு திரும்பினேன் என்று அம்மாக்கு நான் எதுவுமே சொல்லவில்லை. ஏனெனில் அம்மாவே தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்குள் அமிழ்ந்து கிடக்கையில் நான் எனது சுமைகளையும் உடனடியாகவே அவரின் தலையில் ஏற்றி வைக்க விரும்பவில்லை.தவிரவும் பிரிவதும் சேர்வதும் மறுபடியும் பிரிவதுமாய் நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த பரிதாப வாழ்க்கை உண்மையிலேயே அம்மாவையும் என்னையும் மனதால் முழுமையாக நெருங்க விடவில்லை, ஒரு நெருக்கமான உறவை எங்களால் வளர்க்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.37.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.37.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-116082116595006975?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/116082116595006975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=116082116595006975&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/116082116595006975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/116082116595006975'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/10/44.html' title='குழந்தைப் போராளி - 44'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115875154028073185</id><published>2006-09-20T13:24:00.000+02:00</published><updated>2006-10-03T07:49:23.623+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 43</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier33.10.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier33.7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;அடுப்பிலிருந்து நெருப்புக்குள் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;க&lt;/span&gt;ம்பாலா வந்து சேர்ந்தவுடனேயே அம்மாவைத் தேடிப் போனேன். ஓர் அதி பயங்கரமான ஆபத்து வளையத்திலிருந்து நான் மீண்டு வந்துவிட்டாலும் அந்தப் பயங்கரத்தின் வலியும் வடுவும் இன்னும் என்னுடனேயேயிருந்தன. என் மனம் வேதனையால் குமைந்துகொண்டிருந்தது. என்னைக் கண்டதுமே அம்மா உடைந்துபோய் அழத்தொடங்கினார். அம்மா அழுவதைக் கண்டதும் நான் அதுவரை பொத்தி வைத்திருந்த வலியும் ஆத்திரமும் கழிவிரக்கமும் வெறுப்பும் வெடித்து என்னை உலுக்கி விட்டன. நான் அலறிக்கொண்டே அங்குமிங்குமாகக் குதிக்கத் தொடங்கினேன். என் கால்களால் தொம் தொம்மென நிலத்தை உதைத்துக்கொண்டே என் கைகளால் என் முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டேன். அம்மா அழுவது எனக்குப் பிடிக்கவில்லை. அதுவும் அவர் எனக்காக அழுவது அறவே பிடிக்கவில்லை. எனது நிலை அம்மாவை அதிர்ச்சியில் உறைய வைத்தது. எங்கே அம்மா மூர்சையாகி விழுந்துவிடுவாரோ எனப் பயந்துபோய் என்னையே நான் தணித்துக்கொண்டேன். ஆனாலும் என் வலி இலேசில் தணிவதாயில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அம்மாவின் வீட்டில் சிதைக்கப்பட்ட ஆன்மாவுடன் கெட்ட கனவுகளுக்குள் நொறுங்கிப்போய்க் கிடந்தேன். ஒரு மாதத்தின் பின்பு நான் மெல்ல மெல்லப் பழைய நிலைக்குத் திரும்பினேன். கோட்பிரியின் இழி செயல்கள் என் மனதில் ஏற்படுத்தியிருந்த காயங்கள் மெதுவாக ஆறி வந்தன. கெட்ட கனவுகளும் இப்போது அதிகமாக என்னை வருத்துவதில்லை. காலம் தான் மனக் காயங்கஙளை ஆற்றும் மாமருந்து என்பார்கள். என் முன்னே நீண்டு கிடந்த இருள் வெளியினுள் அம்மா ஒரு தீக்குச்சியைக் கிழித்துப்போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா தனக்கு ரொனால்ட் என்றொரு இராணுவ அதிகாரியைத் தெரியுமென்றார். அந்த அதிகாரி ஏதாவது ஒரு வழியில் எனக்கு உதவக்கூடும் என அம்மா நம்பினார். ஒரு மாலை நேரத்தில் அந்த இராணுவ அதிகாரியைப் பார்க்க நான் அம்மாவுடன் சென்றிருந்தேன். நானும் அம்மாவும் அதிகாரி ரொனால்டிற்காகக் காத்திருந்தபோது ரொனால்டின் மெய்க்காப்பாளனாயிருந்த ஒன்பது வயதேயான சிறுவன் குசைன் ரொனால்டின் வீட்டின் முன்னே அங்குமிங்கும் நடை போட்டுக்கொண்டிருந்தான். குசைன் தன் பிஞ்சுக் கால்களால் சிறு அடிக ளாக எடுத்து வைத்தாலும் மிக விறைப்பாக எங்கள் முன்னே நடந்து சென்றான். அவனது இராணுவ நடை ஒரு களம் கண்ட போராளியின் நடையை ஒத்திருந்தது. ரொனால்ட் தான் விரைவிலேயே தனது படைப்பிரிவுக்குத் திரும்பவிருப்பதாகவும் அங்கே 'Kabamba Training Wing'ல் என்னைத் தன்னால் சேர்த்துவிட முடியுமென்றும் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னபடியே ஒரு வியாழக்கிழமை ரொனால்டும் அவரது மெய்க்காப்பாளன் குசைனும் அவரது மனைவி யுஸ்ரினும் எங்களது வீட்டிற்கு வந்து என்னை அழைத்துச் சென்றனர். முதலில் பஸ் பயணம் அதன்பின் இரயில் பயணமென பாதி உகண்டாவைச் சுற்றியதன் பின்பாக நாங்கள் கபாம்பாவை வந்தடைந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாவது வாரம் எல்லாம் சுமுகமாகவே இருந்தது. ஒவ்வொரு நாள் காலையிலும் படுக்கையில் மூத்திரம் பெய்ததற்காக ரொனால்டின் சிறிய மெய்காப்பாளன் யுஸ்ரினிடம் அடி வாங்குவான். நித்திரையில் மூத்திரம் போனதற்காக ஒரு முறை புருசனும் பெண்சாதியுமாகச் சேர்ந்து குசைனை உதைத்தார்கள். ஓர் உறுதியான குழந்தைப் போராளி சாதாரண பெண்ணால் தண்டிக்கப்படுவதைக் காண எனக்கு வேதனையாயிருந்தது. குசைனில் நான் என்னையே கண்டேன். படுக்கையை ஈராமாக்கியதற்காக நானும் செம்மையாக உதைபட்டது என் நினைவுக்கு வந்தது. வளர்ந்தவர்களையும் விடத் தீவிரமாகவும் மனவுறுதியுடனும் போராடும் போராளிக் குழந்தைகள் கூடச் சராசரிக் குழந்கைளைப் போலவே படுக்கையை நனைக்கத்தான் செய்வார்கள். நான் குசைனுக்காகப் பரிதாப்பட்டேன். அவனுக்குக் கிடைக்கும் தண்டனைகள் என்னுள் பழைய ஞாபகங்களை உசுப்பிவிட்டன. எனக்கு யுஸ்ரின் மீது கோபம் மூண்டதெனிலும் கோபத்தினை அடக்கி வைக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். குழந்தைப் போராளிகளைக் கேவலமாக நடத்துவது தொடர்பான எனது அனுபவங்கள் என் ஞாபகத்தில் அழியாமல்தான் இருந்தன. எனது குழந்தைப் பருவத்தில் நான் நடத்தப்பட்ட விதமும் இங்கு குசைன் நடத்தப்படும் விதமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைதான். எனினும் என்னால் என்ன செய்ய முடியும்? இப்போது என்னிடம் எந்த அதிகாரமுமில்லை. நான் எந்தவிதப் பலமுமற்றவள். நாங்களே எங்களைப் பலமில்லாதவர்கள் என உணர்வது மிக மிக இழிவானது. இந்த இழிவுணர்வே இப்படியான சந்தர்ப்பங்களில் எங்களை மேலும் மேலும் தாழ்த்திவிடும். என்னால் குசைனுக்கு எந்த உதவியையும் செய்ய முடியவில்லை என்பதை வெட்கத்துடன் நான் ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு கிழமைகள் கழிந்து போயின. ரொனால்ட் ஏன் இன்னும் என்னை இராணுவத்தில் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி என்னை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. நான் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இது பற்றி ரொனால்டிடம் கேட்டபோது நான் அவரது மெய்காப்பாளர்களில் ஒருத்தியாக இருப்பதாகவும் அப்படியே இராணுவத்தில் பதியப்படுமென்றும் சொன்னார். நான்கு கிழமைகள் போயின. யுஸ்ரின் எனக்கும் குசைனுக்கும் ஏவும் சில்லறை வேலைகளை இராணுவத்தினளான என்னால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. இராணுவ நடைமுறைகளுக்கும் அவள் ஏவும் வேலைகளுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லாதிருந்தது. யுஸ்ரினிற்கு நாள் முழுதும் கட்டிலில் கிடப்பதைத்தவிர வேறொன்றிலும் நாட்டமில்லை. அதுவும் அலுத்துவிட்டால் வீட்டிம் முன்னே ஒரு நாற்காலியைப் போட்டுக்கொண்டு உட்காருவாள். கண்ணாடியில் தன் முகச் சுருக்கங்களை ஆராய்ந்துகொண்டே மணிக்கணக்கில் அசையாது உட்கார்ந்திருப்பாள். நாளாக நாளாக எனக்கு அவள் மீதான வெறுப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது. யாராவது அவளைச் சுட்டுக் கொன்றால் கூட நன்றாயிருக்குமென எண்ணிக்கொண்டேன். முன்பு பாட்டி வீட்டிலும் எனக்கு இதே வெள்ளிடிதானே!&lt;br /&gt;&lt;br /&gt;எனது வழமைப்படி நான் இங்கிருந்து ஓடிப்போய் இராணுவத்தின் இன்னுமொரு படையணியில் சேர்ந்திருப்பேன். அது மிகவும் இலகுவான காரியமும் தான். முன்பே நான் சொன்னது போல நாங்கள் எந்தப் பதிவுகளிலும் இல்லாதவர்கள். ஆனால் இந்தமுறை நிலைமை வேறு மாதிரியிருந்தது. இங்கே எண்ணிக்கையில் குறைந்தளவே இராணுவத்தினர் இருந்ததால் யாராவது ஒருவர் காணாமற் போனாலும் உடனே தெரிந்துவிடும். யுஸ்ரின் வீட்டு அடிமையாய் நான் இருக்க விரும்பாததால் ஏதாவதொரு மாற்று வழியைக் கண்டுபிடிப்பதில் நான் மும்முரமாக ஈடுபட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யுஸ்ரின் தனது பெற்றோரைப் போய்ப் பார்த்து வருவதென முடிவு செய்தாள். இந்தச் செய்தி எனக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்தது. அவளையும் அவளது மூஞ்சியையும் கொஞ்ச நாட்களுக்கு நான் பார்க்க வேண்டியிருக்காது. அவள் ஒரு வாசலால் வெளியே செல்ல மறு வாசலால் என்னைத் தேடி ஆபத்து உள்ளே நுழையலாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ரொனால்ட் வீடு திரும்பியதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் முள்ளின் மீது நிற்பவள் போல் அவரின் முன்னே நின்றிருந்தேன். சிறிது நேரம் இப்படியே போயிற்று. பின்பு அவர் குசைனை அழைத்து ஏதோ சொல்லி வெளியே அனுப்பினார். அவன் வெளியே போனதும் வாசற் கதவைத் தாளிட்டார். நான் ரொனால்டிடம் வசமாகச் சிக்கியிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொண்டு எனது சகல அங்கங்களும் ஒடுங்கிப்போயின. நான் முன்பு யாருடனாவது படுத்துக்கொண்டேனா என ரொனால்ட் அறிய விரும்பினார். எனது இதயத் துடிப்பு எகிறியது. அவருக்கு சொல்வதற்காக நான் ஒரு பதிலைக் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே ரொனால்ட் என்னைத் தூக்கிப் போய்க் கட்டிலில் எறிந்தார். நான் உதவி கோரிக் கூச்சலிட்டேன். அவரென்னை மெளனமாக்கினார். தனது அருவருப்பான கையால் அவர் எனது வாயைப் பொத்திப் பிடிக்க நான் மூச்சுத் திணறிப்போனேன். தனது வேலை முடிந்ததும் எழுந்துபோன அவர் கட்டிலில் கேவிக்கொண்டிந்த என்னைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.&lt;br /&gt;குசைன் திரும்பி வந்தபோது நான் கட்டிலின் ஒரு மூலையிலிருந்து சத்தமில்லாமல் அழுதுகொண்டிருந்தேன். ரொனால்டினது அழுக்குக் கை என் வாயை இன்னும் பொத்தியிருப்பதுபோல நான் உதடுகளை இறுக மூடிக்கொண்டு அழுதேன். குசைன் எனக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக என் தோளின் மீது கையை வைத்தான். அவனுடைய தொடுகை என்னுள் அமுங்கிக் கிடந்த அழுகையை வெடித்துச் சிதறப்பண்ணியது. நான் அவனிடம் ஓலமிட்டு அழத் தொடங்கினேன். எனது தலை, முலை, யோனி எல்லாவற்றிலிருந்தும் வலி கிளம்பியது. நடந்து முடிந்த சம்பவத்தை நினைக்கும்போது அவமானம் என் முகத்தில் ஓங்கி அறைந்தது. குசைன் என்னைத் தேற்றியபோதும் என்னால் அழாமலிருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நடந்ததைச் சொன்னபோது அதைப் புரிந்துகொண்ட விதத்தில் அவன் தன் வயதுக்கு மீறிய மன முதிர்சியுடையவன் என்பதைக் குசைன் வெளிப்படுத்தினான். அந்தச் சிறிய 'முகண்டா'ச் சிறுவன் நான் தைரியமாக இருக்கவேண்டுமெனச் சொன்னான். இதுபற்றி இங்கே எவரிடமாவது முறையிடுவதால் எனக்கு எந்த நியாயமும் கிடைக்கப்போவதில்லை. பெண்கள் விடயத்தில் அநேகமாக எல்லா அதிகாரிகளுமே மிக மோசமானவர்களாயிருந்தார்கள். நான் இனிமேலும் இங்கிருக்க முடியாது. நாளைக் காலையில் நான் இங்கிருந்து ஓடிவிடப்போவதாகக் குசைனிடம் சொன்னேன். குசைனைத் தனியனாக இந்த மிருகங்களிடம் விட்டுவிட்டுச் செல்வது எனக்கு வருத்தமளித்தது. ரொனால்டிலும் பார்க்க உயர் தரத்திலுள்ள ஒரு இராணுவ அதிகாரியிடம் சென்று அவரிடம் மெய்க்காப்பாளனாகச் சேர்ந்துகொள்ளுமாறு குசைனுக்கு ஆலோசனை சொன்னேன். தன்னிலும் வலியவர்களிடம் ரொனால்டால் முண்ட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் ரொனால்ட் வெளியே சென்ற பின் நான் நல்ல மனிதரென நம்பிய நாற்பது வயதுடைய ஒரு சார்ஜனைப் போய்ப் பார்த்தேன். நான் கண்ணீருடன் நேற்று நடந்தவற்றை விபரித்தபோது அவர் துயரம் தோய்ந்த முகத்துடன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் இராணுவப் படிநிலையில் ரொனால்டுக்கு கீழேயுள்ளவர். அவருக்கு ரொனரல்டிடம் பயமிருந்தது. எனினும் அந்த உன்னதமான மனிதர் எனக்கு உதவுவதென்று முடிவெடுத்தார். அவர் என்னை அவரது மனைவியிடம் அழைத்துச் சென்றார். எனக்கு உதவினால் தாங்களும் ஆபத்தில் சிக்க வேண்டியிருக்குமென முதலில் அவரது மனைவி தயங்கினாலும் அவரது அச்சத்தை அவரது கருணை வென்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சார்ஜன் வீட்டில் பொந்து போன்ற ஒரு சிறிய அறையுள் நான் ஒளிந்திருந்தேன். அடுத்த நாள் காலையில் எனக்கு உணவு கொண்டுவந்த சார்ஜனின் மனைவி ரொனால்ட் என்னை மும்முரமாகத் தேடிக்கொண்டிருப்பதாகவும் எக்காரணத்தைக் கொண்டும் ஒளிந்திருக்கும் அறையை விட்டு வெளியே வர வேண்டாமெனவும் சொன்னார். அன்று மாலையே என்னைத் தேடி ரொனால்ட் சார்ஜனின் வீட்டிற்கு வந்தார். நான் அங்கே வரவேயில்லை எனச் சார்ஜன் ரொனால்டிடம் சாதித்தார்."நீ சொல்வதை நம்ப முடியாது நான் உனது வீட்டைச் சோதனை போடப்போகிறேன்" என ரொனால்ட் சார்ஜனிடம் சத்தம் போடுவதை நான் கேட்டேன். கட்டிலின் அடியில் ஒளிந்துகொண்டிருந்த நான் ரொனால்ட் ஒவ்வொரு அறையாகப் புகுந்து வரும் காலடி ஓசையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். என் முன்னால் அவரது பூட்ஸ் கால்கள் நின்றன. அச்சத்தால் என் இரத்தம் தண்ணீராய்ப் போனது மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு இமைகளைக் கூட அசைக்காமற் கிடந்தேன். தேடுதலில் தோல்வியுற்ற ரொனால்டின் கால்கள் மெல்லத் திரும்பின. அந்த நரகத்தில் கூடக் ஒருகுருட்டு அதிர்ஷ்டம் என்னோடிருந்தது. நான் சார்ஜனின் வீட்டுக்குத் தஞ்சம் தேடி வந்திருந்த மூன்றாவது நாள் காலையில் சார்ஜன் எனக்குக் கொஞ்சப் பணம் தந்து என்னை எனது அம்மாவிடம் அனுப்பி வைத்தார். புகையிரத நிலையம் வரைக்கும் எனக்குப் பாதுகாப்பாகத் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஓர் இளைய இராணுவ வீரனையும் அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.34.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.34.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115875154028073185?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115875154028073185/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115875154028073185&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115875154028073185'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115875154028073185'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/09/43.html' title='குழந்தைப் போராளி - 43'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115823117009556314</id><published>2006-09-14T12:50:00.000+02:00</published><updated>2006-09-14T12:52:50.100+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 42</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier36.4.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier36.3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc33;"&gt;தண்டனை முகாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;எ&lt;/span&gt;ன்னுடைய அதிர்ஷ்டம், அந்த இராணுவ அதிகாரி என்னை நினைவில் வைத்திருந்தார். என்னைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்தவர் உடனடியாகவே தனது சிறு படையணியில் என்னைச் சேர்த்துக்கொண்டார். எல்லையைக் கடக்கும் வாகனங்களைச் சோதனையிடுவதுதான் இந்தப் படையணியின் வேலை. அங்கிருந்த இராணுவத்தினருக்கு அரசாங்கம் சம்பளம் கொடுப்பதில்லை. ஆனாலும் பணம் சம்பாதிக்கும் பல யுக்திகளை இராணுவத்தினர் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். நானும் சிறிது நாட்களிலேயே பணம் "சம்பாதிக்க"த் தொடங்கிவிட்டேன். கடத்தல்காரர்கள் எல்லையைக் கடக்கும்போது கண்டுகொள்ளாமலிருந்தால் பணம் கிடைக்கும். பணமென்றால் கொஞ்ச நஞ்சமல்ல! நிறையப்பணம்! பதின்மூன்று வயதுப் பெண்ணான நான் அதை எவ்வாறு செலவு செய்வது? நான் எனது பணம் முழுவதையும் கோழிக்கே செலவழித்தேன். உகண்டாவில் கோழி மாமிசம் விலை கூடிய உணவு. காலை-மதியம்-மாலை என மூன்று வேளையும் நான் கோழியாகவே தின்று தீர்த்தேன். என் பணத்தைக் கோழி தின்றது. ஆத்திர அவசரத்துக்குத் தேவையென்று ஒரு செப்புச் சல்லியைக் கூட நான் சேமித்து வைக்கவில்லை ஏன் சேமிக்க வேண்டும்? எனது நாட்கள் நன்றாகத்தானே கழிந்துகொண்டிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;எனது புதிய இனிய வாழ்க்கையில் நான் மெல்ல மெல்ல மூழ்கிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு நாள் நாங்கள் எல்லோருமே படையணியின் தலைமைக் காரியாலயத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டோம். அங்கே தளபதி டேவிட் தின்யென்புஸா எங்களை விசாரணை செய்தார். விசாரணையின் முடிவில் எங்கள் மீதான இலஞ்சக் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணமாயின. காட்டுப் பகுதியான நாகசொன்கொராவிலிருந்த தண்டனை முகாமிற்கு நாங்கள் அனுப்பப்பட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனை விதிக்கப்பட்ட எங்களது குழு டேவிட் தின்யென்புஸாவினதும் அவரது துணைத் தளபதிகளினதும் நேரடிக் கண்காணிப்பில் இங்கு கொண்டுவரப்பட்டது. நாங்கள் ஆறு மாதங்களை இந்தத் தண்டனை முகாமில் கழிக்க வேண்டும். காலை ஆறு மணியிலிருந்து மாலை ஆறுமணி வரை எலும்புகளை நொறுக்கும் கடினமான பயிற்சிகளில் நாங்கள் ஈடுபடுத்தப்பட்டோம். எங்களக்கு வழங்கப்படும் தண்டனைகளை, பயிற்சிகளை டேவிட்டே நேரடியாக மேற்பார்வை செய்தார். அவர் தண்டனை முகாமுக்கும் தலைமை முகாமுக்குமாகப் போய் வந்துகொண்டிருந்தார். நாங்கள் மைதானத்தில் தொங்கிய தலைகளுடன் அணிவகுத்து நிற்கையில் டேவிட் எங்களது தலைகளுக்கு மேலாகத் தனது பார்வையைச் செலுத்தியபடி இராணுவத்தினர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளைப் பற்றி எங்களுக்குப் 'போதனை' செய்தார். ஒழுங்கு விதிகளை மீறினால் இவ்வாறான தண்டனைகள் தான் கிடைக்குமென்றார். எங்களின் முகங்களைப் பார்க்கக்கூட அவர் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவரின் சொற்கள் கற்களைப் போல எங்களைத் தாக்கின. எந்தவித ஈரலிப்புமில்லாத இந்த நிலம் போலவே இங்கே சொற்களுமிருந்தன. எங்களின் ஓர் எதிர் வார்த்தையே எங்களின் இறுதி வார்த்தையாவதற்கு இங்கே நிறையச் சாத்தியக்கூறுகளிருந்தன. இந்த அதிகாரிகளிற்கு எங்களது வாழ்கையின் மேல் எல்லையற்ற அதிகாரங்களிருந்தன. நாங்கள் மனிதர்களாக அல்லாமல் சடப்பொருட்கள் போல கையாளப்ப்பட்டோம். ஆம்! நாங்கள் மயிராலும் தோலாலும் போர்த்தப்பட்ட சடப்பொருட்கள். இங்கே எவராவது சுயமாகச் சிந்திக்க முயன்றால் அதற்காக அவர் தனது உயிரைக் கூட விலையாகக் கொடுக்க நேரிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதிகாரிகள் துன்புறுத்தலிலும் சித்திரவதைகளிலும் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள். தண்டனை முகாமிலிருந்த பெண் இராணுவத்தினரை அவர்கள் மிக மோசமாக நடத்தினார்கள். பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக விதம் விதமான தண்டனை முறைகளை உருவாக்கியிருந்தார்கள். பெண் இராணுவத்தினர் பயிற்சிகளில் மட்டும் தளபதிகளையும் அதிகாரிகளையும் திருப்திப்படுத்தினால் போதாது. அவர்கள் படுக்கைகளிலும் தங்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்று தளபதிகளும் அதிகாரிகளும் இயல்பாகவே எதிர்பார்த்தனர். தளபதிகளிடமும் அதிகாரிகளிடமும் அதிகாரமிருந்தது. அவர்களுக்கு என்ன தேவையாயிருந்ததோ அதை அவர்கள் வெகுசுலபமாக எடுத்துக்கொண்டனர். அவர்களது அடிமைகள் அவர்களது தேவையை நிறைவேற்றி வைத்தனர். இராணுவத்திலிருந்த மற்றைய ஆண்களுக்கும் பெண்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியும். அவர்கள் எங்களை "Chakula cha wakubwa guduria" என அழைத்தனர். இதன் பொருள் "அதிகாரிகளின் எச்சில் கலயங்கள்" என்பதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாள் முழுவதும் கடுமையான பயிற்சியின் பின்பு மாலையில் நெருப்பைச் சுற்றி வட்டமாக உட்கார்ந்திருந்தோம். தூரத்தில் எங்களை நோக்கி கோட்பிரி என்ற இராணுவ அதிகாரி வந்துகொண்டருப்பது தெரிந்தது. அவரது நடையே அவரைக் காட்டிக்கொடுத்தது. கோட்பிரிக்கு முப்பது வயதிருக்கலாம். மிகுந்த பலசாலியான அவரை எதிரிகளின் துப்பாக்கி சற்று ஊனமாக்கியிருந்தது. அவர் துப்பாக்கிக் காயத்தால் காலை நொண்டிக்கொண்டுதான் நடப்பார். எங்களருகே வந்ததும் கோட்பிரி தனது விரலைச் சொடுக்கி என்னைத் அழைத்தார். "நீ உன்னுடைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு என்னுடைய குவாட்டர்ஸுக்குப் போ!" எனக் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்குப் பணிவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் எழுந்து நடக்கத் தொடங்கினேன். அவரது மெய்காப்பாளர்கள் என்னைத் தொடர்ந்து வந்தனர். அவரது குவாட்டர்ஸுக்கு வந்தபோது நான் தங்க வேண்டிய அறையை அவரது உதவியாளன் எனக்குக் காண்பித்தான். நான் திகிலுடன் அந்த அறையில் படுத்திருந்தபோது கோட்பிரி கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். நான் படுக்கையிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்து நின்றேன். கோட்பிரி என்னைத் தன்னுடன் வரும்படி அழைத்தார். நான் சுவரைப் பார்த்தவாறு அசையாது நின்றேன். சிறிது நேரம் காத்திருந்து விட்டு அவர் போய்விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தநாள் காலையில் கோட்பிரி மறுபடியும் எனது அறைக்கு வந்தார். " நீ ஒவ்வொரு நாள் இரவிலும் எனது படுக்கையறையில் இருக்க வேண்டும்!" என என்னைப் பார்த்து உறுமினார். நான் அவரிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதைக் காலையிலேயே சிவந்திருந்த அவரது கண்கள் சொல்லின. ஏதோ பெரிய படையணிக்கே கட்டளையிடுவதைப் போல "கட்டளையைச் சரியாக விளங்கிக்கொண்டாயா?" என அவர் என்னிடம் அடித்து முழங்கினார். நான் அவரின் முன்னே ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு நின்றிருந்தேன். பின்பு மெல்லத் தலையசைத்து "ம்" எனக் கூறிவிட்டுக் காலைப் பயிற்சிக்குப் போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையில் பயிற்சி முடிந்ததும் கோட்பிரி என்னைச் சந்தித்தார். என்னை அவரது படுக்கையறைக்குப் போய்க் காத்திருக்குமாறு கட்டளை பிறந்தது. அவரின் படுக்கையறையில் தரை முழுவதும் பொருட்கள் அலங்கோலமாகப் பரவிக்கிடந்தன. அவற்றுக்கிடையே ஒரு 'பயனைட்' கத்தியும் கிடந்தது. நான் கத்தியை எடுத்து கட்டில் மெத்தையின் அடியில் மறைத்து வைத்துக்கொண்டேன். நான் அந்தக் கட்டிலின் மீது சாய்ந்தபோது என்மீதே எனக்கு ஆத்திரமாயிருந்தது, அருவருப்பாயிருந்தது. கோட்பிரி என்மீது பாய்ந்த போது "தூக்கத்திலேயே நீ சாகப் போகிறாய் நாயே" என மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.ஆனால் அவரைப் பற்றிய பயம் என்னை விட்டு விலகவேயில்லை. அவருக்கெதிராகக் கத்தியை எடுக்கும் துணிவும் எனக்கு வரவில்லை. அந்த நீண்ட கத்தி கோட்பிரியை உடனடியாகக் கொல்லக் கூடியதுதான். ஆனால் முதல் குத்தே சரியாக விழாவிட்டால்? காலையும் வந்தது, நான் எதையுமே செய்யவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வாரங்களின் பின்பு எங்கள் படையணிக்குப் புதிய தலைவராக கப்டன் சாம் வசாவா பலிகரியே வந்து சேர்ந்தார். அவரின் மெய்காப்பாளர்களைச் சிநேகிதம் பிடிக்க நான் பெரும் முயற்சிகளைச் செய்தேன். முயற்சி திருவினையாக்கியது, ஒரு மெய்காப்பாளனின் நட்பும் எனக்குக் கிடைத்தது. வசாவா கம்பாலாவிற்குச் செல்லவிருக்கிறார் என அந்தப் புதிய சிநேகிதன் எனக்குத் தகவல் தந்தான். என்னை இந்த நாகசொன்கொரா தண்டனை முகாமிலிருந்து எப்படியாவது வெளியே அழைத்துச் செல்லும்படி நான் அவனிடம் மன்றாடினேன். தன்னால் முடிந்தளவு தான் முயற்சிப்பதாக அவன் எனக்கு வாக்குத் தந்தான். இன்னொரு மோசமான இரவை கோட்பிரியுடன் கழித்த பிறகு காலையில் வசாவாவின் இருப்பிடத்திற்குப் போனேன். மெய்காப்பாளர்கள் பிரயாண ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தனர்.என்னுள் மகிழ்சி கரை புரண்டோடியது. எனக்காகக் காத்திருந்த எனது சிநேகிதன் என்னைக் கண்டதும் பரபரப்புடன்"வாகனத்தினுள் தாவிக்கொள்!" என்றான். நான் எனது எல்லாப் பலங்களையும் திரட்டி வாகனத்துள் ஒரே தாவாகத் தாவி விழுந்தேன். சில நிமிடங்களில் கப்டன் வசாவாவின் வாகனத் தொடரணி நாகசொன்கொராவிலிருந்து கம்பாலா நோக்கிப் பயணப்பட்டது.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.32.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.32.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115823117009556314?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115823117009556314/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115823117009556314&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115823117009556314'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115823117009556314'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/09/42.html' title='குழந்தைப் போராளி - 42'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115695237008512716</id><published>2006-09-03T20:20:00.000+02:00</published><updated>2006-09-14T12:45:28.966+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 41</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier33.8.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier33.5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff6600;"&gt;மீண்டும் தப்பியோட்டம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;நி&lt;/span&gt;ம்மதியற்ற, தூக்கமுமற்ற இரவுக்குப்பின் மீண்டும் நான் ஓடத் தொடங்கினேன். காலை ஐந்து மணிக்கே நான் எழுந்து உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டபோது தம்பி ரிச்சட் அறையின் ஒரு மூலையில் உறங்கிக்கொண்டிருந்தான். வார்தைகளின்றி என் இருதயத்தால் அவனுக்கு நன்றி கூறினேன். சில விநாடிகளிலேயே பரந்த வானத்தின் கீழே நான் நின்றுகொண்டிருந்தேன். சூரியன் இன்னும் வெளியே வரவில்லை. நான் ஓட்டமும் நடையுமாகப் பிரதான வீதியை நோக்கிப் போனேன். வழியில் யாரையும் சந்தித்து விடக்கூடாது என்பதற்காகச் சாலையால் நடந்து செல்லாமல் காட்டுக்குள் இறங்கி நடந்தேன். அடர்ந்த பற்றைக்காடு என்னுள் ஒளிந்திருந்த பயத்தினைக் கிளறிவிட்டது. பயத்தின் காரணமாக மூளையற்ற முயலைப்போல நான் தாறுமாறாக ஓடாமலிருக்க என்னையே நான் பெரும் பிரயத்தனப்பட்டுக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரதான வீதிக்கு வந்து ஏதாவது வாகனம் வருமா என்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு சோமாலிய லொறிக்காரர் என்னை ஏற்றிகொண்டார். அவருக்குப் பெருமை பிடிபடவில்லை. என்னைப் போன்ற ஓர் இராணுவத்தினளுக்கு உதவுவதில் அவருக்கு ஒரு மகிழ்ச்சி, மிகவும் உற்சாகமாயிருந்தார். அவர் என்னையும் ஒரு சோமாலியப் பெண் என்றே நினைத்திருக்க வேண்டும். வழியில் பொலிஸாரால் ஏற்படும் தொல்லைகளிலிருந்து எனது இராணுவச் சீருடை அவரைப் பாதுகாக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே மிகவும் களைத்துப் போயிருந்த சாரதி தான் தூங்கிவிடாதிருக்க என்னுடன் ஓயாது பேசிக்கொண்டேயிருந்தார். மனித நடமாட்டமேயற்ற பற்றைக் காடுகளுக்குள்ளாலும் வரண்ட நிலப்பரப்புகளுக்குள்ளாலும் லொறி ஓடிக்கொண்டிருந்தது. நேரமாக நேரமாகச் சூரியன் உச்சத்தில் தகிக்கத் தார்சாலை உருகி மிருதுவாய் மாறிவிட்டிருந்தது. அதோ 45வது படையணியின் தலைமையகம் தெரிகிறது; கூடவே என்னை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்தும் என் மனக் கண்ணில் தெரிகிறது. அப்பா இந்த விடயத்தை இலேசில் விடமாட்டார். அவர் இங்கு வந்து படைத் தலைமை அதிகாரியைச் சந்தித்து என்னை ஒரு திருடி எனக் குற்றம் சாட்டாமல் விடப்போவதில்லை. தலைமையகத்தில் இறங்காமல் தொடர்ந்து பயணித்துக் 'காபேலி'வரை சென்றேன். அங்கே உகண்டாவிற்கும் ருவாண்டாவிற்குமான எல்லையில் பணியிலிருந்த ஓர் இராணுவ அதிகாரியை எனக்குத் தெரியும்.அவர் எல்லையில் கள்ளக் கடத்தலைத் தடுக்கும் பொறுப்பிலிருந்தார். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.27.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.27.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115695237008512716?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115695237008512716/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115695237008512716&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695237008512716'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695237008512716'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/09/41.html' title='குழந்தைப் போராளி - 41'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115695184912352143</id><published>2006-09-03T20:17:00.000+02:00</published><updated>2006-09-03T20:19:56.466+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 40</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier33.9.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier33.6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#999900;"&gt;பழிவாங்கும் திட்டம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff9900;"&gt;அ&lt;/span&gt;ன்றே நான் முகாமிற்குத் திரும்பினேன். என் கோபம் இன்னும் அடங்கவில்லை. 'ஸாடிஸ'த்தனமான அப்பாவின் துன்புறுத்தல்களை என்னால் எளிதில் மறக்க முடியவில்லை. எனது ஞானஸ்நானத்தின் போது நான் மிகவும் நேசித்த, எந்தக் குற்றமுமே செய்திராத எனது ஆட்டுக்குட்டிகளை அவர் வெட்டியதையும் நான் மறக்கவில்லை. அப்போது - எனது ஆட்டுக் குட்டிகளை வெட்டும்போது - எனக்கொரு பாடம் கற்பிப்பதாக அவர் நினைத்திருக்கலாம். ஆனால் இப்போது என்னிடமிருந்து அவர் பாடம் கற்றுக்கொள்ளப் போகிறார். இந்தப் பாடத்தின் முடிவு எனது அம்மாவுக்கு நன்மையைக் கொண்டுவரும். எனது நம்பிக்கைத் துரோகத்துக்கு நான் செய்யும் சிறிய பிராயச்சித்தமாகவுமிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் காலையில் நான் முகாமிற்கு வெளியே புல்வெளியில் உட்கார்ந்திருந்தேன். உடனடியாகப் போர் அபாயம் ஏதும் எங்களுக்கில்லை. யுத்தத்திற்கான தயார் நிலையில் நேரத்தைக் கடத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான். இங்கும் பிரச்சினைகள் இல்லாமலில்லை. அவ்வப்போது ஏதாவது பிரச்சினைகள் வந்துகொண்டேயிருந்தன. நான் எனது துப்பாக்கியோடு புல்வெளியில் அமர்ந்திருந்தபோது பிரச்சினை என்னைத் தேடி வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் படையணியில் எனது பரமவைரியாய் இருந்தவன் மூஞ்சியையும் தூக்கி வைத்துக்கொண்டு ஏதோ தானே உகண்டாவின் ஜனாதிபதி என்ற தோரணையில் என் பக்கம் வந்தான். நான் உட்கார்ந்திருக்கும் இடம் தனக்கு வேண்டுமென்றும் என்னை எழுந்து போகும்படியும் சொன்னான். நான் கோபத்துடன் "முடியாது! நீ வேறு இடத்தைத் தேடிக்கொள்" என்றேன். புல்வெளியில் நிறையவே இடங்களிருந்தன. அவனது மூக்கை உடைத்து இரத்தம் காண வேண்டுமென்று நினைத்தேன். அவன் என்னைவிட வயதிலும் வலிமையிலும் கூடியவன், அவன் எனது கையைப் பிடித்துத் தூக்கி என்னை இழுத்தெறிந்துவிட்டு எனது இடத்தில் உட்கார்ந்துகொண்டான். என்னைப் போலவே அவனும் உதவிக் கோப்ரல் தான். ஆனால் நான் தனக்கு மரியாதை தரவேண்டுமென அவன் சொன்னான். இப்போது என் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. என் கையிலுள்ள துப்பாக்கியைப் பற்றிய பயம் கூட அவனிடமில்லை."வயதில் பெரியவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பது பிழையல்ல" என்னை ஆத்திரமூட்டுவதற்கென்றே அவன் இந்த வார்தைகளைக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னை யாரென்று இவன் நினைத்திருக்கிறான்? கிராமத்து முதியவர் என்றா இவன் தன்னை நினைத்துக்கொண்டிருக்கிறான்? நான் கடுஞ் சினத்துடன் அவனை உடனடியாகவே அந்த இடத்திலிருந்து போகும்படி சொன்னேன். போகாவிட்டால் இனி நான் பேசமாட்டேன்,எனது துப்பாக்கி தான் பேசும் என்றும் சொன்னேன். அவன் எனது எச்சரிக்கையைக் கணக்கெடுக்கவேயில்லை.அந்த இடத்திலேயே கல்லுப்போல உட்கார்ந்திருந்தான். எச்சரித்தது போதும் இனிச் சொன்னதைச் செய்ய வேண்டியதுதான். துப்பாக்கியை அணைத்து அவன் காலுக்கு வெடி வைத்தேன். அவனது காலிலிருந்து இரத்தம் கொப்பளிக்க அவன் பயங்கரமாக அலறிக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். ஆனால் அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. அடுத்த கணத்திதில் இராணுவப் பொலிசார் என்னைச் சுற்றி வளைத்து எனது துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டனர். எனது பரமவைரியை முதலுதவி அறைக்கும் என்னைப் படையணியின் துணைத் தளபதியின் அலுவலகத்திற்கும் தூக்கிச் சென்றனர். நான் 45வது படைப்பிரிவில் சேர்ந்த நாளிலிருந்தே அந்தத் தலைக்கனம் பிடித்தவன் எப்படியெல்லாம் என்னைச் சீண்டினான், ஆத்திரமூட்டினான் என்பதை நான் துணைத் தளபதிக்கு விளக்கிச் சொன்னேன். எனது தரப்பு நியாயங்களைக் கேட்ட பின்பு துணைத் தளபதி என்னைக் குப்பைக் குழியில் போட்டு உருட்டி எடுக்கும்படி இராணுவப் பொலிசாருக்குக் கட்டளையிட்டார். தண்டனை நிறைவேற்றப்பட்ட பின் நான் ஒரு காட்டுப் பன்றிக்குட்டியைப் போல அலங்கோலமாக நின்றிருந்தேன். எனது செய்கைக்குத் தகுந்த காரணமிருந்ததென முடிவெடுத்த துணைத் தளபதி என்னைச் சிறைக்கு அனுப்பவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட எனது துப்பாக்கியை ஒரு மாதம் கழித்துத்தான் திருப்பித் தருவார்கள். ஆயுதமின்றி இராணுவச் சிப்பாய்க்குச் செய்வதற்கு ஒன்றுமில்லை எனவே இப்போது எனக்கு நிறைய நேரமிருந்தது. அப்பாவை மீண்டும் சந்திப்பதென முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் மாடுவெட்டும் ஒருவரைத் தேடிப் பிடித்தேன். அத்துடன் வெட்டிய இறைச்சியை எடுத்துச் செல்ல ஒரு வாகனத்தையும் வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன். நாளைக் காலையில் வாகனமும் மாடுவெட்டுபவரும் வரவேண்டிய முகவரியையும் அவர்களுக்குக் கொடுத்தேன். இந்த ஏற்பாடுகளை முடித்துக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு நான் வந்தபோது அங்கே எதிர்பாராத விதமாக அப்பாவைச் சந்தித்தேன்.அப்பா என்னிடம் வழவழத்துக் கதையளக்கத் தொடங்கினார். நானோ ஒற்றைச் சொற்களில் மறுமொழிகளைக் கூறிக்கொண்டு நின்றேன்.எனது சிந்தனை முழுவதும் நாளைய திட்டத்தையே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது. அப்போது அப்பா என்னிடம் கேட்ட ஒரு கேள்வி என்னை வாயைப் பிளக்கச் செய்தது. "பேபி நீ எப்போது பாட்டியையும் பண்ணையையும் போய்ப் பார்க்கப் போகிறாய்?" என அவர் கேட்டார். அவரால் எனது எண்ணங்களை எப்படிப் படிக்க முடிந்தது? உணர்ச்சிகளற்ற அவரது முகத்தை ஒருமுறை பார்த்துக்கொண்டேன். அவரது கேள்விக்கு நான் பதிலேதும் சொல்லவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ணைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது எனது திட்டத்தை ஒருமுறை மீட்டிப் பார்த்து எதையாவது தவற விட்டுவிட்டேனா எனச் சரிபார்த்துக்கொண்டேன். மதியத்தில் பண்ணைக்கு வந்து சேர்ந்தேன். வழியில் என்னைக் கண்ட பக்கத்துப் பண்ணையின் உரிமையாளர் உடனடியாகவே என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னைக் கட்டி அணைத்தார். எனது இராணுவ உடைகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டே "நீ நன்றாக வளர்ந்து விட்டாய், இந்த இராணுவச் சீருடை உண்மையிலேயே உனக்கு மிகப் பொருத்தமாயிருக்கிறது" என முணுமுணுத்தார். எனது 'ஆர்மி'ச் சப்பாத்து எனது தொடையின் அரைவாசிக்கு உயர்ந்திருந்ததை அவர் கவனிக்கவல்லைப் போலும். அப்படியிருந்தும் நான் அவரின் இடுப்பளவு உயரமேயிருந்தேன். அவரின் உயரத்துக்கு நான் என்றுமே வளரப்போவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பண்ணை வீட்டின் முன்னே நாய்க் குட்டிகள் சகிதம் நின்றுகொண்டிருந்த எனது சகோதரன் ரிச்சட் வைத்த கண் வாங்காமல் என்னையே பார்த்துக்கொண்டு நின்றான். எனது இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. அந்தக் கணத்தில்தான் நான் அவனை எவ்வளவு நேசிக்கிறேன் என்பது எனக்கே புரிந்தது. தம்பி தனக்கேயுரிய நிதானமான முறையில் என்னை வரவேற்றான்.அவன் முன்பிருந்ததை விட இப்போது இன்னும் சிறுத்திருந்தான். மொத்தத்தில் எதுவித மாற்றங்களுமில்லாமல் அதே ரிச்சட்டாகத்தான் அவன் இருந்தான். இப்போதுதான் காட்டில் வேட்டையாடிவிட்டு வந்தவனைப் போல அவனது தோற்றமிருந்தது. அவனை என்னுடன் சோர்த்து இறுக்கமாகக் கட்டி அணைத்துக்கொண்டேன். அவன் தனது தலையை என் தோள் மீது சாய்தான். ஒரு நொடியில் அங்கே தோன்றிய பாட்டி எனது கைளைப் பற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பாட்டியின் முகம் இன்னும் சூனியக்காரியின் முகமாகத்தானிருந்தது. ஆனால் இப்போது அந்த முகத்தில் ஒரு துயரப் புன்னகை ஒட்டியிருந்தது. நான் சத்தியம் செய்யக்கூடத் தயாராயிருக்கிறேன்; அன்று அவரது கண்களில் உண்மையிலேயே கண்ணீர் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டி பரிமாறிய உணவை நாங்கள் சாப்பிட்டு முடித்ததும் நானும் தம்பியும் வேட்டையாடப் புறப்பட்டோம். மீண்டும் எனது சகோதரனின் பக்கத்தில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்வாயி ருந்தது. நாங்கள் காட்டுக்குள் நடந்துகொண்டிருந்தபோது நான் எதற்காகப் பண்ணைக்கு வந்திருக்கிறேன் என்பதைத் தம்பி அறிய முயன்றான். எங்களது உண்மையான அம்மாவிற்காகப் பண்ணையிலிருந்து சில மாடுகளையும் ஆடுகளையும் பிடித்துச் செல்லும் எனது திட்டத்தை நான் அவனுக்குக் கூறினேன்.&lt;br /&gt;"களவாடவா நீ இங்கு வந்துள்ளாய்?"&lt;br /&gt;"ம்!"&lt;br /&gt;"அப்படியானால் நீ முட்டாள் தான்,துப்பாக்கியில்லாமல் நீ வந்திருக்கின்றாய்!"&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் மேற்கில் விழுந்துகொண்டிருந்தான். வேட்டை எங்களிருவரையும் நன்றாகக் களைக்க வைத்துவிட்டது. காடு எங்கள் இரையை ஒழித்து வைத்துவிட நாய்களும் களைத்துவிட்டன. வீடு திரும்பும்போது சோர்ந்துபோன நாய்கள் குற்ற உணர்வுடன் தங்களது எஜமானை அடிக்கொரு தடவை நிமிர்ந்து பார்த்துக்கொண்டே வந்தன. நானும் தம்பியும் கால்பந்து பற்றியும் எங்களின் வேட்டையைப் பற்றியும் பகடிக் கதைகள் பேசிக்கொண்டே வந்தோம். வேட்டையில் நாங்கள் தோற்றிருந்தாலும் எங்களுக்காகப் பண்ணையில் போதியளவு மாமிசம் காத்துக்கொண்டிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வந்ததும் வராததுமாக நான் பாட்டியிடம் சென்று எதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன் என்பதைச் சொன்னேன். புதினமறியும் ஆர்வத்துடன் எனது சகோதரனும் வந்து அறையின் மூலையில் உட்கார்ந்திருந்தான். ஒரு பெரிய பாத்திரத்தினுள் கை வேலையாயிருந்த பாட்டி என்னை பார்க்கக் கண்களை உயர்த்தினாள். நான் எனது பொய் மூட்டையை இன்னொரு தரம் அவிழ்க்கத் தொடங்கினேன். பட்டியிலிருந்து எட்டு மாடுகளையும் ஏழு ஆடுகளையும் பிடித்து ஒரு வண்டியில் ஏற்றிக் கொண்டுவரும்படி அப்பா என்னை இங்கு அனுப்பி வைத்திருக்கிறார் எனப் பாட்டிக்கு 'விளக்கம்' சொன்னேன். "வழமையாக அவர்தானே இந்தக் காரியங்களைச் செய்வார் இப்போது மட்டும் ஏன் மாறி நடக்கிறது?" எனப் பாட்டி கேட்டார். ஒரு இராணுவத்தினளாக வாழ்க்கை எனக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்துள்ளது. எப்போதுமே கைவசம் நாங்கள் ஒரு பதிலைத் தயாராக வைத்திருக்க வேண்டும். "இராணுவம் வாகனத்தில் இருந்தால் பொலீசார் லஞ்சம் கேட்க மாட்டார்கள் அப்பாவிற்கு அந்தப் பணம் மிச்சமாகும், அப்பா உள்ளதிலேயே நல்ல மாடுகளையும் ஆடுகளையும் கொண்டுவரச் சொல்லியுள்ளார்" எனப் பாட்டிக்கு விளக்கம் சொன்னேன். பாட்டி அரைகுறை மனதோடு தலையை அசைத்துவிட்டு, இன்னும் சிரித்துக்கொண்டிருக்கும் எனது சகோதரனை முறைத்துப் பார்த்தார். எனது சகோதரன் ஏன் சிரிக்கிறான் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவனது சிரிப்பைப் பாட்டி எப்படி எடுத்துக்கொள்வார்? அவன் வழமை போலவே தன்னைக் கேலிபண்ணிச் சிரிக்கிறான் எனப் பாட்டி எண்ணக் கூடும் என நினைத்து நான் சமாதானமானேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இரவுணவின் போது பக்கத்துப் பண்ணையின் உரிமையாளர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் பாட்டியுடன் கதைப்பவற்றை நான் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தேன். அவர் பாட்டியிடம் சொன்ன ஒரு விசயத்தைக் கேட்டதும் என் இதயமே ஒரு கணம் நின்றுவிட்டது. உணவைச் சப்பிக்கொண்டிருந்த எனது வாய் ஆடாமல் நின்றது. பக்கத்துப் பண்ணைக்காரர் எனது தகப்பனாரை நகரத்தில் கண்டதாகவும் நான் இங்கு வந்திருப்பதை அவர் அப்பாவிற்குச் சொன்னதாகவும் பாட்டியிடம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளையாகப் பாட்டியின் முழுக் கவனமும் உரையாடலில் இருக்கவில்லை. நானும் சாப்பாட்டில் கவனம் செலுத்துவது போலப் பாவனை செய்தேன். எல்லாமே திட்டமிட்டபடி நடக்கும் என எனக்கு நானே சமாதானம் சொல்லிக்கொண்டேன். ஆனாலும் நம்பிக்கையீனம் என்னைப் பலமாக ஆட்டிப் படைத்தது. நானே எனக்குச் சொன்ன சமாதானங்கள் எல்லாம் ஒன்றின் பின் ஒன்றாகச் சரிந்து விழுந்தன.பக்கத்துப் பண்ணைக்காரர் போகும்போது கதவைப் பிடித்துக்கொண்டே என்னைத் திரும்பிப் பார்த்து "உன்னைப் பார்ப்பதற்காக உனது அப்பா நாளை காலையில் இங்கு வருகிறார்" எனச் சொல்லிவிட்டுப் போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது பாட்டி என்னைப் பார்த்த பார்வையுடன் எனது கடைசி நம்பிக்கையும் செத்துப் போனது. அவரின் கண்களில் நாள் முழுவதும் இருந்த நெகிழ்வும் அன்பும் இப்போது காணாமற் போயிருந்தன. எனது இதயம் வேகமாக அடிக்கத் தொடங்கிப் பின் ஏறத்தாழ நின்றே விட்டது. பாட்டி என்னை முறைத்துக்கொண்டே "மாட்டுத் திருடர்களை உனது தந்தை எப்படிக் கொல்வாரோ அதேபோல உன்னையும் அடித்தே கொல்லப் போகிறார்" என்றார். அச்சம் எனது மூளையையும் அங்கங்களையும் முடக்கிப்போட்டது. இப்போது நான் இங்கிருந்து ஓடித் தப்பாவிட்டால் என்றுமே நான் இங்கிருந்து மீளப் போவதில்லை என நினைத்துக்கொண்டேன். பாட்டியோ தனது மிரட்டல்களையும் பயமுறுத்தல்களையும் நிறுத்துவதாயில்லை. கடைசியில் எனது சகோதரன் ஒரு கூச்சல் போட்டுப் பாட்டியை அடக்கினான். பின்பு ஒன்றுமே நடவாதது போலத் தனது வழமையான நிதானத்துடன் என்னருகே வந்து மெல்லிய குரலில் "பறிக்கப்பட்ட உனது ஆயுதத்தை மறந்து விடாதே" எனச் சொல்லிவிட்டுப் படுக்கைக்குப் போனான். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.28.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.28.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115695184912352143?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115695184912352143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115695184912352143&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695184912352143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695184912352143'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/09/40.html' title='குழந்தைப் போராளி - 40'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115695172713359159</id><published>2006-09-01T20:42:00.000+02:00</published><updated>2006-09-01T20:44:05.490+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 39</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier34%20copie.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier34%20copie.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;&lt;span style="font-size:180%;"&gt;மீண்டும் போராளி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;&lt;strong&gt;தொ&lt;/strong&gt;&lt;/span&gt;ண்டர் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக்கொள்வதற்காக NRA பல வாகனங்களை நாடு முழுவதுமே ஓடவிட்டிருந்தது. 'நயாசிஷாரா'விற்குப் போகும் வழியில் அப்படி ஒரு நான்கு சக்கர "இராணுவ அலுவலக"த்தை நான் கண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்டர் படைக்குச் சேர்க்கப்படுபவர்கள் ஒரு மாத ஆயுதப் பயிற்சியின் பின்பாக போர்முனைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த இடத்தில் எனது அனுபவம் எனக்குக் கை கொடுத்தது. இராணுவ நடைமுறைகள் எனக்குப் பரிச்சயமானதால் எங்கே எதைச் செய்தால் எனக்கு இலாபமுண்டு என்பது எனக்குத் தெரியும். நான் பயிற்சியின் முடிவில் போர்முனைக்கு அனுப்பப்படாததற்கு வேறொரு காரணமுமுண்டு. பயிற்சிக் காலத்தில் ஆயுதப் பிரயோகங்களிலும் அணிவகுப்புகளிலும் மற்றைய இராணுவ நுட்பங்களிலும் நான் காட்டிய திறமையைப் பார்த்து, எங்களைப் பயிற்றுவித்த கோப்ரலால் தன் கண்களையே நம்பமுடியவில்லை. இதில் எந்த ஆச்சரியமுமில்லை. எல்லாமே எனக்கு முன்பே தெரிந்த விடயங்கள் தானே! எனவே பயிற்சியாளர் என்னை உதவிக் கோப்ரலாக பதவி நியமனம் செய்து 45வது படையணிக்கு என்னை அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து உடனடியாகவே நான் எங்கேயிருக்கிறேன் என்பதை அம்மாவுக்கு அறிவித்தேன். ஒன்றிற்கு இரண்டு முறையாக அம்மாவிற்கு நான் செய்த நம்பிக்கைத் துரோகம் என் மனதை அரித்துக் கொண்டேயிருந்தது. அம்மாவின் கஷ்ட ஜீவனமும் அதைச் சமாளிக்க அவர் செய்து வரும் சிறியளவு பால் வியாபாரமும் என்னை வருத்தின. அப்பாவோ பெரிய பாற்பண்ணையும் மாடுகளுமாயிருக்கிறார். ஒருநாள் முழுவதும் இது குறித்துத் தீவிரமாகச் சிந்தித்த பின்பு அப்பாவுடன் ஒரு சிறிய சந்திப்பை நிகழ்த்துவதென முடிவெடுதேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றன்னை பெற்றெடுத்த எனது சகோதரிகள் என்னைக் கண்டதும் மிகவும் மகிழ்ந்து போயினர். அப்பா வீட்டு விறாந்தையில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். என்னை அடையாளம் கண்டதும் அவர் உறைந்து போனார். படபடக்கும் அவரது கண்கள் மட்டுமே அசைந்தன.ஒருவரை ஒருவர் சற்று நேரம் வரை பார்த்துக்கொண்டிருந்தோம். என் தலை கிறுகிறுத்துக்கொண்டிருந்தது."பேபி" எனக் கீச்சுக்குரலில் கூவிக்கொண்டே அப்பா எழுந்து நின்றார். பயந்தவர் போலக் காலடிகளை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து அவர் என்னை நெருங்கினார். நான் ஆடாமல் அசையாமல் நின்றேன். முகத்தில் மிகக் குழப்பமான பாவனைகளைக் காட்டிக் கொண்டே அவர் வீட்டினுள்ளே போனார். அவர் திரும்பி வரும்போது எனக்காக ஒரு நாற்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தார். ஒரு மரியாதைக்குரிய விருந்தினரை வரவேற்பது போல அவரது சாய்வு நாற்காலிக்கு அருகே எனக்கு இருக்கை போடப்பட்டது. இருவருமே உட்கார்ந்துகொண்டு எதுவும் பேசாமல் ஒருவரையருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். பதறிப் படபடத்துக்கொண்டிருக்கும் அப்பா முதலில் கதையைத் தொடங்கட்டும் என நான் அமைதியாக உட்கார்திருந்தேன். எனது கொடுமைக்காரச் சிற்றன்னை வெளியே வந்து என்னை வரவேற்பதற்காகவும் நான் காத்திருந்தேன். சிறிது நேரத்திற்குப் பின் சிற்றன்னை கதவைத் திறந்து மெதுவாக வெளியே வந்தார். எனது கோபத்தை மிகச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டே எனது உதடுகளில் புன்னகையை வரவழைத்தேன். அதன் பின்பு தான் அப்பா நிம்மதியாக மூச்சு விட்டார். அவரின் முகத்தில் இப்போது மகிழ்ச்சி ரேகைகள் தோன்றின. அப்பா, "பேபி நீ எப்போது இந்தப் பிரதேசத்துக்கு வந்து சேர்ந்தாய்?" எனக் கேட்டார். அதன் பின்பு ஒரு நசுங்கலான சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது. "பொது மக்கள் இராணுவத்திடம் இம்மாதிரியான கேள்விகளைக் கேட்கக் கூடாது" என நான் சர்வ சாதாரணமாகச் சொன்னேன். மீண்டும் கதை பேச்சின்றி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தோம். சிற்றன்னை கொண்டுவந்த பாலை 'நான் ஏற்கனவே சாப்பிட்டாகிவிட்டது' என்று காரணம் சொல்லிக் குடிக்க மறுத்துவிட்டேன். உண்மை என்னவென்றால் நான் அவரை நம்பவில்லை அவரிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ள நான் விரும்பவுமில்லை. &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.29.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.29.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115695172713359159?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115695172713359159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115695172713359159&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695172713359159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695172713359159'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/09/39.html' title='குழந்தைப் போராளி - 39'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115695166163055784</id><published>2006-09-01T19:11:00.000+02:00</published><updated>2006-09-01T19:13:07.606+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 38</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier29.11.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier29.7.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#330033;"&gt;பழைய பாதை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#009900;"&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;&lt;/span&gt;னது படையணியை விட்டு நான் சுலபமாகத் தப்பியோடி வந்தததற்கு அதிர்ஷ்டம் என் பக்கம் இருந்ததோடு NRA இராணுவத்தின் ஒழுங்கற்ற தன்மையும் ஒரு காரணம். குழந்தைகளான நாங்கள் 'பதிவில்லாத' போராளிகள். NRA இராணுவத்தின் பல நிர்வாக அலகுகளுக்கு நாங்கள் அங்கும் இங்குமாக அனுப்பப்படுபவர்கள். எங்களை பற்றிய எந்தக் கோப்புகளோ குறிப்புகளோ அவர்களிடமில்லை. இந்த நிலையில் அவர்களால்தான் என்ன செய்ய முடியும்? ஒட்ட வெட்டப்பட்ட முடியும் மண்ணிறக் கண்களையும் கொண்ட ஒரு குழந்தைப் போராளியை அவர்கள் எங்கேயென்று போய்த் தேடுவது? எங்களின் பெயர்களோ ஊர்களோ எந்த ஆவணத்திலுமில்லை. எங்களுக்கு ஊதியமுமில்லை. ஆக மொத்தத்தில் நாங்கள் அரூபங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் போர் இன்னும் முடியவில்லை. எனவே இராணுவ உடைகளை விட்டு விட்டுச் சாதாரண உடைகளையே அணிவதென முடிவு செய்தேன். எனது ஆயுதத்தை எடுத்துக்கொண்டு மீண்டுமொரு முடிவு தெரியாத பயணத்திற்குத் தயாரானேன். எனது வாழ்கையை ஒரு கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமாயின் முதலில் எனது உணர்வுகளைச் சிந்தனைகளை ஒரு கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். அதன் பின்புதான் நான் புதிதாக எதையாவது ஆரம்பிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்கு வருடங்களின் பின்பு திரும்பி வந்த போதிலும் எனது தாயின் வீட்டை ஒரு பிரச்சனையுமின்றி என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.. ஆனால் அந்த வீடு வெறுமையாகக் கிடந்தது. வீட்டிலிருந்தோர் அவசர அவசரமாக வீட்டை விட்டு ஓடியது போல வீடு அலங்கோலமாகக் கிடந்தது. வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்திருந்து யோசித்த போதுதான் நான் ஞாபக மறதியாக எனது பயணப் பையை பஸ்ஸிலேயே விட்டுவிட்டு வந்திருப்பது என் மூளையில் உறைத்தது. அப்படியொரு குழப்பிய நிலையில் நான் இருந்தேன். பதறியடித்துக்கொண்டே புயல் வேகத்தில் பஸ்ஸைத் தேடி ஓடினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணப் பையில் இருந்தவற்றிலேயே பெறுமதியானது எனது ஆயுதந்தான். அது போர்முனைகளில் என்னை ஒருபோதும் கைவிட்டதில்லை. வனாந்தரங்களில் அது என் வழித் துணையாகயிருந்தது. கடந்த சில வருடங்களாக அது எனது உடலின் ஓர் அங்கமாயிருந்தது. பேருந்துத் தரிப்பிடத்தில் கேட்டவர்களெல்லாம் எனக்கு உதவத் தயாராகயிருந்தனர். ஆனால் எனது பொருட்கள் தான் எனக்குத் திரும்பவும் கிடைக்கவேயில்லை. எல்லாவற்றையும் இழந்துவிட்ட உணர்வில் நான் தத்தளித்தக்கொண்டிருந்த போது எனது தாயின் அருகாமை என்றுமில்லாதவாறு இன்று எனக்குத் தேவையாயிருந்தது. பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த பெண்ணொருத்தியிடம் எனது அம்மா பற்றிய விபரங்களைக் கூறி விசாரித்தேன். அவள் புன்னகைத்து "கவலைப்படாதே! இன்னும் சில நிமிடங்களிலேயே நீ உனது அம்மாவைச் சந்திக்கலாம். உன்னை நான் அவளிடம் அழைத்துச் செல்வேன்" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அந்த வீட்டினுள் நுழைந்தபோது வீட்டினுள்ளே ஒரு நாற்காலியில் அந்தச் சிறுமி அமர்ந்திருந்தாள். அவள் எனது சகோதரி மார்ஜி-பொன்பொன்ஸ். அவள் தலையிலிருந்து பாதம்வரை தோற்றத்தில் என்னையே உரித்து வைத்திருந்தாள். சில விநாடிகள் வைத்த கண் வாங்காமல் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த மார்ஜி மெதுவாக நாற்காலியிலிருந்து எழுந்து வந்து தரையில் விழுந்து எனது கால்களைக் கட்டிக்கொண்டு எனது பெயரைச் சொல்லிக் கதறினாள். நானோ என்ன செய்வதென்று தெரியாது சிலை போல நின்றுகொண்டிருந்தேன். அவளைத் தூக்கி அணைத்துக் கொள்ளவும் எனக்குத் துணிவு வரவில்லை. விம்மலுடன் தரையிலிருந்து எழுந்து நின்ற எனது சகோதரி கையைப் பிடித்து என்னை வெளியே தெருவிற்கு அழைத்து வந்தாள். நாங்கள் தெருவில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை. அம்மா தெருமுனையில் தோன்றினார். அவர் மிக நிதானமாக எங்களை நோக்கி நடந்து வந்தார். எங்களருகில் வந்த அம்மா எங்களிருவரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டு சிறிது நேரம் நின்றிருந்தார். பிறகு வெகு இயல்பான தொனியில் "வாருங்கள் வீட்டுக்குள் போவோம்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். அம்மாவும் மார்ஜியும் தான் அதிகமாகப் பேசினார்கள். நான் இவ்வளவு காலங்களாக எங்கேயிருந்தேன்? என்ன செய்தேன் என்பதை அறிய அவர்கள் ஆவலாயிருந்தார்கள். நான் திரும்பி வந்ததையிட்டு எனது சகோதரி தாங்கொண்ணாத மகிழ்ச்சியில் துடித்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;எனது தாயார் "மகளே என்றோ ஒருநாள் நீ என்னிடம் திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையினால் தான் நான் இந்தக் கிராமத்தை விட்டுப் போகாமல் இருக்கிறேன்" என்றார். "நீ ஓடிப்போன நாளிலிருந்து என்னை ஒரேஒரு கேள்விதான் அலைக்கழிக்கிறது. நீ ஏன் என்னை விட்டு ஓடிப்போனாய்?" எனக் கேட்டு அம்மா என்னைப் பரிதாபமாகப் பார்த்தார். நான் அவரை விட்டு ஏன் ஓடிப் போனேன்? நான் முதன்முறையாக எனது தாயின் கண்களை நேராகப் பார்த்துக்கொண்டே உண்மையைச் சொல்லத் தொடங்கினேன். நான் அம்மாவை விட்டு ஓடிய இரவில் அம்மாவும் அம்மாவின் கூட்டாளிகளும் என்னைத் தின்று விடுவார்கள் என நான் அஞ்சினேன் என நான் சொன்னதுதான் தாமதம் அம்மா அடக்கமாட்டாமல் வெடித்துச் சிரித்தார். அவர் கண்களில் நீர் கோர்த்தது. அந்தக் கண்ணீர்த் துளிகள் சிரித்ததால் துளிர்த்தவையல்ல. மார்ஜி கண்களைச் சுருக்கிச் சிரித்துக்கொண்டே "அம்மா செய்தாலும் செய்திருப்பார்" என்றாள். சிறிது நேரம் நாங்கள் ஒன்றுமே பேசாதிருந்தோம். முற்றத்தில் கோழியொன்று மேய்ந்துகொண்டிருந்தது. "இது நம்முடைய கோழியா?" என நான் கேட்டுக் கேட்ட வாயை மூடவில்லை அம்மா கோழியைப் பிடிக்கும்படி சொன்னார். கோழி சட்டியில் வெந்துகொண்டிருக்கும் போது அம்மா என் காதில் இரகசியமாக ஒரு பொய்யைச் சொன்னார். இந்தக் கோழியை நான் திரும்பும் வரை அவர் எனக்காகவே விட்டு வைத்திருந்தாராம். அது அன்பை உணர்த்தச் சொன்ன பொய். நான் ஓடிப் போன காலத்தைக் கணக்கிட்டால் கோழியின் வயதென்ன?&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா என்மீது அன்பையும் பாசத்தையும் பொழிந்த போதும் அவரை நான் அந்நியமாகவே உணர்ந்தேன். முதலில் எனக்கு அவரைச் சரிவரத் தெரியாது, அத்துடன் எனது கடந்த கால வாழ்வில் நான் யாருடனும் கடும் நெருக்கத்தைப் பேணியதுமில்லை எவரையும் நான் சீக்கிரத்தில் நம்பியதுமில்லை. அம்மாவிடம் எப்போதுமே நகைச்சுவைக் கதைகள் கைவசமிருக்கும். ஆனால் அந்தக் கதைகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியதே. ஆனாலும் கேட்பவர்களால் சிரிக்காமலிருக்க முடியாது. அம்மா சொன்ன ஒரு கதை என்னையும் எனது சகோதரியையும் சிரிப்பால் உலுக்கியது. பாப்பரசரின் தாய் துற்சி இனத்தைச் சேர்ந்தவளென்று அம்மா சொன்னார். இதைச் சொல்லும் போது ஒரு அசைக்க முடியாத உண்மையை வெளியிடுவதைப் போலவே அவரின் முகபாவனைகளிருந்தன. கேட்பவர்கள் என்ன நினைப்பார்கள் எனபது பற்றியெல்லாம் அவருக்குக் கவலையில்லை. ஆபிரிக்கப் பெண்கள் குறிப்பிட்ட வயதுகளில் சாப்பிடக் கூடாத சில உணவு வகைகளுண்டு. ஆனால் அம்மா அந்தக் கட்டுப்பாடுகளைப் பொருட்படுத்துவதே இல்லை.யாராவது அவரது உணவுப் பழக்கத்தினைக் கேலி செய்தால்,"என் முன்னே வைக்கப்படும் எதையும் நான் சாப்பிடுவேன்" என அம்மா மார் தட்டுவார். வயது வித்தியாசமின்றி எல்லோரும் அவரை விரும்பினார்கள். அம்மா என்மீது அன்பைப் பொழிந்தாலும் அதனைத் திருப்பிச் செலுத்த என்னால் முடியவில்லை. நான் பிறந்தது முதலே அன்பில்லாத வாழ்க்கையையே வாழ்ந்தது இதற்கு காரணமாயிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது தாயாரின் வாழ்கையும் மிகச் சிரமமானது. அவர் கணவனை இழந்தவர். அவரின் சொத்துக்கள், இறந்த கணவனின் உடமைகள் எல்லாவற்றையுமே அவர் கலவரத்தின் போது பறிகொடுத்து விட்டார். இப்போது அவர் வசிக்கும் சிறிய வீடும் வாடகை வீடே. என்னால் அந்தச் சூழலில் இயல்பாக இருக்க முடியவில்லை. கிராமத்திலுள்ளவர்கள் சோம்பேறிகளாகவும் எதிலும் கவனமற்றவர்களுமாயிருந்தனர். ஏதாவது ஒரு வேலையைத் தன்னும் அவர்கள் நேர்த்தியாகச் செய்வதில்லை. பொறுப்பின்மையும் அசட்டையும் எங்கும் நிறைந்திருந்தன. அங்கே என் விருப்பம் போல எதுவும் அமைவதாயில்லை. யாரும் நான் விரும்பியது போல என்னை மதிப்புச் செய்யவில்லை. ஒரு போராளி சாதாரண மக்களை விடப் பலமடங்கு உயர்ந்தவர் என்பதே எங்களுக்கு ஊட்டி வளர்க்கப்பட்ட சிந்தனை. நானும் அதனை உறுதியாக நம்புவள். எனது சொற்கள் மற்றவர்களால் தட்டாமல் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியன என்பதில் எனக்கு இருவேறு கருத்துக்களில்லை. ஆனால் என் பருப்பு கிராமவாசிகளிடம் வேகுவதாயில்லை. என்னாலோ எனது போராளி முறுக்கை எளிதில் கைவிடவும் முடியவில்லை. மறுபடியும் NRA இராணுவத்திற்குத் திரும்புவதும் இயலாத காரியம். ஏனெனில் எனது ஆயுதத்தை நான் தொலைத்து விட்டேன். ஆயுதத்தைத் தொலைத்தவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாவார்கள். சிலவேளைகளில் அது மரண தண்டனையாகக் கூட இருக்கும். வேறு வழியில்லை! இந்தக் கிராமத்திலேயே நான் கிடந்து அழுந்த வேண்டியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;மார்ஜி நான் எனது பதின்மூன்று வயதில் மறுபடியும் பாடசாலைக்குச் செல்ல வேண்டுமென விரும்பினாள். இந்த விடயம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. ஆனால் வேறு வழிகளும் இருக்கவில்லை. வீட்டில் அடைந்து கிடப்பதை விடப் பாடசாலைக்குப் போய் வருவது நல்லதுதான். பாடசாலையில் என் பெயரைப் பதிவு செய்து படிப்பும் தொடங்கியாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு நாளும் வகுப்புகள் முடிந்ததும் நான் யாருடனாவது அடிதடியில் இறங்கிவிடுவேன். பொதுவாக என்னிலும் வயது கூடிய மாணவர்கள் எப்போதுமே என்னை ஆத்திரமூட்டுவார்கள். சண்டையில் பல முறைகள் தோற்றுப் போனாலும் என்னால் சண்டையை விட முடியவில்லை. நான் இரத்தம் ஒழுக வருவதைப் பார்த்துவிட்டு அம்மா பதறிப்போய் என்ன நடந்ததென்று விசாரிப்பார். நான் பதிலெதுவும் சொல்வதில்லை. அம்மா எனது நாளாந்தப் பிரச்சனைகளையும் தோல்விகளையும் அறிந்துகொண்டால் உடைந்து போய்விடுவார் என்றே நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையில் நான் ஒதுக்கிவைக்கப்பட்ட ஒருத்தி. இதுவே எனது அடிப்படைப் பிரச்சினை. யாருமே எனக்கு உதவி செய்யவில்லை. நானும் யாரிடமும் உதவி கோரவுமில்லை. பாடசாலை எனக்கு நரகமாக மாறியது. நான் பைத்தியக்காரி போல அந்தச் சோம்பேறிக் கிராமத்தில் உழன்றுகொண்டிருந்தேன்.அம்மா எனக்கு உதவ முன்வந்தார். ஒரு மாறுதலுக்காக அவர் தனக்குத் தெரிந்த ஒரு தம்பதிகளின் வீட்டில் சில நாட்கள் தங்கியிருப்பதற்காக என்னை அனுப்பிவைத்தார். நான் அங்கு மிக மோசமான பாலியல் பலாத்காரத்திற்குள்ளானேன். முன்பு ஏழு வயதில் நடந்ததுபோன்றே இம்முறையும் நடந்து முடிந்தது. மீண்டும் அம்மாவிடம் வந்து வீட்டினுள்ளே கூண்டில் அடைபட்ட மிருகம் போல சுருண்டு கிடந்தேன். அமைதியில்லாது வீட்டையே வளைய வந்துகொண்டிருந்த என்னை வெளியே போய் எதையாவது செய்ய வேண்டுமென்ற வேட்கை ஆட்டத் தொடங்கியது. அம்மா வேறு நாளும் பொழுதும் என்னைப் பார்த்து மனம் வருந்திக்கொண்டிருந்ததையும் என்னால் பொறுத்துகொள்ள முடியவில்லை. அவரை மேலும் வருத்தாதிருக்க ஒரு கப்டனின் வீட்டில் வேலைக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கும் என்னால் இருக்க முடியவில்லை.வீட்டு வேலைக்காரியாக என்னால்அந்த வீட்டில் தாக்குப் பிடிக்கமுடியவில்லை. அத்துடன் அந்த வேலை என்னை இழிவுபடுத்துவதாகவும் எனக்குப்பட்டது. மீண்டும் அம்மாவிடம் திரும்பி வந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சலிப்பற்ற வேறு வாழ்க்கையைத் தொடங்கவேண்டும். காலம் என்னைத் தோற்கடித்து விடக்கூடாது. என்னைப் போன்ற இரத்தம், துப்பாக்கி,கொலை, இராணுவம் எனப் பின்னணியுள்ளவளைச் சமூகம் அவ்வளவு சுலபமாக தன்னுள் உள்வாங்கிக் கொள்ளுமா? எனக்கும் இராணுவ வாழ்க்கையைத் தவிர வேறென்ன தெரியும்? மெல்ல மெல்ல ஒரு திட்டம் என்னுள் வடிவம் பெறத் தொடங்கியது. நான் மீண்டும் இராணுவ வாழ்கையை முதலில் இருந்து தொடங்க வேண்டும். இராணுவ வாழ்க்கையில் தான் என்னால் எனது திறமைகளை முழுமையாக வெளிக்காட்ட முடிந்தது. நான் இன்னும் உயிருடன் இருப்பதே எனது திறமைக்கான மிகப்பெரிய அத்தாட்சி.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மாவிடம் எனது திட்டத்தைப் பற்றிப் பேச முடியாது. ஆனால் திட்டத்தை நிறைவேற்ற எனக்குப் பணம் தேவை. முந்தைய முறை போலவே இம்முறையும் அம்மாவை விட்டுப் போகும்போது பணத்தைத் திருடிக்கொண்டு போனேன். அவரிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாது வீட்டை விட்டு வெளியேறினேன். நான் அம்மாவிற்குச் செய்யும் இந்தத் துரோகங்கள் எல்லாவற்றிற்கும் என்றோ ஒருநாள் பிராயச்சித்தம் தேடிக்கொள்வேன் என எனக்குள்ளேயே நான் சத்தியம் செய்துகொண்டேன். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.30.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.30.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115695166163055784?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115695166163055784/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115695166163055784&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695166163055784'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695166163055784'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/09/38.html' title='குழந்தைப் போராளி - 38'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115695158025836938</id><published>2006-08-30T19:56:00.000+02:00</published><updated>2006-08-30T19:58:19.960+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 37</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier30.3.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier30.3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#6600cc;"&gt;&lt;strong&gt;கொலை வெறி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff6666;"&gt;நா&lt;/span&gt;ன் கம்பாலாவிலிருந்து எனது ஊரை நோக்கி ஒரு மினி பஸ்ஸில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஏறக்குறைய ஊரை நெருங்கும் தறுவாயில் 'மொபாராறா' நெடுஞ்சாலையிலிருந்த NRAயின் சோதனைச் சாவடியில் மினிபஸ் நிறுத்தப்பட்டது. அந்தச் சோதனைச் சாவடியின் பொறுப்பதிகாரியாக யூலியஸ் புரூஸ் அங்கே நின்றுகொண்டிருந்தார். என்னை உடனடியாகவே அடையாளம் கண்டுகொண்ட யூலியஸ் முகம் மலர்ந்து "அட சைனா! நீ எங்கே போய்க்கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்க நான் பதிலெதுவும் சொல்லாமல் புன்னகைத்துக் கொண்டேயிருந்தேன். யூலியஸ் என்னை மினிபஸ்ஸை விட்டு இறங்கச் சொன்னார். நான் இறங்கியதும் மினிபஸ் அங்கிருந்து நகரத் தொடங்கியது. அருகிலிருக்கும் உணவு விடுதிக்குச் சென்று ஏதாவது குடிப்போமா? என யூலியஸ் கேட்க நான் சிரித்துக்கொண்டே அவரின் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். நான் விடுதியின் கழிப்பறைக்குள் சென்று எனது பையிலிருந்த பணத்தை எண்ணிப் பார்த்துக்கொண்டேன். எனது தாயென நான் நினைத்தவளிடம் போவதற்கு அது போதுமானதாயிருந்தது. நானும் யூலியஸும் முன்னிரவு வெகுநேரம் வரை அந்த விடுதியில் உட்காந்திருந்தோம். சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும் போர் பற்றியும் போரில் மடிந்துபோன எங்களது தோழர்களைப் பற்றியும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தோம். நாங்கள் முகாமுக்குத் திரும்பி வந்தபோது அங்கே எனக்குப் படுப்பதற்கு ஓர் இடம் ஒதுக்கித் தரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;என்னால் தூங்க முடியவில்லை.மீண்டுமொரு முறை நான் எனது தகப்பனுக்கு மிக அருகாமையில் இருக்கிறேன். எனது பழிக்குப் பழிவாங்கும் திட்டத்தையே எனது மனம் உருப்போட்டுக்கொண்டு கிடந்தது. அப்பா என்னிடம் நடந்துகொண்ட முறையை என்னால் மன்னிக்கவே முடியாது. நான் அவரைப் பழி தீர்த்தக்கொள்வது சரியானதே! போர்முனையில் இருந்தபோது பழி வாங்குவதற்கான திட்டத்தைச் செதுக்குவதற்கு எனக்குப் போதிய நேரமிருந்தது. இது திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான தருணம். நாளைக் காலையில் நான் அதற்கான நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;துப்பாக்கி தோளில் ஆட எனது பழைய பாடசாலை வரை நடந்து சென்று அங்கிருந்து அப்பாவின் வீட்டை நோக்கிப் பார்வையை எறிந்தேன். அவரது வீடு இன்னமும் சிறு குன்றின் மீது நின்று கொண்டிருந்தது. எனது அடி வயிறு பற்றி எரியத் தொடங்கக் கொலை வெறியில் பற்களை நற நறவெனக் கடித்துக்கொண்டேன். பீறிட்டெழுந்த வன்மம் என்னை ஆட்டி வைத்தது. எனது அப்பாவையோ, சிற்றன்னையையோ நினைத்தபோதெல்லாம் எனது சுட்டு விரல் துப்பாக்கியின் விசையைத் தன்னிச்சையாக வருடியது. நீதி வெல்லும் நேரம் வந்துவிட்டது! இறுதித் தடவையாக நான் குன்றின் மேலேறிச் சென்று அப்பாவையும் அவரது மனைவியையும் கொல்ல வேண்டும். குன்றினை நோக்கி என் கால்களை நகர்த்த அவை மரத்துப் போனவை போல அசைய மறுத்தன. நான் அசைய முடியாமல் உறைந்து போய் நின்று ஆத்திரத்தில் குழறியழுதேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அந்த இடத்தையே கண்ணீரால் கழுவிவிட்டு முகாமிற்குத் திரும்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முகாமின் ஒவ்வொரு மூலையிலும் என்னைத் தேடிக்கொண்டிருந்த யூலியஸ் என்னைக் கண்டதும் என்னிடம் நேராக வந்தார். கண்ணீராலும் என் கோபத்தை அவிக்க முடியவில்லை. எனது கையாலாகாத்தனம் என்னை மேலும் கோபமூட்டியது. நான் மூசிக்கொண்டே நான் எங்கு சென்றிருந்தேன் என்பதையும் எனது பழி வாங்கும் திட்டத்தைப் பற்றியும் யூலியஸிடம் சொன்னேன்.எனது வாயால் புறப்பட்ட ஒவ்வொரு சொல்லும் எனக்கு நேராகவே திரும்பி ஒரு குத்துச் சண்டை வீரனின் ஆக்ரோசமான குத்துக்களைப் போல என் இதயத்தை நோகடித்தன. யூலியஸ் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார். நான் பேசி ஓய்ந்த போது அவர் தனது கையை எனது தோளின் மேல் வைத்தார். இருவருமே முகாமைவிட்டுச் சிறிது தூரம் நடந்து சென்று புல்வெளியில் அமர்ந்து கொண்டோம். யூலியஸ் என்னிடம் மென்மையாகப் பேசத் தொடங்கினார்.&lt;br /&gt;"எனது தகப்பனும் ஒரு முரட்டுப் பிறவிதான்.ஆனால் அதற்காக நான் அவரைக் கொன்றுவிட நினைக்கவில்லை..."&lt;br /&gt;"ஏன் கொல்லத் தேவையில்லை?" நான் இடைமறித்தேன்.&lt;br /&gt;"ஏனெனில் எனக்கும் அவருக்கும் வித்தியாசமே இல்லாமற் போய்விடும், நானும் என் தந்தையைப் போலவே கெட்டவனாக மாற விரும்பவில்லை."&lt;br /&gt;யூலியஸின் வாயிலிருந்து விழும் ஒவ்வொரு சொல்லையும் நான் ஆவலாகப் பருகினேன். அவருடனான உரையாடலின் முடிவில் என் உள்ளத்தில் தெளிவு பிறந்தது. நான் எனது தந்தையைப் போலில்லை. அவரைப் போல ஆகவும் எனக்கு விருப்பமில்லை. எனது பழி வாங்கும் திட்டத்தை நான் இங்கேயே இப்போதே குழி தோண்டிப் புதைத்துவிட்டேன் என யூலியஸிடம் சொன்னேன். அவரிடமிருந்து ஒரு துயரப் புன்னகை எனக்குப் பதிலாகக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை நான் எனது தாயைத் தேடிச் செல்லப் போவதாகச் சொன்னேன். எனது முயற்சியில் வெற்றி பெற அவர் தன் வாழ்த்துக்களைக் கூறினார். உண்மையில் அவர் என்ன நினைத்தார் என்பதை என்னால் கண்டு கொள்ளமுடியவில்லை அவரது கண்கள் எப்போதுமே பூமிக்குத் தாழ்ந்திருந்தன. &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.31.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.31.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115695158025836938?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115695158025836938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115695158025836938&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695158025836938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695158025836938'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/37.html' title='குழந்தைப் போராளி - 37'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115695062481320531</id><published>2006-08-30T19:54:00.000+02:00</published><updated>2006-08-30T19:57:35.463+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 36</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier36.3.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier36.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ffcc00;"&gt;நாயகிகளின் நாயகி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;க&lt;/span&gt;ம்பாலாவை நெருங்க நெருங்க எனது கால்களில் வேகம் கூடியது. மனித நடமாட்டமே இல்லாத வீதிகளில் நான் வியர்த்துக் களைத்து நடந்துகொண்டிருந்தேன். ஒரு மதிற் சுவரின் நிழலில் களைப்பை ஆற்றிக்கொள்வதற்காக உட்கார்ந்தேன். இந்த உயர்ந்த மதில்கள் வேண்டப்படாத விருந்தாளிகளைத் தடுத்து நிறுத்தக் கட்டப்பட்டிருந்தன போலும். இப்போது நான் தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடித்தேயாக வேண்டும் என்ற யோசனையுடன் நான் உட்கார்ந்திருந்தபோது ஒரு கார் என் முன்னே மெதுவாக வந்து நின்றது. நான் மெதுவாக எழுந்து நடக்கத் தொடங்கினேன். காரின் ஓட்டுனர் இருக்கையில் நடுவயதுடைய ஒரு 'முகண்டா' பெண் இருந்தாள். அவளின் பார்வை என் மீதேயிருந்தது. நான் நடையை வேகமாக்கியபோது அவள் காரிலிருந்து 'ஹோர்ன்' அடித்தாள். நான் திரும்பி 'என்னையா அழைக்கிறாய்?' எனச் சைகையால் கேட்டேன். அவள் 'ஆம்' எனத் தலையசைத்தாள். நான் உடனடியாக அந்தக் காரினுள் ஏறினேன். நான் காரின் கண்ணாடி ஜன்னல் வழியே குண்டு வீச்சக்களால் சிதிலமான கட்டடங்களையும் தெருக்களையும் பார்த்துக்கொண்டிருந்தேன். பின் மெதுவாக அந்தப் பெண்ணைக் கவனிக்கத் தொடங்கினேன். அவள் ஓர் அழகியல்ல, கசகசவென வியர்த்த முகமும் தொந்தியும் தொப்பையுமாக அவள் இருந்தாள். வெயில் அவளைக் கடுமையாக வறுத்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென அந்தப் பெண் -எந்தப் பீடிகையும் போடாமல்- தான் என்னை காதலிப்பதாகச் சொன்னாள். இதைக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. தனது காதலைச் சொன்ன அவள் நான் தனது வீட்டில் தங்கியிருக்க எந்தத் தடையுமில்லை எனக் கூறினாள். "இந்தப் பெண்ணிற்குப் பைத்தியம் பிடித்திருக்கவேண்டும்" என என் தலைக்குள் அசரீரி ஒலித்தது. ஆனால் எனக்கும் இப்போது ஒரு தங்குமிடம் தேவை. சரி, அவளின் காதல் அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்! நான் அவளுக்கு நன்றி சொல்லி அந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டேன். பின்விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கும் நிலையில் நானில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவளின் வீட்டில் ஒரு 'குஷன்' இருக்கையில் உட்கார்ந்துகொண்டு அந்த அறையை நிறைத்திருந்த ஆடம்பரங்களை நான் நோட்டமிட்டேன். என்னைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் தலைவருக்குத் தேவையானளவு ஆடம்பரம் அங்கே கொட்டிக் கிடந்தது. தனது உடையை மாற்றிக்கொண்டு வந்த அவள் தன்னுடன் கடைவீதிக்கு வர விருப்பமா? எனக் கேட்டாள். நான் ஒரு விநாடியும் தாமதிக்காமல் குதித்தெழுந்து எனது பயணப் பையைத் திறந்தேன். பையினுள் எனது ஆயுதம் குண்டுகள் நிரப்பப்பட்டுத் தயாராகயிருந்தது; இது பற்றி அவளுக்குத் தெரியத் தேவையில்லை. நானும் எனது உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே புறப்படத் தயாரானேன். அந்தப் பெண் தான் ஒரு பெரிய துணிக்கடைக்குச் சொந்தக்காரியென்றும் தனது கடையில் இரண்டு அழகிய இளம் பெண்கள் விற்பனையாளர்களாக வேலை பார்ப்பதாகவும் சொன்னாள். சிறிது நேரத்தில் நாங்கள் அவளது கடையிலிருந்தோம். என் முன்னே விலையுயர்ந்த அழகிய ஆடைகள் குவிக்கப்பட்டன. அவளின் கடையிலிருந்த விற்பனைப் பெண்கள் கூட என்னைக் கண்களாலேயே விழுங்கிவிடுவது போல ஆசையுடன் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் மீண்டும் அந்தப் பணக்காரப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம். அந்தப் பெண் என்னிடம் "நாங்கள் மதுவருந்துவோம், கொஞ்ச நேரம் இசை கேட்டுத் தனிமையில் மகிழ்ந்திருப்போம், அதற்குள் பணிப் பெண்கள் உணவைத் தயார் செய்து விடுவார்கள்" என்றாள். அவள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறாள் என்பது எனக்குப் புரிந்து விட்டது. நான் இப்போது ஏதாவது ஒரு சாக்குப் போக்கைச் சொல்லி அவளுக்கும் எனக்குமான இடைவெளியை நீடித்துக் கொள்ளவேண்டும். எனது முந்தைய 'லூக்கயா' நகரத்து அனுபவம் இப்போது எனக்குக் கை கொடுத்தது. பொருத்தமான தருணத்தில்தான் நான் எனது பொய் மூட்டையை அவிழ்க்க வேண்டும். இதோ மெல்ல மெல்ல என்னை நெருங்கிய அந்தப் பெண் என்மேல் படுத்துக்கொண்டாள். என் பொய் மூட்டையை அவிழ்ப்பதற்கு இதுதான் சரியான சமயம்.&lt;br /&gt;&lt;br /&gt;"போர் முனையிலிருந்து வைத்திய சிகிச்சை பெறுவதற்காகவே ஒரு சில நாட்களுக்கு நான் இங்கு அனுப்பப்பட்டுள்ளேன். இங்கு நான் சிகிச்சை பெற வேண்டியுள்ளது. எனது - அந்த இடத்தில் - வாழைப்பழத்தில் சிறிது பிரச்சினையுள்ளது. நுனித் தோலைச் சிறிதளவு அகற்றினால்தான் பிரச்சினை சரியாகும் என வைத்தியர் சொல்லியுள்ளார்."&lt;br /&gt;&lt;br /&gt;உணவு தயாராவதற்காகக் காத்திருந்த நாங்களிருவரும் கொஞ்சம் அதிகமாகவே பியரைக் குடித்திருந்தோம். எனக்குத் தலை இலேசாகக் கிறுகிறுத்துக்கொண்டிருந்தது. சாப்பிடும் போது நாங்கள் ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசவில்லை. ஆனால் உணவை முடித்துக் கொண்ட போது அவள் என்மேல் அதிருப்தியாய் இருப்பது தெரிந்தது. என்னால் அவளது பாலியல் விருப்பத்தை நிறைவேற்ற முடியாதெனச் சொல்லிய பின்பும் என்னுடன் படுத்துக் கொள்வதிலேயே அவள் குறியாயிருந்தாள். அவள் என்னை இலேசில் விடுவதாயில்லை. எங்களது விவாதம் தள்ளுமுள்ளில் எங்களைக் கொண்டுபோய் விட்டபோது நான் மெல்ல எனது பயணப் பையைத் திறந்து ஆயுதத்தைக் கையிலெடுத்தேன். பணிப்பெண்கள் அலறத் தொடங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"வாயை மூடுங்கள்" எனக் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டே உறுமிய நான் "ம்! பணத்தை எடு!" எனக் கத்திக்கொண்டே வீட்டுக்காரியின் குரல் வளைக்குத் துப்பாக்கியை நிமிர்த்தினேன். அவள் தன் மார்பைப் பிடித்துக்கொண்டே தடதடவென ஓடிச்சென்று ஒரு சிறிய மேசையின் இழுப்பறையைத் திறந்து கை நிறையப் பணத்தை அள்ளி என் முன்னே நீட்டினாள். அவளது கையிலிருந்து பணத்தை ஒத்திப் பறித்துக்கொண்ட நான் அதன் பின்பு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருந்தேன். அவளைக் குறி பார்த்துத் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டேயிருந்த நான் சற்று நேரத்தின் பின்பு அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் விடியம் வரைக்கும் இங்கே வெளியில் தான் காவலிருப்பேன், எவராவது என்னைக் கோபப்படுத்தினால், இதோ! இது தான் பதில் சொல்லும்!" என சொல்லித் துப்பாக்கியைத் தூக்கிக் காட்டி விட்டு வாசற் கதவைத் திறந்து வெளியே வந்தேன். சிறிது நேரம் அங்கேயே நின்றுகொண்டு ஓரிரு தடவைகள் செருமி நான் அங்கேயே இருப்பதாக அவர்களுக்குக் காட்டிக்கொண்டேன். மெதுவாக வெளிப் படலையின் மேல் ஏறித் தெருவில் குதித்து நகரத்தினை நோக்கி நடந்தேன். யாராவது எனக்குக் குறுக்கே வந்தால், என்னை இடையூறு செய்தால் துப்பாக்கியைப் பிரயோகிக்கவும் தயாராகவே இருந்தேன். போராளி வாழ்கையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு மாறுவது என்பது எல்லாவற்றையும் விடக் கடினமானது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.26.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.26.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115695062481320531?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115695062481320531/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115695062481320531&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695062481320531'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115695062481320531'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/36.html' title='குழந்தைப் போராளி - 36'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115694892282088878</id><published>2006-08-30T16:42:00.000+02:00</published><updated>2006-08-30T16:42:02.846+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 35</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2025.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier%2025.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#000099;"&gt;&lt;strong&gt;யுத்தக் களைப்பு&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;&lt;em&gt;க&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;ம்பாலாவிலிருந்து பின்வாங்கிச் சென்ற எதிரிகளை உகண்டாவின் வடக்குப் பகுதிக்குத் துரத்தியடிக்க வேண்டுமென்ற கட்டளை ஐந்தாவது படையணிக்குப் பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கட்டளை எங்கள் எல்லோரையும் உற்சாகமிழக்கச் செய்து ஏமாற்றத்துள் தள்ளியது. கசிலிங்கி தனது ஐந்தாவது படையணியின் கட்டளைத் தளபதிப் பொறுப்பை யூலியஸ் அயினேயிடம் கையளித்துவிட்டார். யூலியஸ் அயினே தலைவர் முசேவெனி போலவே 'கீமா' இனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் உண்மையிலேயே மதிநுட்பம் வாய்ந்த மிகத் திறமையான தளபதி. அவர் தனது போராளிகளை முட்டாள்த்தனமாகச் சாகக் கொடுப்பதில்லை. 'கீமா' இனக்குழு ருவாண்டாவில் ஆழமான வேர்களைக் கொண்டது. உகண்டாவில் 'கீமா' இனக்குழுவினர் தமது கால்களை ஆழமாகப் பதித்திருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கசிலிங்கி இஸ்லாமியர், NRAயை உருவாக்கியவர்களில் ஒருவர், மக்களிடம் அழியாத புகழைப் பெற்றவர். உறுதியான, ஒரு சிங்கத்தைப் போலக் கம்பீரம் கொண்ட கசிலிங்கி 'பகண்டா' இனக் குழுவினரிடம் அபரிதமான செல்வாக்கைப் பெற்றிருந்தார். அவரின் மெய்காப்பாளர்கள் எல்லோருமே அதே இனத்தைச் சேர்ந்தவர்கள் தான். கம்பாலாவின் வீழ்ச்சிக்குப் பின் போர் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியது. மில்டன் ஒபோடே 'லாங்கோ' இனக் குழுவைச் சேர்ந்தவர். அவர் நாட்டின் வடபகுதியைச் சேர்ந்தவராதலால் வடக்கில் குறிப்பிடத்தக்க செல்வாக்குடையவர். வடக்கிற்குச் செல்லும் வீதிகள் மிக மோசமாயிருந்தன. எங்களின் முன்னாள் ஜனாதிபதி தனது உறவுக்காரர்களை எப்போதாவது வடக்கிற்குப் போய்ப் பார்த்தாரா என எங்களுக்குச் சந்தேகமாகயிருந்தது. எது எப்படியிருப்பினும் இந்த மோசமான வீதிகள் தான் எங்களது அடுத்த போர்க்களம்&lt;br /&gt;&lt;br /&gt;'கபு'ப் பாலத்தின் மீது நாங்கள் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத தாக்குதலொன்று எங்கள் மீது தொடுக்கப்பட்டது. எனது தைரியமெல்லாம் சடுதியில் எங்கோ பறந்து போய்விட்டது. இந்த முறை நான் எதிரியின் குண்டுகளிடமிருந்து தப்பிக்கப் போவதில்லை என நினைத்துக்கொண்டேன். அச்சத்தால் என் மேனி சில்லிட்டுப் போனது. கற்றோங்காப் போர்முனையின் அவலம் சுமந்த நினைவுகள் தூக்கத்தில் கூட என்னை விட்டகலவில்லை. சில நாட்களாகக் 'கபு'ப் பாலத்தின் மீது நடந்த உக்கிரமான சமரின் முடிவில் எதிரிகளை முறியடித்த நாங்கள் 'கறூமா'ப் பாலம் வரை எதிர்ப்பின்றிச் சென்றோம். கம்பாலா அரசினை வீழ்த்தினால் குழந்தைப் போராளிகள் போரிலிருந்து விடுவிக்கப்படுவோம், புதியதொரு ஒளிமயமான வாழ்வு எங்களிடம் கையளிக்கப்படும் என பற்பல வாக்குறுதிகளைக் குழந்தைகளான எங்களுக்கு NRA தலைமை வழங்கியிருந்தது. ஆனால் கம்பாலா அரசு வீழ்த்தப்பட்டு இத்தனை நாட்கள் ஆகியும் எந்தக் குழந்தையும் போரிலிருந்து விடுவிக்கப்படவுமில்லை எவரும் பாடசாலைக்கு அனுப்பப்படவுமில்லை. நாங்கள் ஒரு யுத்தமுனையிலிருந்து மறு யுத்தமுனைக்கு விரட்டப்பட்டுக் கொண்டேயிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கறூமா'வின் இயற்கை வனப்பில் நான் மனம் சொக்கிப்போனேன். போரின் கரங்களால் இதுவரை தீண்டப்படாத, சித்திரம் போன்ற அழகிய பாலம் தன்னைச் சுற்றிப் பசுமையைப் போர்த்திக் கொண்டு ஏகாந்தமாகக் கிடந்தது. கரை புரண்டோடும் நுரை பொங்கும் ஆறு பாலத்தின் கால்களைத் தழுவிச் சுழித்தோடிக்கொண்டிருந்தது. அங்கேயிருந்த அமைதி என் உள்ளத்திலும் புகுந்துகொண்டு ஏதோவோரு கணத்தில் அது போர் மீதான வெறுப்பாக மாறியது. இரத்த ஆறுகளைப் போதியளவு நான் பார்த்துவிட்டேன். இனியும் என்னால் இரத்த ஆறுகளைக் கடக்க முடியாது. நான் புதியதொரு வாழ்க்கையைத் தேடிக்கொள்ள வேண்டும். அமைதியைக் கண்டடைவதற்கு நான் முயற்சிக்க வேண்டும். இந்தத் தொடர் சிந்தனைகளின் முடிவில் நான் போராளி வாழ்க்கையிலிருந்து தப்பியோடத் திட்டமிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;போர்முனைக்கு அனுப்பப்படாமலிருக்க வேண்டுமாயின் நான் நோய்வாய்ப்பட வேண்டும். ஒரு சிகரட்டை உதிர்த்து வாயில் போட்டு விழுங்கிவிட்டு எனது சார்ஜனை நோக்கி ஓடிப்போய் அவரது காலடியிலேயே நான் வாந்தியெடுத்தேன். அவருக்கு எனது வாந்தியைப் பார்த்ததும் வயிற்றைப் புரட்டி அவரும் வாந்தியெடுத்தார். இருவரும் வாந்தி எடுத்து முடித்த பின்பு நான் சார்ஜனிடம் "மலேரியாக் காய்ச்சல் பரவுகிறது என்று நினைக்கிறேன்" எனச் சொன்னேன். அது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக முடிந்தது. உடல் வெப்பமானியை எடுத்துத் தனது உடல் வெப்பநிலையை அளந்துகொண்ட சார்ஜன் எனது வெப்ப நிலையையும் அளந்து பார்த்தார். எனது உடலில் காய்ச்சலுக்கான எந்த அறிகுறியும் காணப்படாததால் சார்ஜன் என் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே "நீ பொய் சொல்கிறாய்...தலைமை முகாமிற்குத் திருப்பி அனுப்பப்படுவாய் என்ற எண்ணத்தில் நீ இந்தப் பொய்யைச் சொல்லியிருந்தால் அது நடக்கப் போவதில்லை" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நானும் எளிதில் எனது காய்ச்சல் நாடகத்தை விட்டு விடுவதாக இல்லை. சிறு தந்திரங்களிலும் ஏமாற்றுக்களிலும் திறமையான ஒரு தோழனின் உதவியை நான் நாடிச் சென்றேன். அவன் என்னிடம் ஒருவர் தனது மூத்திரத்தைத் தானே குடிப்பதன் மூலம் காய்ச்சலை வருவித்துக் கொள்ளலாமெனச் சொன்னான். இவன் என்னைக் கேலி செய்கின்றான் என நினைத்துக்கொண்டே அவனது முகத்தைக் கூர்ந்து கவனித்தேன். அவனின் முகத்தில் எந்தக் குறும்பும் தெரியவில்லை. யுத்தமுனைக்கு எக்காரணத்தைக் கொண்டும் செல்லக் கூடாது என்பதில் நான் மிக உறுதியாயிருந்தேன்.எனவே இந்த அருவருப்பான உபாயத்தையும் ஒருமுறை முயன்று பார்த்து விடுவதென முடிவெடுத்தேன். ஒரு சிறு பாத்திரத்துடன் மறைவிடத்திற்குப் போனேன். அதனை நிரப்புவது பெரிய பிரச்சனையல்ல, இனித்தான் சிக்கலேயிருக்கிறது. முதலாவது மிடறு குடித்ததுமே மீண்டும் வாந்தி எடுத்தேன். இதை எப்படிக் குடிப்பதாம்? இது ஏமாற்று வேலை! அவன் என்னை ஒரு மடைச்சியாக்கி விட்டான்! அவனைத் துண்டு போடும் கோபத்துடன் அவனைத் தேடினேன்.அவன் மீது பாய்ந்து பற்களால் கடித்தும் நகத்தால் பிறாண்டியும் அவனைத் தாக்கினேன். அது பார்வையாளர்களுக்கு மிகவும் விறுவிறுப்பான காட்சி. இறுதியில் மூத்த போராளி ஒருவர் எங்களை விலக்கி விட்டார். எனது இரண்டாவது பிழையையும் நான் அழுதுகொண்டே செய்தேன். அவன் என்னை என்ன செய்யச் சொன்னான் என்பதைச் சபையில் சொன்னேன். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்க எனக்காக நானே வெட்கப்பட நான் தனியிடம் தேடிச் சென்றேன். அங்கேயும் அந்த ஏமாற்றுக்காரன் என்னைத் தேடி வந்து "நாங்கள் மீண்டும் நண்பர்களாகவே இருப்போமா?" எனக் கேட்டான். இவனை மன்னிப்பதா இல்லையா என்ற யோசனையுடன் நான் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவன் பல தடவைகள் மன்னிப்புக் கேட்டதுடன் இந்தப் பிரச்சினை முடிவிற்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் ஒரு லொறி கறூமாவிலிருந்து கம்பாலாவிற்குச் செல்வதாகக் கேள்விப்பட்டேன். அந்தச் சந்தர்ப்பத்தினை நழுவ விடாது லொறிச் சாரதியைத் தேடிப் பிடித்து அவருக்கு எனது நிலையைத் தெரிவித்தேன். எனது நல்ல நேரம் போலும் அவரும் எனக்கு உதவுவதாக வாக்களித்தார். அடுத்த நாள் காலையில் முகாமிற்குச் சற்றுத் தொலைவில் அவருக்காகக் காத்திருந்தேன். லொறியைக் கண்டதும் அதனுள் ஒரே பாய்ச்சல், ஏதோ சொர்க்கத்தையே நோக்கிப் பயணிப்பது போல ஆனந்தத்துடன் நான் கம்பாலா நோக்கிப் பயணித்தேன். NRA யில் சேர்ந்ததிலிருந்து இன்றுவரை என்னுடன் கூடவேயிருந்த உயிர் குறித்த அச்சம் இப்போது என்னுள் முற்றாகத் தணிந்திருந்தது. சொர்க்கத்தில் கூடக் கெட்ட கனவுகள் வரும்போலும், நான் தூக்கத்தில் உளறியிருக்க வேண்டும். யாரோ எனது தலையை மென்மையாக வருடினார்கள். முதுகில் கனத்த என் சுமையுடன் லொறியிலிருந்து சடுதியிற் கீழே குதித்தேன். மீண்டும் தனியாக வீதியில் நடக்கத் தொடங்கினேன். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.25.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.25.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115694892282088878?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115694892282088878/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115694892282088878&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115694892282088878'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115694892282088878'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/35.html' title='குழந்தைப் போராளி - 35'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115643242526631252</id><published>2006-08-26T18:16:00.000+02:00</published><updated>2006-08-26T18:19:26.220+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 34</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier36.1.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier36.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#33cc00;"&gt;கம்பாலா வீழ்ந்தது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#99ff99;"&gt;&lt;strong&gt;க&lt;/strong&gt;&lt;/span&gt;ற்றோங்காவின் இரத்த ஆறு காய்வதற்கு முன்னமே மீண்டும் ஓர் இரத்த ஆற்றை சிருட்டிப்பதற்காக நாங்கள் பிரதான சாலை வழியாக "நடத்தி"ச் செல்லப்பட்டோம். கண்கொண்டு பார்க்குமிடமெல்லாம் குருதி வெள்ளம். எதிரிகளின் பிரேதங்களை நாய்கள் சுவைத்துக்கொண்டிருந்தன. இந்தக் காட்சி என் மனதில் அப்போது எந்தவிதச் சலனத்தையோ இரக்கத்தையோ அருவருப்பையோ ஏற்படுத்தவில்லை. இந்த இராணுவத்தினர் தானே எனது தோழர்களை கொன்றவர்கள் என நினைத்துக்கொண்டேன். என்டபே சர்வதேச விமான நிலையத்தையும் கம்பாலாவையும் இணைக்கும் நெடுஞ்சாலையைக் கைப்பற்ற எங்களின் படை நகர்ந்துகொண்டிருந்த போது அரச படையினரின் எறிகணை வீச்சுக்கள் எங்களைச் சற்றே வழி மறித்தன. அவர்களின் மோட்டார்த் தாக்குதலை முறியடிக்க நாங்கள் 37 கலிபர் ஆட்டிலரியால் ஓர் எறிகணை மழையே பொழிந்தோம். ஆட்டிலரித் தாக்குதலுக்கு முன்னால் நின்று பிடிக்க முடியாத எதிரி இராணுவம் நிலை குலைந்து விக்ரோறியா ஏரிப்பக்கம் சிதறி ஓடிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து போரிட்டுக்கொண்டிருந்த எங்களால் இந்தப் போர் எப்போது முடிவுறும் என்பதை அனுமானிக்க முடியவில்லை. இன்னும் சில கிலோ மீற்றர்கள் தொலைவை நாங்கள் வெற்றிகரமாகக் கடந்து விட்டால் கம்பாலா எங்களிடம் வீழ்ந்து விடும் என்ற புதிய நம்பிக்கை எங்களை இயக்கிக்கொண்டிருந்தது. எங்களின் எதிர்காலமென அவர்கள் வாக்களித்த பூமி எங்களின் கையெட்டும் தொலைவில் தானிருந்தது. என்டபே - கம்பாலா நெடுஞ்சாலையில் நிலைகொண்ட எங்கள் படையணி சர்வதேச விமான நிலையத்திற்கும் கம்பாலாவிற்குமான அரச படையினரின் போக்குவரத்தைத் துண்டித்து விட்டது. எதிரியும் நாங்களும் இன்னொரு முறை நேருக்கு நேராகச் சந்தித்துக் கொள்ள வெகு நேரமாகவில்லை. தொடர் தோல்விகளால் வெகுண்டிருந்த எதிரிகளின் மொத்தப் பலமும் எங்கள் எதிரே குவிக்கப்பட்டிருந்தன. அசைந்து வரும் ஆயுதக் கிடங்காக எதிரி இராணுவம் அணிவகுத்து வந்துகொண்டிருந்தது. நாங்களும் எங்கள் உயிர்களைப் பணயம் வைத்து யுத்தம் செய்ய ஆயத்தமாயிருந்தோம். எங்களது கட்டளைத் தளபதி கசிலிங்கி இன்னும் சில NRA படையணிகளிடம் உதவியைக் கோரிச் செய்தி அனுப்பியிருந்தார். அந்தப் படையணிகள் இன்னும் போர் முனைக்கு வந்து சேரவில்லை. பின் நாட்களில் கசிலிங்கியுடன் எனக்குக் கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டிருந்தாலும் அன்று அவர் சொன்ன வார் த்தைகளுக்கு இன்றும் நான் நன்றியுடையவள். "உங்களில் ஒருவர் தன்னும் இந்தப் போரில் இறப்பதை நான் விரும்பவில்லை துணிவுடன் போரிடுங்கள், ஆனால் உங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்" என்றார் கசிலிங்கி. நாங்கள் எல்லோருமே பல சண்டைகளிலிருந்து உயிருடன் மீண்டிருந்தாலும் இந்தச் சமரிலிருந்து உயிர் தப்பிப் பிழைத்தோமானால் அது பேரதிசயமாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/F1400011.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/F1400011.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சில வாரங்கள் தொடர்ந்த போரின் முடிவில் எதிரியின் வலுவான படைகள் எங்களின் உக்கிரமான தாக்குதல்கள்களால் சின்னாபின்னமாகின. எங்கள் முகங்களில் மகிழ்வும் பெருமிதமும் பொங்கி வழிந்தன. கம்பாலாவை நோக்கிய எங்களது வெற்றி அணிவகுப்பில் எந்தத் தடைகளுமில்லை. செல்லும் கடை வீதிகளில் எல்லாம் நாங்கள் எதை எடுத்தாலும் கேட்பார் யாருமில்லை. ஆனாலும் நாங்கள் யாருமே எதையுமே எங்களுக்கென்று எடுத்துக்கொள்ளவில்லை. இனி முழுக் கம்பாலா நகரமுமே எங்களுடையது தானே! கம்பாலா நோக்கிய பயணத்தில் நான் எப்படி மகிழ்ச்சியில் தத்தளித்தேன் என்பது எனக்கு இன்னும் நன்றாக நினைவிருக்கிறது. நிரந்தரமான வீடும் தரமான கல்வியும் ஒளிமயமான எதிர்காலமும் எனக்காகக் கம்பாலாவில் காத்திருக்கலாம். இவையெல்லாம் நிச்சயமாகவே எங்களுக்குக் கிட்டுமென முசேவெனி எங்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அரச இராணுவத்தினரின் அட்டூழியங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டேன். இந்நகரத்தின் குடிமக்கள் இராணுவத்தினரால் எத்தனை தடவைகள் அடித்து உதைக்கப்பட்டிருப்பார்கள்! ஒவ்வொருவரும் மூன்று முறை இறப்பதற்குச் சமனாகச் சித்திரவதைப்பட்டிருப்பார்கள். அடி&lt;br /&gt;உதைகளின் பின்னால் மக்கள் நாய்களுக்கு உணவாகத் தெருக்களில் வீசி எறியப்பட்டனர். இன்றோ தெருக்களில் அரச படையினரின் மரண ஓலம் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வீதிகள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தன. உயிருடன் பிடிபட்ட எதிரிகளின் கழுத்துக்களில் எரிந்துகொண்டிருக்கும் 'ரயர்'கள் மாலைகளாக அணிவிக்கப்பட்டன. நான் எனது கண்களையும் காதுகளையும் 'மூடி'க்கொண்டு நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பாலா பூவுலகின் சொர்க்கம் என எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்த வனப்புக்கள் எங்குதான் போயின? ஏமாற்றங்களைப் பெரிதுபடுத்த எங்களுக்கு நேரமிருக்கவில்லை. நகரின் மத்தியினை நாங்கள் அடைந்தபோது கம்பாலா இனி எங்களது நகரம், எவராலும் எங்களை இங்கிருந்து அசைக்க முடியாது என்பதை உறுதி செய்யும் சம்பவங்கள் நிகழலாயின. மக்கள் ஆயிரக்கணக்கில் எங்களை வரவேற்பதற்காகக் கூடியிருந்தனர். அவர்கள் கண்ணீர் விட்டழுதும் முழந்தாளிட்டும் குழந்தைகளான எங்களுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர். மூத்த போராளிகளுக்கும் அவர்களது வாழ்த்துக்கள் கிடைத்தன. உகண்டாவிலேயே முதல் முறையாக ஆயுதங்களை ஏந்திய பெண்கள் ஆண்களுக்கு இணையாகக் கம்பீரமாக அணிவகுத்து வந்துகொண்டிருந்த காட்சி மக்களைப் பரவசமடையச் செய்திருந்தது. பல போராளிகளின் முகங்களில், குறிப்பாகக் குழந்தைப் போராளிகளின் முகங்களில் இப்போது மூர்க்கமோ அச்சமோ தென்படவில்லை. எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கைகள் அவர்களது ஆன்மாக்களை நிரப்பியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;நானோ எல்லாவற்றிலும் சந்தேகமுறப் பழகியிருந்தேன். எல்லாம் முடிந்து விட்டதென என்னால் நிம்மதியடைய முடியவில்லை. ஆபத்தும் துயரமும் என்னைத் தொடர்ந்து கொண்டேயிருக்குமென என் உள்ளுணர்வு சொல்லிற்று. எனது பட்டறிவு என்னை எப்போதும் கைவிட்டதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.24.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.24.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115643242526631252?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115643242526631252/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115643242526631252&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643242526631252'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643242526631252'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/34.html' title='குழந்தைப் போராளி - 34'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115643238809467747</id><published>2006-08-24T18:22:00.000+02:00</published><updated>2006-08-26T18:17:18.126+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 33</title><content type='html'>&lt;p align="right"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/csoldiers73.jpg"&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2032.8.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier%2032.5.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;எரிந்து கொண்டிருக்கும் நேரம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#ffccff;"&gt;ஒ&lt;/span&gt;&lt;/strong&gt;ருநாள் காலை அணிவகுப்புடன் எங்களின் விடுமுறை முடிவுக்கு வந்தது. அணிவகுப்பின் முடிவில் நாங்கள் மீண்டும் யுத்த முனைகளுக்குச் செல்ல வேண்டும் என்பது எங்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது. அணிவகுப்பு முடிவடைந்ததும் போராளிகள் குழுக்களாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நாங்கள் கடந்து வந்த யுத்த களங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். இப்படிப் பேசிப் பேசியே எங்களது அச்சத்தை வெல்ல முயன்றோம். ஒருவருக்கு மற்றவர் தைரியத்தைச் சொல்லிக்கொண்டோம். நாங்கள் சந்தித்த கடைசிப் போர்தான் நடந்தவைகளுக்குள் மிகவும் கடுமையான போர் என்பதாய் நாங்கள் சொல்லிக்கொள்வோம். அந்தப் போரிலேயே உயிர் தப்பிய நாங்கள் நடக்கவிருக்கும் சிறிய யுத்தமான 'கற்றோங்கா' போரில் உயிர் தப்புவது நிச்சயமென ஒரு தருக்கத்தைக் கற்பித்துக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றோங்கா தாக்குதலை யார் நெறிப்படுத்துவது என்பதை ஒன்றில் முசேவெனி அல்லது ஸலிம் சலேம் அறிவிக்க வேண்டும். ஐந்தாவது படைப்பிரிவின் தலைமை அதிகாரியும் போர் அனுபவங்கள் நிறைந்தவருமான அகமட் கசிலிங்கியிடம் எங்களது படையை வழி நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கற்றோங்காவை நோக்கி நகர்ந்து அங்கிருந்து சர்வதேச விமான நிலையமான 'என்டபே'யைக் கைப்பற்ற அவர் முசேவெனியால் பணிக்கப்பட்டார். யுத்த முனைக்குப் புறப்படுமாறு எங்களுக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;p align="left"&gt;குழந்தைப் போராளிகளெல்லாம் தயார் நிலையில் அணிவகுத்து நின்ற்னர்.&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/csoldiers73.0.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/csoldiers73.jpg" border="0" /&gt;&lt;/a&gt; குழந்தைப் போராளிகளின் முன் வரிசையில் நான் எனது Uzi துப்பாக்கியுடன் நின்றிருந்தேன். எங்ளிடமிருந்த சுறுசுறுப்பு வளர்ந்தவர்களிடம் இருக்கவில்லை. வாகனம் ஓட்டுவோர் அங்குமிங்குமாக அலைந்து கொண்டு வாகனங்களைச் சரி பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விடியற் காலையிலேயே மூக்கு முட்டக் குடித்திருக்கிறார்கள் எனபது அவர்களின் கண்களிலே தெரிந்தது. அதிகாரிகளோ அப்போதுதான் துயில் கலைந்திருந்தனர். எழுந்த வீச்சிலேயே அவர்களும் மதுவை நன்றாகக் குடித்திருந்தனர். முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்களென்ற பாகுபாடுகள் இல்லாமல் எல்லோருமே குடி வெறியில் இருந்தனர். நாங்கள் கற்றோங்காவை நோக்கி நகரத் தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இலக்கை வந்தடைந்த பின்பும் எங்களால் தாக்குதலை ஆரம்பிக்க முடியவில்லை. மதுவின் சாரம் தளபதிகளின் தலைகளிலிருந்து இறங்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.எங்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் 'கற்றோங்கா' ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் குறுக்காகக் கட்டப்பட்டிருந்த பாலத்தின் மறு முனையில் அரச படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். எங்களது வரவை எதிர்பார்த்து அவர்களின் பீரங்கிகளின் வாய்கள் பாலத்தை நோக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.பீரங்கிகளின் வாய்களுக்கு நேராக குழந்தைப் போராளிகளின் படைப் பிரிவை எங்களின் தளபதிகள் நிறுத்தி வைத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சில மணி நேரங்களில் துப்பாக்கிச் சண்டை ஆரம்பமாகிவிட்டது. பாலத்தின் ஒரு முனையில் நாங்களும் மறு முனையில் இராணுவமுமாகப் போரிட்டுக் கொண்டிருந்தோம். ஆனால் யாருமே அந்தச் சிறிய பாலத்தைக் கடப்பதற்கான முயற்சியை எடுக்கவில்லை. அது உண்மையிலேயே தற்கொலைக்குச் சமமானது. நான்கு மாதங்களாகப் போர் எவருக்கும் வெற்றி தோல்வியில்லாமல் தொடர்ந்துகொண்டிருந்தது. நான்காவது மாதத்தின் முடிவில் உடனடியாகப் பாலத்தைக் கைப்பற்றித் தொடர்ந்து முன்னேறுமாறு எங்களின் படைத் தளபதி அகமட் கசிலிங்கிக்குத் தலமைப் பீடத்திலிருந்து கட்டளையிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதை அறிந்ததும் அந்தச் செய்தியை என்னால் நம்பவே முடியாமலிருந்தது. ஆனாலும் அந்தச செய்தி முற்றிலும் உண்மைதான். தலைவர் முசேவெனி அல்லது அவரது சகோதரருக்குத்தான் இந்தக் கட்டளையைப் பிறப்பிக்கும் அதிகாரம் இருந்தது. நாங்கள் எவ்வாறான ஒரு பொறிக்குள் சிக்கியிருக்கிறோம் என்பதை அவர்கள் இருவரும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். எங்களின் உயிர்களைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை? வெற்றிக்காக எத்தனை குழந்தைகளை வேண்டுமானாலும் நரபலி கொடுக்க அவர்கள் ஆயத்தமாயிருந்தார்கள்.&lt;br /&gt;பாலத்தைக் கைப்பற்றுவதற்கான சமர் ஆரம்பமாயிற்று. நாங்கள் பீரங்கிகளின் வாய்களுக்குள் நுழைந்து புறப்பட்டோம். என்னைச் சுற்றி மனிதர்கள் ஈசல்களாய் எரிந்து வீழ்ந்தனர். பிணங்களின் நடுவில் நின்று எங்களின் தளபதி "முன்னேறு!- எல்லோரும் முன்னோக்கிச் செல்லுங்கள்!" என உறுமிக் கொண்டிருந்தார். துப்பாக்கி குண்டுகள் சரமாரியாகப் பறந்து கொண்டிருக்க கிரனேட்டுகள் அதிர்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. என் தோழனொருவன் வெடி வாங்கி விழுந்ததை நான் கண்டேன். அவனை நாங்கள் "ஸ்ரிக் கொமாண்டோ" என அழைப்போம். அவன் உதவி கேட்டுக் கெஞ்சியது எல்லோரது காதுகளிலும் விழுந்தது. எங்களில் ஒருவரால் கூட அவனுக்கு உதவ முடியவில்லை. "முன்னேறு" என்ற கட்டளை எங்களது பிடரிகளைப் பிடித்துத் தள்ளியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆச்சரியம்! எதிரியைப் பின்வாங்க வைத்துவிட்டோம்! ஆனால் எவ்வளவு உயிர்களைப் பறிகொடுத்து விட்டோம்! இறந்து கிடந்த எதிரிகளின் உடல்களை எனது தோழர்கள் கைகளால் அறைந்தும் கால்களால் உதைத்தும் கத்திகளால் கீறியும் தங்களது ஆத்திரங்களைத் தணித்துக்கொண்டிருந்தனர். எதிரிகளைப் போலவே எனது தோழர்களும் பெருமளவில் இறந்து போயிருந்தார்கள். ஆனாலும் நான் அழ மறுத்தேன். எனது உணர்சிகளை நான் எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஒரு துளி கண்ணீர் கூட என்னை முற்றாக நிலை தடுமாறச் செய்து விடலாம். எனது விழிகளிலிருந்து கண்ணீர் விழவில்லை என்றாலும் எனது உணர்வுகள் எனது தோழர்களைப் போலவே மரித்துப் போய்விடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பெரும்பாலான குழந்தைப் போராளிகள் கொலைகளைச் செய்வதிலும் சித்திரவதைகளைப் புரிவதிலும் இன்பம் காண்பவர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு கொடூரமான சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையை நிறைவேற்றிய பின் குழந்தைப் போராளிகள் கூடி நின்று ஒன்றுமே நடவாதது போல சர்வ சாதாரணமாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். தங்களுள்ளேயே 'ரம்போ' ,'சொக் நொறிஸ்' எனப் பட்டங்களையும் வழங்கிக் கொள்வார்கள். இந்தப் போக்கு எனக்கு ஒத்து வருவதாயில்லை. மற்றவர்கள் மீது இரங்கும் எனது குணம் எனக்கே என் மேல் கோபத்தை வருவிக்கும். எதிரிகள் மேற் கூட இரக்கம் காட்டும் எனது குணத்தைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டியிருந்தது. ஏனெனில் எனது தோழர்கள் என்னைச் சூழவர இறந்து கிடந்தனர். ஒன்றில் எனது தனி மனித உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கும் தூய சிறுமியாக நானிருக்க வேண்டும். அல்லது முற்று முழுவதாக உணர்வுகள் மரத்துப் போன ஒரு மனித வெடிகுண்டாக நானிருக்க வேண்டும். இந்த இரண்டில் நான் எந்த நிலையை எடுப்பது? இப்படியானதொரு நிலையில் என் போன்ற ஒரு சிறுமிக்கு சரியாக முடிவெடுக்கும் பக்குவம் இருக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;இபோதெல்லாம் AK 47 துப்பாக்கியுடன் ஒவ்வொரு குழந்தையும் மூன்று ரவைக் கூடுகளை அணிந்து கொள்கிறார்கள். சிலர் ஆறு ரவைக் கூடுகளைக் கூடக் கட்டியிருப்பார்கள். இந்தச் சுமையைப் பற்றி எங்களுக்கும் கவலையில்லை. எங்கள் தலைவர்களுக்கும் கவலையில்லை. எந்தப் பாரத்தைச் சுமந்தாவது என்ன வித்தை காட்டியாவது தலைமையின் கவனத்தைப் பெற்று விடுவதில் குழந்தைகள் கண்ணும் கருத்துமாயிருந்தார்கள். கனமான இந்தத் துப்பாக்கிகள் எங்களுக்குத் தாயின் அரவணைப்பைப் போன்றன. நாங்கள் உயிரை விட்டாலும் விடுவோமே தவிர ஒரு கணமும் துப்பாக்கியை விட்டுப் பிரிய மாட்டோம். துப்பாக்கி இல்லாத நாங்கள் முழுமையற்ற பிறவிகள். உங்களின் இந்த அவல நிலை குறித்து உங்கள் தளபதிகள் கொஞ்சமேனும் கவலை கொள்வதில்லையா? என நீங்கள் கேட்கக் கூடும். அவர்கள் முசேவெனியின் விருப்பங்களைப் பிழை படாமல் நிறைவேற்றும் கவலைகளில் மூழ்கிக் கிடந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப் போராளிகள் முசேவெனியின் கண்டுபிடிப்பு. அவர் தனது மந்திரக்கோலை ஆகாயத்தை நோக்கி நிமிர்த்திப் பிடித்து "போர்" எனக் கட்டளையிடுவார். குழந்தைப் போராளிகளும் போரிடுவர். மீண்டும் மீண்டும் அவரின் கறுப்பு வெள்ளை மந்திரக்கோல் ஆகாயத்தை நோக்கி உயர்ந்து கொண்டிருந்தது. "குழந்தைகளே உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை எனக்குக் காட்டுங்கள்" என எங்களின் தலைவர் புன்னகைப்பார். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.23.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.23.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115643238809467747?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115643238809467747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115643238809467747&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643238809467747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643238809467747'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/33.html' title='குழந்தைப் போராளி - 33'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115643148856541827</id><published>2006-08-24T17:36:00.000+02:00</published><updated>2006-08-24T17:39:44.743+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 32</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier33.7.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier33.4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff6666;"&gt;போரும் விடுப்பும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;color:#3333ff;"&gt;இ&lt;/span&gt;&lt;/strong&gt;துவரை யுத்தம் - மரணம் - அழிவு ஆகியவற்றைப் பற்றி நிறையவே சொல்லிவிட்டேன். எனினும் என் கதையில் இடையிடையே ரசமான சம்பவங்களும் நடைபெறாமலில்லை. நாங்கள் ஆயுதங்களைத் தாங்கி மரணத்தைத் தேடிச் சென்றுகொண்டிருக்கும் தருணங்களில் கூடப் பகடி சேட்டைகள் செய்யத் தவறுவதில்லை. இந்தப் பகடிச் சம்பவம் நாங்கள் லுக்காயா எனும் சிறு நகரத்தில் தங்கியிருந்தபோது நிகழ்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தத்துக்கு நடுவே, சில நாட்களுக்கு அரிதாகக் கிடைத்திருந்த ஒய்வை அந்தச் சிறு நகரத்தில் நாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருந்தோம். சாலையோரத்து மர நிழலில் நானும் தோழர்களும் குந்தியிருந்து சாலையில் போய் வருபவர்களைக் கவனித்துக்கொண்டிருந்தோம். அப்போது பருத்த தேகங்களைக் கொண்ட மூன்று பெண்கள் எங்களை நெருங்கி எங்களை மதுவருந்த வருமாறு அழைத்தனர். என்னையும் ஓர் ஆண் என்றே அவர்கள் நினைத்திருந்தனர். ஒர் ஆணாகத் தோற்றமளிப்பதில் எனக்கும் மகிழ்சியாகவேயிருந்தது. எனது தோழர்களிடம் இது பற்றி ஒன்றும் பேச வேண்டாமெனக் கேட்டுக்கொண்டேன். அவர்களும் நமட்டுச் சிரிப்புடன் தங்கள் வாய்களை மூடிக்கொண்டார்கள்.&lt;br /&gt;மதுச்சாலையில் மேசை மேல் எதை வைத்தாலும் நாங்கள் குடித்துக் கொண்டேயிருந்தோம். மது அருந்துவது அதுதான் எங்களுக்கு முதல் முறை. மதுச்சாலையில் இருந்தவர்களுக்கும் எங்களை நன்றாகப் பிடித்துக்கொண்டது. எங்களிடம் சிரிப்புக்குப் பஞ்சமே இல்லை. அங்கிருந்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு எங்களுக்கு மதுவை வாங்கிக் கொடுத்துக் கொண்டேயிருந்தனர். போதை ஏறுவதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் மேலதிகாரிக்கு நாங்கள் அஞ்ச வேண்டியதில்லை. எங்களைக் கண்காணிப்பதை விட அவருக்கு வேறு 'முக்கியமான' வேலைகளிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;போதை தலைக்கேறிய நிலையில் எங்களைக் கூட்டி வந்த பெண்கள் எங்களைத் தடவத் தொடங்கினர். என்னைத் தடவிக் கொண்டிருந்த பெண் 'உண்மை'க்குப் பக்கத்தில் வருவதற்கு முன்னமே நான் அவளின் கையைத் தட்டி விடுவேன். அவள் சிரித்துக்கொண்டே "பெண்களைக் கண்டு நீ பயப்பிடுகிறாய்" எனச் சொன்னாள். எனது தோழர்கள் குழாமோ விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தது. அவர்களது நிலைமையும் அவ்வளவு நன்றாக இருக்கவில்லை. ஆனாலும் நாங்கள் பொறுமையுடன் சமாளித்துக்கொண்டிருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களோ பொறுமையை இழந்துகொண்டிருந்தனர். அவர்களால் எங்கள் தொடைகளுக்கு நடுவே தடவாமல் இருக்க முடியவில்லை. நாங்களும் பொறுமையிழந்து விட்டோம். ஆத்திரம் தலைகளுக்கேற எழுந்து துப்பாக்கிகளை நீட்டி எங்களைத் தொந்தரவு செய்யக் கூடாதென அந்தப் பெண்களை மிரட்டினோம். அந்தப் பெண்கள் வெலவெலத்துப் போய்விட்டனர். இந்த நேரத்தில் ஒரு மூத்த போராளி மதுச்சாலைக்குள் நுழைந்தார். அவரது வாய் ஆச்சரியத்தில் திறந்து மூடிக் கொண்டதை என்னால் கவனிக்க முடிந்தது. வந்த வேகத்தில் திரும்பிக் கீழே தடுக்கி விழுந்து எழுந்து சென்ற அவர் ஒரு நொடியில் ஒரு அதிகாரியையும் அழைத்துக்கொண்டு மீண்டும் மதுச்சாலைக்குத் திரும்பி வந்தார். அதிகாரியோ முழு மப்பில் இருந்தார். அவர் தள்ளாடிக்கொண்டே "பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்யாதீர்கள்" என எங்களுக்கு அறிவுரை சொல்ல எங்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.&lt;br /&gt;மதுச்சாலைக்கு வெளியே எங்களை அழைத்து வந்த அதிகாரி "என்ன நடந்தது?" என விசாரித்தார். "அந்தப் பெண்கள் எங்களைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்" என்றோம். அதை அவர் அப்படியே நம்பி விட்டார். அவரால் எங்களது செய்கையைப் புரிந்து கொள்ள முடிந்தது. "ஒரு குழந்தைக்குத் தைரியத்தையும் தன்நம்பிக்கையையும் ஆயுதம் மட்டுமே வழங்கும்" எனச் சொன்னவர் திடீரென வீதியின் நட்ட நடுவாகக் குந்திக்கொண்டு அடக்க மாட்டாமல் சிரிக்கத் தொடங்கினார். என்னைக் காட்டிக்கொண்டே "சைனாவையும் பலாத்காரம் செய்ய முயன்றார்களா?" எனக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வீதிப் புழுதியில் விழுந்து கிடந்து சிரித்த அவரின் சிரிப்பு அடங்கியதும் நாங்கள் இன்னொரு மதுச் சாலையினுள்ளே போனோம் . திரும்பவும் அதே கதை தான். பல பெண்கள் எங்களைத் தேடி ஓடி வந்தனர். இங்கே என்னை வளைக்க முயன்ற புதிய பெண் வெகு அவசரக்காரியாக இருந்தாள். "உனது கவர்ச்சியான சிரிப்பு என்னை மயக்குகிறது, நீ என் அன்புக்குரிய பையன்" என்றெல்லாம் அவள் என்னிடம் புலம்பத் தொடங்கிவிட்டாள். எங்களுடன் கூடவே வந்திருந்த அதிகாரி அவளின் அலம்பலைக் கவனித்துவிட்டு நான் ஆணல்ல என்ற உண்மையை அவளின் தலையில் போட்டு உடைத்து விட்டார். அதன் பின்பு அங்கே நடந்தது நாங்கள் களத்தில் எதிரியைத் தாக்கும் வேகம், தீவிரம் என்பவற்றை ஒத்திருந்தன. அவள் எழுந்து சுற்றிச் சுற்றி நடந்து மேலும் கீழுமாக என்னை வெறித்துப் பார்த்தாள். பிடரியைச் சிலிர்த்துக்கொண்டு தாக்குதலுக்குத் தயாரான சிங்கம் ஒன்றைப் போல அவள் நின்றாள். ஆத்திரத்தில் அவள் துள்ளியபோது அவளது கனத்த முலைகள் மேலும் கீழுமாகத் துள்ளி விழுந்தன. அவளது வலிய தேகத்துக்குள் சிக்கி நான் நசுங்காமலிருக்க வேண்டுமானால் நான் இப்போது ஓட வேண்டும். அவளது ஆங்காரம் தோய்ந்த கர்ச்சனை என் முதுகுப்புறத்திலிருந்து கேட்டது. அவளது கூச்சலில் மதுச்சாலையின் கண்ணாடிகள் கூட உடைந்திருக்கலாம். என்னால் எவ்வளவு வேகமாக ஓடமுடியுமோ அவ்வளவு வேகமாக வெளியே ஓடினேன். என்னைத் துரத்தி வந்த அவள் தன்னிலும் பார்க்கத் தனது இரை வேகமாக ஓடும் வல்லமையுள்ளது என்பதைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்.அவளின் கூச்சல் தேயத் தொடங்கியது. அவள் தனது திசையை மாற்றிக்கொண்டு வீதியில் ஒதுக்குப்புறமாயிருந்த இன்னொரு மதுச்சாலைக்குள் புகுந்து கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென எனது உற்சாகம் வடிந்து என்னுள் சினம் மூண்டது. இந்தச் சம்பவம் இன்னுமொரு பெண்ணைக் குறித்து என்னைச் சிந்திக்க வைத்தது. எனது தாயும் இப்படிச் செய்வாளா? கோபம் என் தலைக்கேறியது. எனது துப்பாக்கியால் எல்லோரது வாயினுள்ளும் சுட வேண்டுமென்ற வெறி வந்தது. என்னை நானே அடக்கிக்கொண்டேன். இந்தக் கொண்டாட்டங்களும் கூச்சல்களும் காதில் விழாத ஓர் இடத்தைத் தேடி ஒரு மரத்தினடியில் சாய்ந்து கொண்டேன். அந்த இரவில் எல்லோருமே தங்களுக்குத் துணைகளைத் தேடிக் கொண்டதாகவே எனக்குப் பட்டது. எனக்கோ தனிமை துணையிருந்தது.&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.22.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.22.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115643148856541827?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115643148856541827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115643148856541827&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643148856541827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643148856541827'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/32.html' title='குழந்தைப் போராளி - 32'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115643110969530688</id><published>2006-08-24T16:49:00.000+02:00</published><updated>2006-08-24T17:01:28.940+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 31</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier29.10.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier29.6.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff6600;"&gt;&lt;strong&gt;மசாக்கா போர்முனை&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றோ இரண்டோ நாட்கள் கழிந்த பின்பு ஸலிம் சலேமின் தலைமையிலான பெரும் படைப் பிரிவுடன் எங்களது தாக்குதல் குழு இணைந்து கொண்டது. இப்போது எங்களது தாக்குதல் இலக்கு மசாக்கா படைமுகாம். மசாக்காச் சண்டை நாங்கள் எதிர்பார்த்திருந்ததைக் காட்டிலும் உக்கிரமாயிருந்தது. ஆயுத பலம் அதிகமுள்ள எங்கள் எதிரிகள் எங்களை மூர்க்கத்துடன் திருப்பியடித்தார்கள். அவர்கள் கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை போராடக் கூடியவர்கள் என்பதை அந்தக் களம் சொல்லிக் காட்டியது. போர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே இரு தரப்பிலும் பாரிய இழப்புகள். எதிரி ஆவேசமாகப் போரிட்டுத் தான் எங்களிலும் குறைந்தவனல்ல என நிரூபித்துக்கொண்டிருந்தான். அவர்களது முகாம் ஒரு சிறிய மலை உச்சியில் அமைந்திருந்ததால் அவர்களுக்கு எங்களை இலக்கு வைத்துச் சுடுவது எளிதாயிருந்தது. யாருடைய பார்வை வட்டம் பெரிதாக இருக்கிறதோ அவர்களுக்கே துப்பாக்கியால் சுடுவதும் இலகுவாயிருக்கும். என்னில் கந்தகப் புகை கவிந்து கிடக்க ஒன்றை மட்டும் எனக்கு நானே சொல்லி கொண்டேன். எக் காரணத்தைக் கொண்டும் நான் நின்று கொண்டு போரிடப் போவதில்லை. என்னைத் துப்பாக்கிக் குண்டுகள் அணுகாது என நான் இனியும் நம்பத் தயாரில்லை. பாதுகாப்பான இடங்களைத் தேடிப் பதுங்கிய நான் எப்போதும் தரையில் படுத்திருந்த நிலையிலேயே சுட்டேன். ஓர் எதிரி விழும்போது அவன் எனது குண்டடிபட்டுத்தான் விழுகிறான் என நம்ப முயன்றேன். சண்டை எதிர் பார்த்ததைவிட அதிக நேரம் நீடித்தது. எதிரியின் தாக்குதல் பலமாக இருந்ததால் சிதறடிக்கப்பட்ட எங்களது படையணிகள் கடைசியில் களத்திலிருந்து பின்வாங்கிச் சென்றன.&lt;br /&gt;&lt;br /&gt;சில மணி நேரங்கள் கழித்து, ஏற்கனவே பேசிவைத்திருந்த இடத்தில் நாங்கள் ஒன்று கூடினோம். தலைவரின் சகோதரரும் சிறப்புத் தளபதியுமான ஸலிம் சலேம் எங்களிடையே உணர்ச்சிப் பெருக்கான உரையொன்றை ஆற்றினார். "நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள்! நாங்கள் இந்த முகாமைக் கைப்பற்றும் வரையில் ஓயாது போரிட வேண்டும். நாங்கள் மீண்டும் தாக்குதலை நடத்துவோம்! இம்முறை நாங்கள் என்ன விலை கொடுத்தேனும் முகாமைக் கைப்பற்றியே தீரவேண்டும். நாட்டின் முக்கியமான இராணுவ நிலைகளையும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் நமது படையணிகள் ஏற்கனவே கைப்பற்றி விட்டன. அதிபர் மில்டன் ஒபோடே இன்னும் சில நாட்களுக்குள்ளேயே NRAயால் அதிகாரத்திலிருந்து இறக்கப்படுவார். இறுதி வெற்றி எங்களுக்கே" என்று ஸலிம் சலேம் முழங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றோங்கா பாலத்தைக் கைப்பற்ற NRA திட்டமிட்டது. இந்த அதி முக்கியமான இராணுவ நடவடிக்கைக்காக முதலாவது, ஐந்தாவது படைப் பிரிவுகளோடு இணைந்து போரிட நானிருந்த தாக்குதல் குழுவும் செல்ல வேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. இதை கேட்டதுமே என்னை உற்சாகம் பற்றிக்கொண்டது. எனது சிநேகிதர்கள் பலரை மீண்டும் நான் சந்திக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது படையணியினருடன் நாங்கள் இணைந்து கொண்டபோது எனது உற்சாகம் முற்றாக வடிந்து போயிற்று. எனது நண்பர்களில் ஒருவரைத் தன்னும் அங்கே என்னால் சந்திக்க முடியவில்லை. எல்லோருமே காணாமற் போயிருந்தனர். மீண்டும் என்னுள் நம்பிக்கை துளிர் விட்டது. ஐந்தாவது படைப் பிரிவின் தளபதி ஸ்டீபன் கசாக்காவின் மெய்ப் பாதுகாவலர்களாகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எனது இரு தோழர்களையாவது நான் சந்திக்க வாய்புண்டு. ஆனால் கசாக்கா போரிலிருந்து விலகி விட்டார் என்ற செய்திதான் எனக்குக் கிடைத்தது. அவர் படையணியிலிருந்து வெளியேறித் தனது தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கப் போய்விட்டார் எனக் கேள்விப்பட்டேன். அது அவரது தனிப்பட்ட முடிவு. ஆனால் என் தோழர்கள் எங்கே? எவருக்கும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாம் படையணிக்கு அகமட் கசிலிங்கி புதிய கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். முசேவெனியே இவரை நேரடியாக நியமனம் செய்திருந்தார். கசிலிங்கி முன்யங்கோலி இனக் குழுவைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் இடி அமீனுடன் கூடயிருந்தவர். போரில் பழுந்த அனுபவம் வாய்ந்தவரும் நிர்வாகம் செய்வதில் கைதேர்ந்தவருமான கசிலிங்கி மிகவும் உயரமான தோற்றத்தைக் கொண்டவர். ஓர் ஒட்டகச் சிவிங்கியின் கண்களை நேருக்கு நேராக பார்க்கக் கூடிய உயரம் அவருடையது. அவருடைய சிறிய தாடி 'கலேவூ' என்றொரு செல்லப் பெயரையும் அவருக்கு பெற்றுக் கொடுத்திருந்தது. 'கலேவூ' என்றால் 'ஆட்டுத் தாடி' என அர்த்தம். அவரது துணிவும் சாதுரியமும் பெரும் புகழ் பெற்றவை. அவரது தீரச் செயல்களைப் பற்றிப் பல கதைகள் உண்டு. முசேவெனியும் மில்டன் ஒபோடேயும் சேர்ந்து இடி அமீனின் அரசைக் கவிழ்த்த போது கசிலிங்கி கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். அவர் உகண்டாவிலேயே அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட 'லூசிரா' சிறைச்சாலையிலிருந்தே தப்பித்துச் சென்றவர். கசிலிங்கிக்கு இராணுவ வட்டாரங்களில் பெரும் மதிப்பும் மரியாதையுமுள்ளன. இராணுவ அதிகாரிகள் அவருக்குக் 'கொமாண்டோ' என்ற பட்டத்தையும் வழங்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகத் திறமையான தலைமையும் சிறந்த போராளிகளையும் கொண்டிருந்த ஐந்தாவது படைப்பிரிவு பெரிய புகழை அடைந்திருந்தது. இன்றும் என்னால் சில பெயர்களை ஞாபகப்படுத்திப் பார்க்க முடிகிறது. மோசேஸ் டிராகோ - யூலியஸ் புரூஸ்- கனாபி இவர்கள் மூவரும் பகாண்டா இனக் குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்களை மரணம் மாத்திரம் தான் பிரிக்க முடியுமென்பது போல மூவரும் எப்போதும் சேர்ந்தேயிருப்பார்கள். எனது பிரியம் மோசேஸ் டிராகோ மேல். அவர் அன்புள்ளம் படைத்த இளம் தளபதி. நான் ஐந்தாவது படைப்பிரிவில் அவரின் நிழலின் கீழேயே அணிவகுத்துச் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாவது படைப்பிரிவு சண்டைக்கு ஆயத்தமானது. கூடிய கதியில் நாங்கள் கற்றோங்கா பாலத்தைக் கைப்பற்ற வேண்டும். இது ஒரு சிறிய ஆனால் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாலம். இந்தப் பாலம் தலைநகர் கம்பாலாவிலிருந்து இரண்டு கிலோ மீற்றர்கள் தூரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்திருந்தது. எங்கள் படையணிகள் பாலத்தை இலக்கு வைத்து நகரத் தொடங்கின. வெற்றிக்கான சாத்தியங்கள் எங்களுக்கே அதிகளவில் இருந்ததால் மிக விரைவில் தலைநகரும் எங்களின் கைகளுள் வீழ்ந்து விடும் என நாங்கள் நம்பினோம். இரண்டு பெரிய களங்களிலிருந்து நான் உயிர் தப்பியிருப்பதால் கம்பாலாவைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாமென நான் நினைத்துக் கொண்டேன். குழந்தைப் போராளிகளுக்குக் கம்பாலா என்பது ஒரு இனிய கனவாகவே இருந்தது. பலருக்கு அது நிறைவேறாத கனவாகவும் போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;கற்றோங்கா நோக்கிய நகர்வில் எங்களுக்கு இன்னுமொரு அதிர்ஷ்டமும் வாய்த்தது. சில புத்தம் புதிய வாகனங்கள் எங்களுக்குத் தரப்பட்டன. ஏற்கனவே எங்களின் தளபதிகளும் உயரதிகாரிகளும் நவீனரக ஜீப்புகள், பென்ஸ் கார்கள் எனக் கொடி கட்டித்தான் பறந்து கொண்டிருந்தார்கள். சில விடயங்கள் எனக்குப் புரியவில்லை. NRA எப்போது பணத்தில் மிதக்கத் தொடங்கியது? நாங்கள் எதற்காகப் போராடுகிறோம்? இந்த வெற்று ஆடம்பரங்களுக்காகவா நாங்கள் உயிரைக் கொடுத்துப் போராடுகிறோம்? இந்தக் கேள்விகள் தளபதிகளும் உயரதிகாரிகளும் பெண்களுடன் சல்லாபிப்பதைப் பார்த்ததும் குறிப்பாக என்னுள் எழுந்தன. திடீரென NRA போராளிகள் மீது நாட்டிலுள்ள பெண்களுக்கு ஈர்ப்புக் கூடியிருந்தது. நாட்கணக்காகக் குளிக்காத போராளிகளின் நாற்றம் கூட அந்தப் பெண்களுக்குப் பெரிதாகப் படவில்லை.&lt;br /&gt;&lt;p align="left"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.21.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.21.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115643110969530688?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115643110969530688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115643110969530688&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643110969530688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115643110969530688'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/31.html' title='குழந்தைப் போராளி - 31'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115592737005707399</id><published>2006-08-18T20:13:00.000+02:00</published><updated>2006-08-18T20:56:10.096+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 30</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier36.0.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier36.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33ccff;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;தோழிகளின் மரணம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாலை நேரத்தில் நானும் எனது சகாக்களும் மர நிழலில் ஓய்ந்திருந்து 'பழைய கதைகளை'ப் பேசிக் கொண்டிருந்தபோது இரு குறிப்பிட்ட படை அலகுகளைத் தயார் நிலைக்கு வருமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. விதி விளையாடியது, இரண்டில் ஒரு குழுவில் நானும் அடங்கியிருந்தேன். மேற்கு உகண்டாவில் நிலைகொண்டிருந்த அரசின் சிம்பா படைப் பிரிவைத் தாக்குவதற்காக உருவாக்கப்படும் சிறப்புப் படையணிக்கு நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டோம் . அங்கே எனது உற்ற தோழிகளான முக்கோம்போஸியும் நரோன்கோவும் இருப்பதைக் கண்டேன். அவர்களின் சிரிப்பில் எனது கவலைகளெல்லாம் பறந்து போயின. எஙகிருந்தோ வந்து தன்நம்பிக்கை என்னில் தொற்றிக் கொண்டது. நாங்கள் குதூகலத்துடன் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டோம். இந்த இரு பெண்களும் இல்லாவிட்டால் நான் முற்றாகவே உடைந்து போயிருப்பேன். வெறுப்பும் சிடுசிடுப்புமாக நிற்கும் மனிதர்களிடையே போராளிக் குழந்தைகள் பரிவையும் அரவணைப்பையும் தேடியலைந்தார்கள். நான் பாக்கியசாலி! முக்கோம்போஸியும் நரோன்கோவும் எனக்கு அவற்றை வழங்கினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பொது வேலைகள் திணைக்களத்திலிருந்து எங்களால் கடத்தப்பட்ட கனரக வாகனங்கள் எங்களது படையணியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்தன. நான் தோளில் எனது Uzi துப்பாக்கியைச் சுமந்து கொண்டு அணிவகுத்து நின்றேன். தாக்குதலுக்கு எங்களை உசுப்பிவிடும் உரையை எங்களது புதிய கட்டளைத் தளபதிகளில் ஒருவரான யூலியஸ் சிகண்டா நிகழ்த்தினார்.."மானமே பெரிது! எங்களின் மக்களுக்காகப் போரிடுவோம்" என்பதே நிகழ்த்தப்பட்ட உரையின் சாரமாயிருந்தது. உரைவீச்சு முடிந்தவுடன் வாகனங்களில் ஏறக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எங்களை உசுப்பிவிட எப்படிப் பேச வேண்டுமென்பது தளபதிகளுக்குத் தெரியும். தூண்டப்பட்ட துணிவைத் தொலைத்து விடாதிருக்க நாங்கள் பாடிக்கொண்டும் கூச்சலிட்டுக் கொண்டுமிருந்தோம். பயணம் தொடங்கி விட்டது. எங்களில் பலருக்கு அது திரும்பி வர முடியாத பயணமாக அமையும் என்பது எனக்குத் தெரியும். எங்களது படையணியின் இன்னொரு கட்டளைத் தளபதியாக பிரெட் ரொவியெமா இருந்தார். பிரெட் வசீகரமான தோற்றத்தைக் கொண்ட ஆற்றல் மிக்க போர்த் தளபதி. அவர் எங்களுக்கு 'மானம் காக்கவும் விடுதலைக்காகத் துணிச்சலுடன் போரிடவும்' சொல்வதோடு யுத்தத்திலிருந்து உயிருடன் மீள்வது எவ்வளவு முக்கியமானதென்று சொல்லவும் மறப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நெடும் தூரம் பிரயாணம் செய்துகொண்டிருந்தோம். ஓடும் வாகனத்துள் மந்தைகள் போல நெருக்கியடித்துக் கொண்டு ஒருவருடன் ஒருவர் ஒட்டாத குறையாக நாங்கள் நின்றிருந்தோம். வழியில் எதிர்ப்பட்ட ஒரு சிறிய சோதனைச் சாவடியில் பொலிஸார் எங்களது துப்பாக்கிகளுக்கு வேலை வைக்காமல் தாங்களாகவே சரணடைந்து ஆயுதங்களை எங்களிடம் ஒப்படைத்தனர். இந்தச் சிறிய பரபரப்புக்குப் பிறகு மீண்டும் பயணம் தொடர்ந்தது. இரவு தங்குவதற்குப் பாதுகாப்பான ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அந்தச் சுற்றுவட்டார மக்களில் ஏராளமானவர்கள் எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அவர்கள் வெகுளித் தனமான அன்புடன் எங்களுடன் பேசினர். அவர்களில் பலர் உணவுவகைகள், பழங்கள், சிறிய பரிசுப் பொருட்கள் என்பவற்றை எங்களுக்காக எடுத்து வந்திருந்தனர். ஆனால் அவைகளைப் பெற்றுக்கொள்ள நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களது பரிசுப் பொருட்களை நாங்கள் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் வாத்தியங்களை முழங்கி எங்களின் வரவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். "எங்களது அன்பு என்றும் உங்களுக்குண்டு, எங்கள் விடுதலையின் நாயகர்கள் நீங்கள்" என அவர்கள் பாடினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் மீண்டும் நாங்கள் பயணிக்கத் தொடங்கினோம். முதல் தீட்டியிருந்த திட்டத்தின்படி நாங்கள் சில மணி நேரங்களுக்கு முன்பாகவே புறப்பட்டுச் சென்று எதிரிகளை உறக்கத்தில் வைத்தே தாக்கியிருக்க வேண்டும். முன்னைய திட்டம் ஏன் மாற்றப்படடது என்று எங்களுக்கு எதுவும் சொல்லப்படவில்லை. இப்போதோ நன்றாக விடிந்து விட்டிருந்தது. சூரியன் வானத்தில் உயரே ஏறிவரும் போது எங்கள் தாக்குதல் குழுக்கள் சிம்பா படைத்தளத்தைச் சூழ்ந்திருந்தன. இந்தப் படைத் தளம் பிரதான சாலையை ஒட்டியிருந்த ஓர் எச்சக் குன்றில் அமைந்திருந்தது. நாங்கள் படைத் தளத்தைச் சுற்றியிருந்த வேலியை அரவமில்லாமல் வெட்டிப் பாதை திறந்ததும் எங்களது துப்பாக்கிகள் இடையறாது வெடித்துக் கொண்டே முன்னேறின. எதிரிகளில் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர். எஞ்சியிருந்தவர்கள் கட்டடங்களுக்குள் மறைந்திருந்து போரிட்டதால் ஒருவாறு தாக்குப் பிடித்துக்கொண்டிருந்தனர். இந்த வெற்றி எங்களை மயக்கிவிட்டது. சிலர் செத்துக் கிடந்த இராணுவத்தினரோடு துப்பாக்கிச் சண்டை போடுவது போல பாவனை செய்யத் தொடங்கி விட்டனர். அது நல்லத்தொரு பயிற்சி எனவும் கருதப்பட்டது. நானும் சில தோழர்களும் எங்கள் தரப்பு இழப்புக்களைக் கணக்கெடுக்கத் தொடங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் இறந்து போன எங்களது சகாக்களுக்காக அழுது முடிக்க முன்னமே எதிர்பாராத தாக்குதல் குன்றின் கீழேயிருந்து எங்கள் மீது நடத்தப்பட்டது. இரு முனைத் தாக்குதல்களின் நடுவே நாங்கள் வசமாகச் சிக்கியிருந்தோம். வாழ்வா? சாவா? என்ற நிலை. இப்போது எங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள நாங்கள் வீரியத்துடன் போர் புரிய வேண்டியிருந்தது.ஆனாலும் எங்களது நிலைமை படு மோசமாகவேயிருந்தது. ஒரு பகுதிப் போராளிகள் சண்டையைக் கைவிட்டு ஓடத் தொடங்கினர். குண்டுகள் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. பல போரளிகள் ஓடும்போது முதுகில் குண்டடிபட்டனர். எனினும் எங்களில் பலர் உறுதியுடன் எதிர்த்துப் போராடினோம். நாங்கள் போரைக் கைவிடவில்லை, எங்கள் துணிவு அற்றுப் போய்விடவில்லை. பெண்கள் எல்லோரும் ஆண்களைப் போலப் போரிட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மூர்க்கத்துடன் போரிட்டுக்கொண்டிருந்த முக்கோம்பொஸி எதிரியின் குண்டடிபட்டு அவளது பிரியத்துக்குரிய RPGயோடு சுருண்டு விழுந்தாள்.அவளது அதீத துணிச்சலே அவளுக்கு எதிரியாய்ப் போனது. நரோன்கோ தனது தோழி விழுந்ததைக் கண்டதும் ஒரு மரத்தில் ஏறி பித்துப் பிடித்தவள் போல் கிளைக்குக் கிளை தாவிக்கொண்டிருந்தாள். அவளைக் கீழே இறங்குமாறு தளபதி பிறப்பித்த கட்டளை காற்றிலே போயிற்று. அவள் மரத்தை விட்டு இறங்கவேயில்லை. அவள் மரத்திலிருந்து கீழே விழுந்ததையும் யாரும் பார்க்கவில்லை. நாங்கள் அங்கிருந்து பின்வாங்கிய போது நரோன்கோ எங்களிடையே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எனது நேசத்துக்குரிய தோழிகள் இருவரையுமே யுத்தம் தின்று விட்டது. நான் யுத்தத்தைக் கைவிட்டு NRAயிலிருந்து ஓடிப்போய் விடலாமா என்று கூட நினைத்தேன். எனது கிராமம் இங்கிருந்து அதிக தொலைவில் இல்லை. ஆனாலும் நான் மனதை மாற்றிக் கொண்டேன். நாங்கள் இந்த நாட்டையே ஆட்சி செய்யும் காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இராணுவச் சீருடையில் தோளில் துப்பாக்கியுடன் என்னைப் பார்த்தால் அப்பா என்ன செய்வார்? பயத்தில் அலறுவாரா? அல்லது மண்டியிட்டுக் கருணை காட்டுமாறு கெஞ்சுவாரா? இப்படி நினைப்பதே என் மண்டைக்குள் இன்பக் கிறுகிறுப்பை உண்டாக்கியது. ஓடிவிடுவதற்குப் பதிலாக இறுதிவரை போராடுவது என உறுதியெடுத்துக் கொண்டேன். வீடு திரும்புவதை விடப் போரிடுவதில் எனக்கு இழப்புக்கள் குறைவாகவேயிருக்கும் என நம்பினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களில் பலர் அச்சத்தால் கைகால்கள் மரத்துப் போனவர்கள் போலக் காணப்பட்டனர். போரில் மாண்டு போன எங்களது சகாக்களின் இரத்தம் நாங்கள் பின்வாங்கிச் சென்ற பாதையில் எங்களைத் தொடர்ந்தது. அச்சத்தையும் கண்ணீரையும் மனவேதனையையும் முண்டி விழுங்குவதைத் தவிர எங்களால் வேறெதுவும் செய்யமுடியவில்லை. எங்களில் சிலர் நயாமிற்றங்காவுக்கு அழைக்கப்பட, மற்றவர்களுக்கு மீண்டும் சிம்பா முகாமைத் தாக்குவதற்கு ஆயத்தமாகுமாறு கட்டளையிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பீகார்வே என்ற சிறு நகரத்தில் சில 'லொறி'களைக் கடத்திக்கொண்டு மீண்டும் நாங்கள் சாவைத்தேடி விரைந்து சென்றோம். எங்களில் சிலராலேயே பாடவோ, சிரிக்கவோ முடிந்தது. பெரும்பாலான போராளிகள் உள்ளுக்குள் ஒடுங்கிப் போயிருந்தார்கள். என்னைப் போலவே அவர்களும் தங்களது தலைகளுக்கு மேல் ஆடிக்கொண்டிருக்கும் மரணம் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கலாம். வழியில் எனது கிராமத்தை நாங்கள் கடந்து சென்றோம். என்றாவது ஒருநாள் நான் இங்கு திரும்பி வருவேனா?&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள் திரண்டு வந்த மரணபயம் என் கண்களின் வழியே வழிந்த போது நான் தடுமாறிப் போனேன். எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது. நான் ஓடும் வாகனத்துள் எழுந்து நிற்க முயற்சி செய்தேன். என் தேகம் உலாஞ்சியது. நான் அச்சத்தை என்னுள்ளிருந்து துரத்தியே ஆகவேண்டும். பத்து வயதுச் சிறுமியான நான் அச்சத்தைத் துரத்திவிட ஒரு குறுக்கு வழியைக் கண்டு பிடித்தேன். நான் எங்களின் வெற்றியைக் குறித்துப் பாடலொன்றைப் பாடத் தொடங்கினேன். "நானொரு துணிவான போராளி" என்று அந்தப் பாடல் ஆரம்பிக்கும்.விரைவில் மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து கொண்டனர். வாகனத்துள் இருந்த இறுக்கம் மெல்ல மெல்ல அவிழலாயிற்று. கனைப்பும் சிரிப்பும் எங்களிடையே பரவத் தொடங்கின.&lt;br /&gt;&lt;br /&gt;வழியில் ஒரு சிறு நகரத்தில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. வாகனங்களிலிருந்து இறங்கிச் சில நிமிடங்கள் வரை நகரவாசிகள் எவருமே எங்கள் கண்களில் படவில்லை. தங்கள் நகரத்துக்கு வந்திருப்பவர்கள் NRA போராளிகளே என்பதை அறிந்து கொண்டதும் பதுங்கியிருந்த நகரவாசிகள் வெளியே வந்து உற்சாகத்துடன் எங்களைச் சூழ்ந்துகொண்டனர். குழந்தைகளாகிய எங்களுக்கு உணவும் பணமும் தர அவர்கள் முண்டியடித்தனர். ஆனால் NRA யின் விதிகளின்படி நாங்கள் அவற்றை வாங்கிக்கொள்ள இயலாது. தலைவர் முசேவெனி தனது போராளிகளை அரசபடையினரைப் போல வழி நடத்த விரும்பவில்லை. ஒரு பெண் எனக்குப் பணம் தர முற்பட்டபோது என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் வெளிப்படையாக அந்தப் பணத்தை வாங்கிக்கொள்ளவும் நான் விரும்பவில்லை.அது என்னைப் பெரிய ஆபத்தில் கொண்டு போய்விடும். அந்தப் பெண்ணை ஒரு கட்டடத்தின் பின்னால் மறைவாக வரச் சொல்லிப் பணத்தை வாங்கி எனது உடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டேன். ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் எனக்குண்டு. சிகரெட்டுகள் வாங்க எனக்குப் பணம் தேவை. வலிய வரும் பணத்தை வேண்டாமென்று மறுக்குமளவிற்கு எனக்கு மனதில் உறுதியில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலமணி நேரங்களில், நாங்கள் ஏற்கனவே சிறைப் பிடித்து வைத்திருந்த அரச படையினர் சிலரை முன்னே நடக்கவிட்டு அவர்களை அரண்களாய் வைத்துக்கொண்டு மீண்டும் சிம்பா படைத் தளத்தை நோக்கி முன்னேறினோம். எங்களுக்கும் அரச படையினருக்குமிடையே சிறைப்பிடிக்கப்பட்ட அரச படையினரின் உயிர்கள் பணயமாக வைக்கப்பட்டிருந்ததால் சிம்பா படைத்தளத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் எதிர்ப்பே காட்டாமல் பின்வாங்கிச் சென்றனர். இந்தத் தடவை எங்கள் தரப்பில் இழப்புக்கள் எதுவுமில்லாமலேயே சிம்பா படைத் தளம் எங்களிடம் வீழ்ந்தது.&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/6804/2575/1600/continu-1.0.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/6804/2575/200/continu-1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115592737005707399?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115592737005707399/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115592737005707399&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115592737005707399'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115592737005707399'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/30.html' title='குழந்தைப் போராளி - 30'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115521392899365711</id><published>2006-08-10T14:42:00.000+02:00</published><updated>2006-08-10T14:45:28.996+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 29</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier31.2.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier31.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#33ccff;"&gt;நூற்றுக்கு இருநூறு &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#33ccff;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#ff6600;"&gt;&lt;strong&gt;சி&lt;/strong&gt;&lt;/span&gt;ல நாடகள் கழித்து நானும் இன்னும் ஐந்து தோழர்களும் ஐந்தாவது விசேட படைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டோம். ஐந்தாவது விசேட படைப் பிரிவின் கட்டளைத் தளபதியான ஸ்டீபன் கசாக்கா என்னுடன் வந்திருந்த இரண்டு தோழர்களைத் தனது மெய்ப் பாதுகாப்பாளார்கள் அணிக்குத் தேர்வு செய்துகொண்டார். தலைவர்களும் தளபதிகளும் உயரதிகாரிகளும் தங்கள் மெய்ப் பாதுகாவலர்களாகப் பெரும்பாலும் குழந்தைப் போராளிகளையே தேர்ந்தெடுப்பார்கள். குழந்தைப் போராளிகள் கேள்விகளைக் கேட்பதில்லை. நல்லது கெட்டதைப் பகுத்துணர முடியாத, மூளைகள் மழுங்கடிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் நூற்றுக்கு இருநூறு வீதம் விசுவாசத்தைக் கொண்டவர்களாயிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைப் போராளிகள் எல்லாவித அட்டூழியங்களிலும் பங்கெடுத்துக் கொள்வார்கள்.பல குழந்தைகளுக்குக் கொலையும் சித்திரவதையும் மிகப் பிடித்தமான வேலைகள். கொலைகளாலும் சித்திரவதைகளாலும் தங்களது தளபதிகளின் நன்மதிப்பைக் குழந்தைகளால் சீக்கிரமே பெற்றுவிட முடியும். போர் கைதிகளையும் உளவாளிகள், துரோகிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்களையும் குரூரமாகச் சித்திரவதை செய்தும், புதை குழிகளுக்கு அனுப்பியும் ஒரே நாளில் இராணுவப் படிநிலைகளை ஒரே தாவாகத் தாவி உயரே சென்று விடக் குழந்தைகளால் முடியும். போர்க் கைதிகளுக்கு நாங்கள் இழைக்கும் உச்சபட்சச் சித்திரவதைகள் எதிர் காலத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை அறியாத குழந்தைகளாக நாங்களிருந்தோம். அந்தக் கொடூரம் வாழ்நாள் முழுவதும் எங்களை வதைத்துக் கொண்டேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் தலைவரின் பெயரால் அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக வகை தொகையின்றி அட்டூழியங்களைச் செய்தோம். பதிலுக்கு அவர் எங்கள் மீதேறிச் சவாரி விட்டார். நாங்கள் தலைவரால் சாவதற்கென்றே வளர்க்கப்பட்டோம். நாங்கள் கற்பூரத்தால் வார்க்கப்பட்ட பறவைகள்.எங்களைப் போன்ற சபிக்கப்பட்ட குழந்தைகளிடம் இயல்பான மன வளர்ச்சியை எதிர்பார்க்க முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;வெளிப் பார்வைக்கு நாங்கள் குழந்தைகள். ஆனால் எங்களின் மறுபக்கமோ முற்றிலும் வேறுபட்டது. எந்த மானுட விழுமியங்களுக்குள்ளும் அடங்காத குழந்தைகள் நாங்கள். எப்போது எங்கு பற்றும்? எந்தத் திசையில் திரும்பும்? எனக் கணிக்க முடியாத காட்டுத் தீ போல நாங்கள் நெருப்பெடுத்து நின்றோம். எங்களிடம் மிக அடிப்படை உணர்வுகளான பசி, தாகம், குளிர், வெப்பம் ஆகியவற்றைத் தவிர மற்றெல்லா உணர்வுகளும் மரத்துப் போயிருந்தன. நாங்கள் மனித இயந்திரங்கள் போலத் தலைமையின் கட்டளைகளைக் கேள்விகளே கேட்காது நிறைவேற்றிக்கொண்டிருந்தோம். சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்ட, மரத்துப் போன நிலையிலிருந்து நாங்கள் இம்மியளவேனும் விடுபடுவதாகத் தளபதி கருதுவேரானால் நாங்கள் உடனடியாகப் போர்முனைக்குச் சாவதற்காக அனுப்பப்படுவோம். ஏனெனில் நாங்களில்லாவிடில் தளபதியின் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சிகளும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களில் பலர் இப்படிப் போர்முனைகளுக்கு அனுப்பப்பட்டு அழிந்து போனார்கள். எங்களது தலைவருக்கும் தளபதிகளுக்கும் அடிமட்டப் போராளிகளைப் பற்றி உண்மையிலேயே அக்கறையுண்டா? அல்லது நாங்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் இவர்களுக்குக் கவலையில்லையா? என்ற கேள்விக்கான பதிலை நான் தேடிக்கொண்டிருந்தேன். தலைமைப் பொறுப்புக்களிலிருந்தவர்களில் ஏறத்தாழ எல்லோருமே அதீத சுயநலப் பிராணிகளாகயிருந்தார்கள். தங்களுடைய நலன்களைத் தவிர வேறொன்றைப் பற்றியும் அவர்களுக்கு அக்கறையில்லை. நாட்டின் அதிகார மையத்தை விரைந்து கைப்பற்றிக் கொள்வதும் அதன் மூலம் கொழுத்த பணக்காரர்களாகி விடுவதுமே அவர்களின் ஒரே குறிக்கோளாகயிருந்தது. அவர்கள் மீது அசைக்க முடியாத விசுவாசத்தைக் கொண்டிருந்த போராளிக் குழந்தைகளுக்கு அவர்களது இதயத்தில் எந்த இடமுமில்லை. எங்களின் மேதகு தலைவர் யோவேரி முசேவெனியின் இதயத்தில் கூட எங்களுக்கிடமில்லை. எந்தச் சர்வாதிகாரிக்கு எதிராகப் போரிட்டாரோ அந்தச் சர்வாதிகாரியைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு சர்வாதிகாரியாக எதிர்காலத்தில் யோவேரி முசேவெனி மாறுவார் என்பதை அன்று நான் கற்பனை கூடச் செய்து பார்த்ததில்லை. &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.20.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.20.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115521392899365711?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115521392899365711/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115521392899365711&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115521392899365711'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115521392899365711'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/29.html' title='குழந்தைப் போராளி - 29'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115521328302292437</id><published>2006-08-10T14:27:00.000+02:00</published><updated>2006-08-10T14:35:49.406+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 28</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2026.2.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier%2026.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#33ff33;"&gt;குழந்தைகளே என்னிடம் வாருங்கள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ffff00;"&gt;&lt;strong&gt;தொ&lt;/strong&gt;&lt;/span&gt;டர்ந்து நகர்ந்து கொண்டேயிருந்த எங்கள் படைப் பிரிவு மழை நீர் தேங்கி நின்ற ஒரு குட்டையை வந்தடைந்தது. அங்கே சிறிது ஓய்வெடுப்பதென முடிவாயிற்று. நாங்கள் தரையில் உட்காருவதற்கு முன்னேயே பற்றைக்காடு சலசலத்தது. அங்கிருந்து எங்களை நோக்கித் தலைவர் யோவேரி முசேவெனி ஒரு படைப் பிரிவுடன் வந்து கொண்டிருந்தார். முசேவெனி இராணுவ உடையிலிருந்தார். அவரது கையில் கறுப்பு - வெள்ளை முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட சிறியதொரு கோலை வைத்திருந்தார். இந்தக் குறுந் தடியின்றி முசேவெனி எங்குமே போவதில்லை. 'கிம' இனக் குழுவைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரிடமிருந்து முசேவெனி பெற்றுக்கொண்ட இந்தக் குறுந்தடி மந்திர சக்தி வாய்ந்ததெனப் பரவலாக நம்பப்பட்டது. தலைவர் குழந்தைகள் எல்லோரையும் தன் அருகாமையில் வரும்படி அழைத்தார். அவரது வார்த்தைகளில் வசியமிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;" NRA எமது மக்களின் விடுதலைக்காகவும் உகண்டாவின் இனக்குழுக்களுக்குள் அய்க்கியத்தை ஏற்படுத்தவும் உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிறது. அரசினால் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் எந்தக் குற்றமுமே புரியாத நமது மக்களை விடுதலை செய்வதற்காக நாமெல்லோரும் ஒற்றுமையுடன் இறுதி வரை போரிட வேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையிலேயே எங்கள் தலைவரால் நன்றாகப் பேச முடியும். ஆபிரிக்கக் கிளர்ச்சித் தலைவர்களிலேயே எங்கள் தலைவர் தான் முதன் முதலாகக் குழந்தைப் போராளிகளைக் களத்தில் இறக்கியவர். விரைவிலேயே மற்றவர்களும் இந்த "முற்போக்கான" சிந்தனையைப் பின்பற்றத் தொடங்கினர். இந்த வகையில் ஒபோடே முசேவெனி குழந்தைப் போராளி முறைமையின் தந்தை. பெரும்பாலான குழந்தைப் போராளிகளுக்குக் காணாமற் போன அவர்களது பெற்றோர்களுக்குக்கு என்ன நடந்ததெனத் தெரியாது. முசேவெனியோ அவர்களை அரச இராணுவம்தான் கொன்றொழித்தது எனச் சாதித்தார். அது மட்டுமல்லாது அவர் இன்னொரு துருப்புச் சீட்டையும் அடித்தார்." உங்களின் தாய் தந்தையர்களில் சிலர் சிறையில் இன்னும் உயிருடன் இருக்கலாம், நீங்கள் போய்ச் சிறை மீட்பதற்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்" எனக் குழந்தைகளின் மண்டையைத் தலைவர் மேலும் மேலும் கழுவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தலைவரின் உரையின் முடிவில் நாங்கள் எல்லோரும் எழுந்து நின்று எங்கள் துப்பாக்கிகளை வானத்தை நோக்கித் தூக்கிப் பிடித்து "முன்னோக்கிச் செல்வோம்! ஒரு நாளும் ஓய மாட்டோம்!" என முழக்கமிட்டோம். தலைவர் சிரித்துக்கொண்டே தனது கறுப்பு வெள்ளை மந்திரக்கோலை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தாய் தந்தையர் சிறையில் உயிரோடு இருக்கிறார்கள் என்ற வார்த்தை பல குழந்தைகளைத் தொடர்ந்து போரிடவும் தங்கள் உயிரைத் தியாகவும் செய்யவும் உருவேற்றும். எனது நிலையோ வேறு மாதிரியானது. எனது பெற்றோர்கள் எங்கேயிருக்கிறார்கள் என எனக்குத் தெரியும். நான் உயிருடன் இருக்க விரும்புவதற்கு அவர்களின் இருப்பு மட்டுமே காரணமாயிருக்கிறது.. என்றோ ஒரு நாள் நான் வீடு திரும்பி என் அப்பாவையும் சிற்றன்னையையும் கொல்ல வேண்டும். இதுதான் எனது இலட்சியம். எனது தந்தையும் சிற்றன்னையும் எனக்களித்த துயரங்களுக்காகத் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். அவர்களின் செயல்களுக்கு மன்னிப்பே கிடையாது.மனிதர்களைக் கொல்வதும் கொல்வதற்குத் திட்டமிடுதலும் எனது அன்றாடச் செயற்பாடாகவே ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முசேவெனி ஏன் திடீரென வந்தார்? எங்கள் தோழர்களை நாங்கள் சாகக் கொடுத்த போது எங்களிடம் மின்னி மறைந்த அச்சமும் விரக்தியும் கலந்த உணர்வை எங்கள் தளபதிகள் கண்டு கொண்டார்களோ? குழந்தைப் போராளிகள் களத்திலிருந்து பின்வாங்கினால் தாங்களே போர்க் களத்தின் முன்னரங்கத்தில் நிற்க வேண்டி வரும் எனத் தளபதிகளுக்குப் பயம் வந்துவிட்டதா? குழந்தைகளான நாங்கள் துணிவானவர்கள்! மிகத் துணிச்சலானவர்கள்! விட்டுக் கொடுக்காத போராளிகள்! தலைவர் எங்களை விட்டுச் செல்ல நாங்கள் காய்ந்த பருப்பையும் சோளத்தையும் சமைக்க ஆயத்தமானோம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களில் சிலர் மரங்களில் சாய்ந்து கொண்டும் மற்றவர்கள் புற்தரையில் மல்லாந்து படுத்துமிருந்தோம். எல்லோருக்குமே தூக்கக் கலக்கம். எல்லோரது கண்களும் வீங்கிச் சிவந்திருந்தன. உணவு வேகும் வரை காத்துக்கொண்டிருந்த நாங்கள் யாருமே அடுப்பிலிருக்கும் கிடாரத்திலிலிருந்து கண்களை எடுக்கவில்லை. திடீரென ஓர் அலறல். எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பி எங்கள் விருந்தினர் யாரெனப் பார்த்தோம். எதிரி சத்தமில்லால் எங்களுக்கு மிக அருகிலேயே வந்து விட்டான் என அடித் தொண்டையால் குழறிக்கொண்டே ஒரு தோழன் தலை தெறிக்க ஓடிவந்தான். மரணம் சில மீற்றர்கள் தொலைவில் அணிவகுத்து வருகிறது. எங்களில் சிலர் அடுப்பில் கொதிக்கும் கிடாரத்தினுள் கைகளை விட்டு வெந்தும் வேகாத பருப்பை அள்ள முயன்றோம். நாங்கள் எங்களது அடுத்த வேளை உணவுக்காக இனிச் சில நாட்கள் கூடக் காத்திருக்க வேண்டியிருக்கலாம். கைகளிலும் நாவுகளிலும் சுடுநீர் வழிய வழிய நாங்கள் எங்களால் தூக்கக் கூடியவைகளைத் தூக்கிகொண்டு தப்பி ஓடினோம். மரங்களின் மறைவில் தரையில் படுத்துக்கொண்டோம். ஒரு நல்ல பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்ததும் தான் எங்களால் நிதானிக்க முடிந்தது. எங்கள் தோழர்களில் சிலர் காணாமற் போயிருந்தார்கள். அவர்களின் பசி அவர்களை பருப்புக் கிடாரத்தைக் கைவிட்டு எங்களுடன் ஓடிவர அனுமதிக்கவில்லைப் போலும்&lt;br /&gt;&lt;br /&gt;பல வாலிப வயதுப் போராளிகளால் நாங்கள் போரில் வெற்றி பெறுவோமென நம்பமுடியவில்லை. தங்கள் தோழர்கள் ஒருவர் பின் ஒருவராக மரணிப்பதை அவர்கள் கண்டார்கள். அவர்களின் முறை வருவதற்காகச் சாவு காத்துக்கொண்டிருப்பதும் அவர்களுக்குத் தெரியும். சாவின் நிழல் அவர்களின் தலைகள் மீதும் கவிந்திருந்தன. அவர்களில் பலர் NRAயிலிருந்து தப்பிபோடுவதற்கான தருணங்களுக்காகக் காத்திருந்தனர். குழந்தைப் போராளிகளின் கதையோ வேறு மாதிரியானது. எங்களால் அப்போது நாங்கள் எதிர் கொண்டிருந்த ஆபத்துக்களின் பரிமாணங்களைச் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. தவிரவும் குழந்தைப் போராளிகளின் விசுவாசம் எல்லையற்றது. இறுதி வெற்றி குறித்து அவர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்திருந்தார்கள். எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எங்களுக்கு NRAயை விட்டால் போக்கிடமுமில்லை. போர் முனைகளில் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பற்றிப் பெரியவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது. அவர்கள் களங்களில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே தங்களது முழுச் சக்தியையும் செலவழித்தார்கள். எதிரிக்குப் பதில் சொல்வதற்குக் குழந்தைப் போராளிகள் நாங்களே களங்களில் முன் வரிசையில் நிறுத்தப்பட்டடோம். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.19.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.19.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115521328302292437?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115521328302292437/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115521328302292437&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115521328302292437'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115521328302292437'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/28.html' title='குழந்தைப் போராளி - 28'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115477384133391196</id><published>2006-08-05T12:22:00.000+02:00</published><updated>2006-08-05T18:13:45.530+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 27</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2032.7.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/child-soldier%2032.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#3333ff;"&gt;உரசிச் சென்ற மரணம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;&lt;strong&gt;கி&lt;/strong&gt;&lt;/span&gt;ராமத்தை நோக்கி நடக்கையில் நிலைமை சுமுகமாகவில்லை என எங்கள் உள்ளுணர்வு கூறிற்று. அந்தக் கிராமவாசிகளில் ஏறத்தாழ எல்லோருமே NRAயின் ஆதரவாளர்கள் தான். நாங்கள் சுற்றுப்புறத்தினைக் கூர்ந்து கவனித்துக்கொண்டே நகர்ந்தோம். கிராமத்தை நெருங்க நெருங்கத் துர் நாற்றம் அதிகரித்துக் கொண்டே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தினுள் நுழைந்தபோது நாங்கள் கண்ட கோரக் காட்சி மனதை உலுக்கிப் போட்டது. எங்கள் தோழர்களின், ஆதரவாளர்களின் பிரேதங்கள் அங்கே சிதறிக் கிடந்தன. அவர்களின் உடலிலிருந்து குருதியும் நிணமும் வழிந்து கொண்டிருந்ததன. என் கண் முன்னே விரிந்து கிடந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் நான் திணறிப்போனேன். இது ஒரு ஆரம்பம் மட்டுமே என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டது. இனி எது வந்தாலும் போனாலும் எனது நிலைமை மாறப்போவதில்லை. எனது வாழ்க்கையில் சில விடயங்கள் என்றுமே மாறப் போவதில்லை. தப்பியோடுவதற்கு இடமே இல்லை. தப்பியோடிய சில வாலிப வயதுப் போராளிகளும் NRAயால் உடனடியாகவே கண்டு பிடிக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டு எல்லோரது கண் முன்னேயும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அந்தச் சாவொறுப்புகள் இயக்கக் கட்டுப்பாட்டைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளாம். இதனால் எந்தக் குழந்தையுமே தப்பியோட முயலவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் போலவே மற்றக் குழந்தைகளும் அதிர்ச்சி தரும் அந்த இழவுக் &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/r_soldier28.1.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/r_soldier28.jpg" border="0" /&gt;&lt;/a&gt;கிராமத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போய் மரணம் பற்றிய அச்சத்தில் மூழ்கியிருந்தனர். என்ன நடந்திருக்கலாமென நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கும் போதே வானத்தில் உலங்கு வானூர்திகளின் இரைச்சல் எழுவதைக் கேட்டுப் பதறிப் போனோம். நாங்கள் தரையில் விழுந்து படுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான இடங்களைத் தேட வேண்டும். அல்லது வானம் இடிந்து தலையில் விழும். உலங்கு வானூர்திகள் ஆகாயத்திலிருந்து மூர்க்கமான தாக்குதல் ஒன்றை நிகழ்த்திவிட்டு வந்த வேகத்திலேயே திரும்பிப் போயின. எல்லோரும் எழுந்து நின்று உலங்கு வானூர்திகளின் தாக்குதலிலிருந்து தாங்கள் காயமின்றித் தப்பித்தார்களா எனப் பார்த்துக்கொண்டனர். நானும் எனக்குக் காயமேதும் படவில்லை என உறுதிப்படுத்திய பின் தோழர்களுக்கு என்ன நடந்தது என ஓடியோடிப் பார்த்தேன். ஒரு தோழன் தரையிலிருந்து எழ மனமில்லாதவன் போலக் கிடந்தான். நான் அவனருகில் சென்று பார்த்தபோது தூங்குபவன் போல அவன் சலனமில்லாமல் கிடந்தான். மற்றய தோழர்களும் வந்து வீழ்ந்து கிடந்தவனைச் சூழக் கண்களைத் தாழ்த்திக்கொண்டு நின்றார்கள்.எங்கள் எல்லோருக்கும் நேசமான, எப்போதும் உற்சாகமாகக் காணப்படும் சிறுவனவன். எந்த நேரமும் அவனிடம் ஆறுதல் வார்த்தைகள் தயாராகயிருக்கும். நாங்கள் துணிச்சலானவர்களாக இருக்க வேண்டும், அச்சத்தை எங்களிடம் அணுகவே விடக்கூடாதென அவன் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருப்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களை அழைத்துச் செல்ல வந்த எங்களது சார்ஜன் அந்தச் சிறுவன் இறந்து விட்டான் எனச் சொன்னார். இறந்தவனுக்காகக் கண்ணீர் விட அவகாசமில்லை. எங்களது படைப் பிரிவோடு போய் இணைந்து கொள்வதற்காக நாங்கள் உடனடியாகவே புறப்பட வேண்டும். அவனுக்காக என்னிடமிருந்த கண்ணீரைச் சிந்துவதற்குக் கூட நிலைமைகள் என்னை அனுமதிக்கவில்லை. இறந்த எங்கள் தோழர்களின் நினைவுகள் எங்களின் பசியையும் தாகத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டன. மீண்டும் மீண்டும் உயிரற்ற உடல்கள் என் கண்களுக்குள்ளேயே நின்றன. ஒரு நாளில்லாவிட்டாலும் ஒரு நாள் என் கதையும் இப்படித்தான் முடியுமென நினைத்துக்கொண்டேன். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.18.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.18.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115477384133391196?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115477384133391196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115477384133391196&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477384133391196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477384133391196'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/27.html' title='குழந்தைப் போராளி - 27'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115477324693634159</id><published>2006-08-05T12:16:00.000+02:00</published><updated>2006-08-05T12:20:46.940+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 26</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2027.0.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier%2027.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;/p&gt;&lt;p align="left"&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#330099;"&gt;முன்னோக்கிப் பாய்தல்&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#9999ff;"&gt;எ&lt;/span&gt;ங்கள் படைப்பிரிவு 'ருவென்சோரி' க்கு அருகிலே நிலை கொண்டிருந்தது. இன்று ஓய்வு நாள். சில நாட்களாகவே சூரியன் கடுமையாகத் தகித்துக் கொண்டிருந்ததால் நாங்கள் வாடிப் போயிருந்தோம். பிற்பகல் மூன்று மணியளவில் தலைவரின் இளைய சகோதரன் ஸலிம் சலேம் - அவர் எங்கள் தளபதியும் கூட - பாசறைக்கு வந்தார். போரினைத் தீவிரப்படுத்தவும் எங்களுக்கு உற்சாகமளிக்கவும் உணர்ச்சிப் பெருக்கான உரை ஒன்றினையும் ஸலிம் சலேம் நிகழ்த்தினார். நாங்கள் அரசினை வீழ்த்துவதற்கும் மில்டன் ஒபோடேயின் கைகளிலிருந்து அதிகாரத்தைப் பிடுங்குவதற்குமான காலம் கனிந்து விட்டதென மீண்டும் மீண்டும் அவர் சொன்னார். இதைச் சொல்லும் போதெல்லாம் அவரது முகத்தில் புன்னகை துள்ளியது..&lt;br /&gt;&lt;br /&gt;அவரது நம்பிக்கைக்குக் காரணம் இருந்தது. நாங்கள் முக்கியமான படைக்கலன்கள் பலவற்றை மில்டன் ஒபோடேயின் படையினரிமிருந்து கைப்பற்றியிருந்தோம். இதனால் இராணுவத்தினரின் மனவுறுதி சிதைந்து அவர்களின் போரிடும் திறன் குறைந்து போயுள்ளதாகச் ஸலிம் சலேம் எங்களிடம் கூறினார். அவரது வருகையும் உரையும் எங்கள் மத்தியில் உற்சாகத்தையும் போர் வெறியையும் கிளர்த்தின. சந்தோசக் கூச்சல்களும் பாட ல்களும் அவர் மேடையைவிட்டு இறங்கும் போது ஓங்கி ஒலித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தாக்குதலுக்கு ஆயத்தமாகுமாறு எங்களுக்கு உத்தரவு கிடைத்தது. தாக்குதல் நடவடிக்கை பற்றிய அறிவுறுத்தலும் தரப்பட்டது. நாங்கள் நாளைக்கு இங்கிருந்து நான்கு கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள இராணுவத் தளத்தைத் தாக்க வேண்டும். தாக்குதல் விபரங்கள் அறிவிக்கப்பட்டதும் மரணத்தைப் பற்றிய எந்த எண்ணத்தையும் அச்சத்தையும் என்னுள் எழவிடாமலிருக்க நான் கடுமையாகப் போராட வேண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்பு நான் பாசறையின் மற்றப் பக்கத்திற்குச் சென்று எனது துப்பாக்கியைச் சரி பார்த்துக்கொண்டேன். என்னுடைய துப்பாக்கி Uzi தானியங்கி வகையைச் சேர்ந்தது. இது AK47லும் சிறியது. எனது சீருடை மிகப் பெரிதாக இருந்ததால் கால் பக்கத்திலிருந்த பைகளைக் கிழித்தெடுத்து விட்டு உயரத்தினைக் குறுக்கித் தைத்துக் கொண்டேன். எனது சீருடையை மீண்டும் அணிந்தபோது அது எனக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. சரிபாதியாகப் பாரம் குறைந்திருந்த சீருடை எனது தன் நம்பிக்கையையும் உசுப்பி விட்டது. குறைந்த சுமை போரில் உயிரைக் காப்பாற்றுவதற்கான முதல் நிபந்தனை என நான் கற்றிருந்தேன். மற்றய சிறுவர் சிறுமியர்களைப் போலவே எனக்கும் போர் பற்றிய அச்சமிருந்தாலும் அதனை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அச்சத்தை ஓர் உணர்வாகவே நான் மதிக்க விரும்பவில்லை. வீட்டைப் போலவே இங்கும் உரக்கக் கத்தியும் சண்டையிட்டும் தான் அடி உதைகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. பாசறையில் ஒருவரின் கருத்தை, உணர்வை இன்னொருவருடன் பரிமாறிக் கொள்ளுமளவிற்கு யாரும் யாரையும் நம்புவதில்லை. இந்த நிலை எனக்குப் புதியதல்ல. போதியளவு அனுபவம் என்னிடம் ஏற்கனவே கைவசம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலுக்கு முந்திய இரவில் பாசறைத் தீயைச் சுற்றி நாங்கள் வட்டமாக உட்கார்ந்திருந்தோம். பெண் போராளி ஒருத்தி எங்களைச் சிலமணி நேரங்கள் தூங்கும்படி கட்டளையிட்டாள். சாவுக்கான ஆயத்தம் போல படுக்கைக்குப் போன நாங்கள் மாற்ற முடியாத முடிவினைச் சிலமணி நேரங்களாவது தள்ளிப் போட்டோம். கொசுக்களின் தொல்லையா அல்லது எனது கவலைகளா என்னைத் தூங்கவிடாமல் தடுத்தது என என்னால் நிச்சயப்படுத்த முடியாதிருந்தது. படுக்கையில் அங்குமிங்குமாகப் புரண்டுகொண்டிருந்த என்னால் தூங்க முடியாதிருந்தது. தூங்கும் முயற்சியைக் கைவிட்ட நான் மல்லாந்து படுத்து நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தைப் பார்த்துக் கொண்டே அந்த நீண்ட இரவினின் முடிவில் ஓடப்போகும் இரத்த ஆற்றை எண்ணி உளைச்சலில் கிடந்த என் மனதை ஒருநிலைப் படுத்த முயன்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;விடிவதற்கு முன்னாகவே நிலவும் நட்சத்திரங்களும் எங்கள் பாதையினை ஒளி ஊட்டிக் கொண்டிருக்க பற்றைக் காடுகளை ஊடறுத்துக் கொண்டு இராணு முகாமை நோக்கி நகர்ந்து நிலையெடுத்துக் கொண்டோம்.தாக்குதலைத் தொடங்குவதற்கான சமிக்ஞையை எதிர் நோக்கிக் காத்திருந்தோம். அடுத்த அரைமணி நேரம் வரை நுளம்புகளின் கடியைத் தாங்கிக்கொண்டு அவைகளுக்கு இரத்ததானம் செய்ய வேண்டியிருந்தது. நுளம்புகள் கடிக்கும் வலியைச் சமாளிக்க மூடிய வாயினுள் எனது பற்களைத் தான் நான் கடித்துக் கொள்ள முடிந்தது. அமைதி காக்க வேண்டிய கட்டாயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் எங்களுக்குப் பாதுகாப்பாக இருந்தன. எங்களுக்கு மிக அருகாமையில் எங்களின் எதிரி. முகாமினுள் தூங்கும் எதிரியை எங்களால் பார்க்க முடிந்தது. இராணுவ முகாமும் எவ்விதச் சத்தமுமின்றி அமைதியாகவே இருந்ததது. நான் மூச்சைப் பிடித்துக் கொண்டே இரவின் அமைதியைக் கலைக்கப் போகும் அந்த ஒற்றைத் துப்பாக்கி வேட்டிற்காகக் காத்திருந்தேன். அதுதான் எங்களுக்கான சமிக்ஞை. முகாமினுள் புகுந்து இராணுவத்தினர் ஒவ்வொருவரையும் அழித்தொழிப்பதற்கான் அறைகூவல்.&lt;br /&gt;&lt;br /&gt;நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒற்றை வேட்டுப் பறந்தது.ஆண்களும் பெண்களும் இராணுவ முகாமை விட்டு வெளியே நிர்வாணமாக ஓடி வந்தனர். வந்த வேகத்திலேயே இரத்தக் கோளமாய் அவர்களின் உடல்கள் தரையில் குவிந்தன. இன்னும் அவர்களது உடைகளை அவர்களது கைகள் பிடித்திருந்தன. துப்பாக்கி வேட்டுக்கள் ஆடு மாடுகளையும் எழுப்பிவிட்டிருந்தன. அவைகளின் கதறல், பறவைகளின் இரைச்சல், மனிதர்களின் வெறிக் கூச்சல், மரண ஓலம் என ஒரு விநோதமான ஒலிக்கலவை மூன்று - நான்கு மணி நேரங்கள் எங்களைத் தொடர்ந்து சூழ்ந்திருந்து பின் மெல்ல மெல்ல அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் முகாமைக் கைப்பற்றிய போது பரிதாபமான காட்சியொன்று என் கண் முன்னே விரிந்து கிடந்தது. ஆடுகளும், கோழிகளும், இராணுவத்தினரது பிரேதங்களும் அவர்களது மனைவிமார்களது பிரேதங்களும் தரையெங்கும் பரவிக் கிடந்தன. வழமை போலவே ஆயுதங்களையும் உணவுப் பொருட்களையும் நாங்கள் துரிதமாகச் சேகரித்தோம். இவைகளைச் சிறுவர் சிறுமிகளான நாங்கள் தான் சுமந்து செல்லவேண்டும். பிடிபட்டிருந்த கைதிகளும் வழமை போலவே முதுகுகளின் பின்னால் கைகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தனர். எங்கள் பாசறைக்கு ஓட்டிச் செல்லப்பட்ட இவர்கள் தங்களின் சவக்குழிகளைத் தாங்களே வெட்ட நிர்பந்திக்கப்பட்டனர். அதுவும் வழமை தான். எங்கள் தளபதிகளில் சிலர் குழந்தைகளான எங்களிடம் சிறைப் பிடிக்கப்பட்டவர்களின் கண்களுக்குள் காறி உமிழச் சொன்னார்கள். நாங்களும் உடனடியாகக் கட்டளையை நிறைவேற்றினோம். அதுவும் மெல்ல மெல்ல வழமையாக மாறிற்று. 'நாங்கள் துப்பாக்கிக் குண்டுகளை விரயம் செய்யப் போவதில்லை' என்ற செய்தி கைதிகளுக்குச் சொல்லப்பட்டது. கைதிகளின் சவக்குழிகளைக் கைதிகளே தோண்டிய பின்பு எங்களது படைப்பிரிவில் பலசாலிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் 'அக்கும்பி'யால் கைதிகளின் மண்டைகளைப் பிளப்பார்கள். 'அக்கும்பி' என்றால் குண்டந்தடி. எதிரியை அவனே தோண்டிய குழியின் விளிம்பில் நிற்கவைத்து எதிரி குழியினுள் செத்து அல்லது குற்றுயிராக விழும்வரை பிடரியிலும் தலையிலும் மாறிமாறி அடித்துக் கொண்டேயிருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் சடங்குகள் முடிந்ததும் நகர்வுக்கான நேரமாகிவிடும். நாங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கவேண்டும் . இல்லாவிட்டால் ஆயுத பலம் வாய்ந்த எதிரிகள் எங்களைச் சுலபமாக அழித்து விடுவார்கள். சில சமயங்களில் தாக்குதல்களின் பின்பு ஒரு நாள் முழுவதும் நாங்கள் தொடந்து நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருக்கும். ஓய்வுக்கோ தூக்கத்துக்கோ அங்கே இடமில்லை. அரச படையினரின் உலங்கு வானூர்திகள் எங்கள் தலைகளின் மேல் சதா உறுமிக் கொண்டே இருக்கும். இவைகளில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். நாங்கள் உடனடியாகச் சரணடைய வேண்டுமென்றும் இல்லாவிட்டால் முற்றாக அழிக்கப்படுவோமென்றும் எச்சரிக்கைகளை ஒலிபரப்புவார்கள். ஆனால் எங்களால் அப்படிச் சரணடைந்து விட முடியாது. ஏனெனில் நாங்கள் ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி வந்தாயிற்று. இறுதி இலட்சியத்தை அடையும் வரை விடாமல் போர் புரிவதென உறுதிப் பிரமாணமும் செய்திருந்தோம். யாருமே ஒரு குழந்தையைப் போல விசுவாசமாக இருக்க முடியாது. அதிலும் ஓர் அநாதைக் குழந்தையைப் போல விசுவாசமாக இருக்க முடியாது. யாருக்காக நாங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும்? நாங்கள் எங்கு தப்பியோட முடியும்? எங்களது ஒரே சிந்தனை வெயில் தகிக்கும் இந்தப் பற்றைக் காட்டில் பெரியவர்களுடைய வேகமான நடைக்கு ஈடு கொடுத்து வேகமாக நடந்து செல்வதிலேயே இருந்தது. வெயிலில் வதங்கிப் போன குழந்தைகள் தாகத்தால் தவித்தோம். என்னால் இனி மேலும் தாகத்தைப் பொறுக்க முடியாதென்ற நிலை. நல்ல வேளையாக எங்களது தளபதி அடுத்து வரும் கிராமத்தில் தண்ணீர் எடுப்பதென்று முடிவெடுத்தார். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.17.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.17.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115477324693634159?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115477324693634159/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115477324693634159&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477324693634159'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477324693634159'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/26.html' title='குழந்தைப் போராளி - 26'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115477297596485144</id><published>2006-08-05T12:11:00.000+02:00</published><updated>2006-08-05T12:16:15.976+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 25</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier31.1.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/child-soldier31.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#006600;"&gt;இது குழந்தைகளின் விளையாட்டல்ல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#33ff33;"&gt;அ&lt;/span&gt;ரச இராணுவத்தின் மிகப் பெரிய படையணி ஒன்றை நாங்கள் சில நாட்களிலேயே எதிர் கொண்டோம். எங்களுக்கிடப்பட்ட கட்டளைப்படியே நாங்கள் மணலில் "ஒன்றுமறியாது" விளையாடிக்கொண்டிருந்தோம். வந்துகொண்டிருந்த அரச படையினரின் வாகனத் தொடரணி விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளைக் கண்டதும் நிறுத்தப்பட்டது. படையினர் வாகனங்களிலிருந்து கீழே குதித்தனர். அதுதான் நாங்கள் விரித்திருந்த வலையில் அரச படையினர் விழுந்ததற்கான அடையாளம். நாங்கள் எங்கள் படைப் பிரிவினர் பதுங்கியிருந்த திசையை நோக்கி ஓட்டம் பிடித்தோம். நாங்களெல்லோரும் பாதுகாப்பான இடத்திற்கு ஓடிப் போனதும் மற்றவர்கள் அரச படையினரைத் தாக்கத் தொடங்க வேண்டும். ஆனால் திட்டமிட்டபடி காரியங்கள் நடக்கவில்லை. துப்பாக்கிகள் நாங்கள் பதுங்குமிடத்திற்குப் போய்ச் சேர்வதற்கு முன்னதாகவே வெடித்ததால் நாங்கள் மரங்களின் பின்னால் பதுங்கிக் கொண்டோம். வீதியும் அதன் மேலிருந்த எல்லாமும் துண்டு துண்டாக வெடித்துச் சிதறின. வெடிச் சத்தங்கள் காதைச் செவிடுபடுத்தின. இதுவரை இவ்வாறான ஒரு அனுபவமுமே இல்லாத எனக்கு ஈரற் குலை நடுங்கியது. இது விளையாட்டாகத் தெரியவில்லை. நான் எழுந்து செல்ல எத்தனிக்க என் தோழனொருவன் என்னைப் பிடித்திழுத்து மரத்தின் பின்னே அமுக்கி வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சண்டை முடிவடைந்து எங்கள் படைப்பிரிவு தாக்குதலில் வெற்றி பெற்றது. கொல்லப்பட்ட இராணுவத்தினரின் உடைகளும் காலணிகளும் இடம் மாறி அவற்றின் புதுச் சொந்தக்காரர்களை அலங்கரித்தன. எனக்கோ தலை சுற்றியது. இதுதானா விடுதலை? இதைத் தானா நாங்கள் விடுதலைப் போராட்டம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இப்படியானவர்களுடன் நான் சேர்ந்திருப்பதையும் இறந்த உடல்களிலிருந்து பொருட்களை அபகரிப்பதையும் என்னால் ஒரு கெட்ட கனவில் கூட ஏற்றுக்கொள்ள முடியாது. காயமடைந்தவர்கள் வீதியில் கிடப்பதையும் உதவி கோரி அலறுவதையும் பார்த்த எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர்களைப் பகைவர்களாகப் பார்க்க என் மனம் இடம் கொடுக்கவில்லை. சரணடைந்த இராணுவத்தினரின் கைகள் அவர்களின் முதுகுகளிற்குப் பின்னால் வளைத்துக் கட்டப்பட்டிருந்தன. அவர்கள் வலியால் துடித்துகொண்டிருந்தனர். எனது தோழர்கள் சரணடைந்த இராணுவத்தினரைச் சித்திரவதைகள் செய்துகொண்டிருந்தனர். தங்களது அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டோரைத் துன்புறுத்துவதும் சித்திரவதை செய்வதும்தான் மனிதனுக்கு எல்லாவற்றையும் விட அதிக இன்பத்தைக் கொடுக்கும் என்ற எனது கருத்திற்குப் பலம் சேர்ப்பதாகவே நிகழ்வுகள் அமையலாயின. இந்தக் கோணத்தில் பார்த்தால் எனது புதிய "குடும்பம்" பழைய குடும்பத்திற்குக் கிட்டவே நிற்கமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பிடிபட்டவர்கள் உதைக்கப்பட்டும் முகத்தில் காறி உமிழப்பட்டும் முகாமிற்குக் கொண்டுவரப்பட்டர்கள். அங்கு அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எங்களின் பெருந் தலைவர் யோவேரி முசேவெனி எங்களுக்காக முகாமில் காத்துக்கொண்டிருந்தார். அவர் எங்களை ஒரு புகழுரையுடன் வரவேற்றார். அவரின் பேச்சின்படி நாங்கள் சிறுபொழுது மண்ணில் விளையாடியே பெரிய விடுதலை வீரர்களாகியிருந்தோம். அன்று இரவுணவிற்காகத் தலைவருடன் ஒரே மேசையில் அமரும் 'பாக்கியமும்' எங்களுக்குக் கிட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவுணவு முசேவெனியின் பிரத்தியோகக் குடிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முடிவில் எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பரிசு தரப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இராணுவ அதிகாரிகளின் சீருடைகளும் காலணிகளுமே எங்கள் பரிசுப் பொதியினுள் இருந்தன. அன்றிரவு எங்களக்கு காவற் கடைமை தரப்படவில்லை நீண்ட நேரம் தூங்க அனுமதி கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் நாங்கள் எங்கள் பாசறையை ஒரு புதிய இடத்தை நோக்கி நகர்த்தும் ஆயத்தங்களில் இறங்கினோம். ஒரு தாக்குதலின் பின்பும் அதே இடத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருந்தால் இராணுவத்தினர் ஆட்டிலரிப் படைகளுடனும் உலங்கு வானூர்திகளுடனும் எங்களைச் சுற்றிவளைத்து விடக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உயரே கயிற்றிலாடும் ஒரு 'சேர்க்கஸ்' கலைஞனின் லாவகத்தோடு எங்கள் படை நகரத் தொடங்கியது. காலணிகள் முழங்கால்கள் வரை உயர்ந்திருக்க அளவில் மிகப் பெரிய சீருடைகள் எங்களை முற்றாகவே விழுங்கிவிட்டிருந்தன. இந்தக் கோலத்துடன் காட்டுப் பாதையில் அணிவகுத்துச் செல்வதென்பது இலேசான காரியமல்லவே. குழந்தைகள் எல்லோரும் களைத்துப் போயிருந்தனர். நல்ல வேளையாக ஒரு பெண் போராளி தலைவருடன் துணிச்சலாக வாதிட்டு ஒரு சிறிய ஓய்விற்கும் உண்பதற்கும் அனுமதி வாங்கினாள். வழமையைப் போலவே பயறும் சோளமும் தான் சாப்பாடு. குழந்தைகள் நீரைத் தேடியும் நெருப்பிற்கு விறகு தேடியும் போகத் தலைவர் தனது தளபதிகள் புடைசூழ மர நிழலில் இளைப்பாறிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தளபதிகள் குழாமில் ஒரு சிறுமியுமிருந்தாள். 'முக்கோம்போஸி' என இவள் அழைக்கப்பட்டாள். இதன் கருத்து 'விடுவிக்கப்பட்டவள்' என்பதாகும். அரச படையினர் இவளது குடும்பத்தை அழித்தொழித்தபோது NRA இவளைச் சுவீகரித்துக் கொண்டது. இராணுவத்திடமிருந்து இவள் தப்பித்தது ஏறத்தாழ ஒரு அதிசயம் தான். இராணுவத்தினரே இவளது உயிரைக் "காப்பாற்றியதாகவும்" பேசப்படுவதுண்டு. படையினர் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அவர்கள் இவளை ஜீப்பின் முன்னால் கட்டிவைப்பார்களாம். NRAயின் ஒரு வெற்றிகரமான தாக்குதலில் இராணுவத்தினர் கொல்லப்பட இவள் காப்பாற்றப்பட்டாள். வெடி குண்டுகளின் சத்தத்தில் அவள் தனது பெயரைக் கூட மறந்து போயிருந்தாள் . 'முக்கோம்போஸி' இரண்டு விடயங்களுக்காக எங்களிடையே பிரபலமா கியிருந்தாள். அவள் அசாத்தியமான நெஞ்சுரம் கொண்டவள். அடிபாட்டின் போது அவள் RPGயைத் தாங்கித் துணிச்சலுடன் போரிடுவாள். அவள் சிறிய ஆயதங்களைச் சீண்டுவதே கிடையாது. RPG ஒரு 'பஸூக்கா'அளவிற்குப் பெரியது.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கோம்போஸி - நரோன்கோ இருவரும் உயிர்த் தோழிகள். நரோன்கோ முகண்டா பழங்குடியைச் சேர்ந்தவள். ருவேரோ மாவட்டத்திலிருந்து இவளைப் போல பலர் NRAயில் சேர்ந்திருந்தார்கள். ஓர் இரவு பாசறையில் நாங்கள் நெருப்பைச் சுற்றி உட்கார்ந்திருந்தபோது நரோன்கோ தான் ஏன் NRAயில் போரிடுகிறாள் என்று கூறினாள். NRA யினரைத் தேடி இராணுவத்தினர் இவளது வீட்டைச் சோதனையிட்டனர். இவளது கணவன் இராணுவத்தினரால் உதைக்கப்பட்டும் சித்திரவதை செய்யப்பட்டும் கைகள் முதுகின் பின்னே கட்டப்பட்ட நிலையில் வீட்டின் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டான். நரோன்கோவின் கண் முன்னேயே அவளது இரட்டைக் குழந்தைகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தனது கணவனையும் குழந்தைகளையும் கொன்றவர்களுக்குத் தான் தண்டனை வழங்கப் போவதாக அவள் வெஞ்சினத்துடன் சங்கற்பம் செய்து கொண்டாள். அவள் தனது புதிய கணவனாக AK 47ஐ வரித்துக் கொண்டாள். அவள் தனது சங்கற்பத்தை என்றுமே மறந்ததில்லை. குழந்தைப் போராளிகளின் பெயரால் நான் கூறுகின்றேன், அவளது அன்பான நடத்தையை என்னால் என்றுமே மறக்கமுடியாது, &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.16.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.16.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115477297596485144?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115477297596485144/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115477297596485144&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477297596485144'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477297596485144'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/25.html' title='குழந்தைப் போராளி - 25'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115477249575130838</id><published>2006-08-05T12:05:00.000+02:00</published><updated>2006-08-05T12:09:00.793+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 24</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier29.9.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/child-soldier29.1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#cc0000;"&gt;இரண்டாவது பகுதி:&lt;/span&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff0000;"&gt;---------------------------------------------------------------&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;நான் குழந்தைப் போராளி&lt;/span&gt;&lt;br /&gt;--------------------------------------------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:130%;color:#ff6666;"&gt;போராளி சைனா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#6633ff;"&gt;&lt;strong&gt;நா&lt;/strong&gt;&lt;/span&gt;ன் புகையிரதத்தை விட்டு இறங்கியபோது இன்னும் விடிந்திருக்கவில்லை. புகையிரத நிலையத்தில் ஆட்கள் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர். ஒரு வீடு கூட அந்தச் சுற்று வட்டாரத்தில் இல்லை. ஒன்றுமே யோசிக்காது நடக்கத் தொடங்கினேன். தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. நான் வெளிச்சத்தை நோக்கி நடந்தேன். ஒரு மனிதனின் முரட்டுக் குரல் என்னைத் தடுத்து நிறுத்தியது.&lt;br /&gt;"நில்! யார் நீ?"&lt;br /&gt;"நான்தான்" வெகுளித்தனமாகப் பதில் சொன்னேன்.&lt;br /&gt;"கிட்டே வா" அந்த முரட்டுக் குரல் கட்டளையிட்டது. நான் இன்னும் சில அடிகளை முன்னே வைத்தேன்.&lt;br /&gt;"நடுச் சாமத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?"&lt;br /&gt;"நான் எனது அம்மாவைத் தேடுகின்றேன்"&lt;br /&gt;"உனது அப்பா எங்கே?" கேட்டபடியே அந்த மனிதர் தன் கையிலிருந்த 'டோர்ச்'விளக்கை என் முகத்திற்குப் பிடித்தார்.&lt;br /&gt;"அவர் இறந்து விட்டார்" நான் பொய் சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அவரது கேள்விக்குப் பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கிகளுடன் பலர் புதர்களினுள்ளிருந்து வெளியே வந்தனர். அவர்களது உடைகள் அழுக்காகவும் கிழிந்துமிருந்தன. அவர்கள் தங்களுக்குள்ளே என்னைப் பற்றிக் கதைத்துக்கொண்டே ஆள் மாறி ஆள் என் முகத்தை உற்றுப் பார்த்தார்கள். என் கால்கள் நடுங்க தொடங்கின. இவர்கள் என்னை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்களில் ஒருவர் எனது மொழியிலேயே என்னை விசாரணை செய்தார். அது எனக்குச் சற்று ஆறுதலாக இருந்தது, எனது மறுமொழிகளும் அவர்களுக்குத் திருப்தியாக இருந்தன. அவர் என்னைத் தூங்கும்படி சொன்னார். என்னால் அவர் சொன்னதை விளங்கிக் கொள்ளமுடியவில்லை. ஏனெனில் தூங்குவதற்கு வீடெங்கே? கட்டிலெங்கே? அவர் சிரித்துக்கொண்டே தும்பாய்க் கிழிந்திருந்த இரண்டு போர்வைகளை நிலத்தில் விரித்து விட்டு அதில் படுத்துக்கொள்ளும்படி சொன்னார். போர்வைகளில் துர் நாற்றம் வீசியது. கொசுக்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க வேறு வழியின்றிக் கால் முதல் தலைவரை இழுத்துப் போர்த்திக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;" லெப்ட்-ரைட்- லெப்ட்-ரைட்" என்ன இது காதைக் கிழிக்கும் சத்தம்? யார் கத்துகிறார்கள்? விடிகாலையிலேயே ஏன் என்னைக் கூச்சலிட்டு எழுப்புகிறார்கள்? தலையைத் தூக்கிப் பார்த்தேன். இராணுவச் சீருடைகளில் சிறுவர்களும் சிறுமிகளும் அணிவகுத்துச் சென்றனர். கனவு காண்கிறேனா அல்லது எனக்குத்தான் மூளை கலங்கி விட்டதா? கடந்த இரவு நடந்தவற்றைப் பற்றி யோசிக்கையில் நான் நிலைமையை மெதுவாகப் புரிந்து கொள்ளத் தொடங்கினேன்.இவர்கள் என்னையும் இந்த விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்களென நம்பினேன். நேற்றிரவு எனக்குப் போர்வைகளைக் கொடுத்த மனிதர் புன்னகையுடன் என்னிடம் வந்தார். நானும் அந்தச் சிறுவர்களுடன் சேர்ந்து லெப்ட்-ரைட் போடலாமா என நான் கேட்க எனது கால்கள் வீங்கியிருப்பதால் என்னைச் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளும்படி அந்த மனிதர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தின் பின்பு பொருட்களையெல்லாம் தூக்கிக்கொண்டு வேறொரு இடத்திற்கு அந்தப் பாசறையை நகர்த்திச் சென்றார்கள். அங்கு என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவேயில்லை. யாரும் எனக்கு விளக்கம் சொல்லிப் புரிய வைக்கவுமில்லை. மூன்று நாட்களின் பின் மற்றக் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது. எனக்குப் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் அவர்களுடன் அணிவகுத்துச் சென்றேன். அணிவகுப்பு நடை இரண்டு மணி நேரங்கள் நீண்டு சென்றது. பின்பு பதினைந்து நிமிடங்கள் ஓய்வு வழங்கப்பட்டது. ஓய்வின் போது குழந்தைகள் ஒரு குழுவாகவும் பெரியவர்கள் ஒரு குழுவாகவும் அமர்ந்திருந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்குள்ள குழந்தைகளை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். பலர் அந்தச் சூழ் நிலைக்குப் பழக்கப்பட்டவர்களென்பது அவர்களின் முகங்களிலேயே தெரிந்தது. என்னைப் போல புதியவர்களும் அங்கிருந்தனர். அவர்களுடன் என்னால் சரிவரப் பேச முடியாமலிருந்தது. பெரும்பாலான குழந்தைகள் அந்நிய மொழி பேசுபவர்களாக இருந்தனர். பதினைந்து நிமிட ஓய்வின் பின் பன்னிரெண்டு சிறுவர்கள் துப்பாக்கிப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொருவருக்கும் ஒரு AK 47 தரப்பட்டது. கட்டளையிடப்பட்ட உடனேயே அந்தக் குழந்தைகள் துப்பாக்கிகளை அக்கு வேறு ஆணி வேறாகக் கழற்றிச் சில விநாடிகளிலேயே அவற்றை மீண்டும் முழுமையாகப் பொருத்தினார்கள். நான் வாயைப் பிளந்தவாறே அந்தக் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இடைவிடாத இராணுவப் பயிற்சிகளின் மூலம் அவர்கள் என்னை ஆயுதப் போராளியாக உருவாக்கத் தொடங்கினார்கள். மூன்றாவது நாள் நான் சிறுவர் சிறுமியர்களுடன் காலைப் பயிற்சிக்காக மைதானத்தில் நின்றிருந்த போது போது எனது பயிற்சியாளர் என் முன்னே வந்து நின்றார். அவர் ஓங்கு தாங்கான உடலமைப்பைக் கொண்ட கண்டிப்பான மனிதர். அவர் தன் கண்களால் என் இருதயத்தை ஊடுருவ முயன்றார். என்னிடம் பல கேள்விகளைக் கேட்டார். கடைசியாக நான் எனது பெயரைக் கூற வேண்டும். அவர் வட உகண்டாவிலிருந்து வந்திருந்ததால் எனது பெயரை உச்சரிப்பது அவருக்குக் கடினமாக இருந்தது. அவருடைய இயலாமை என் மீது கோபமாய்த் திரும்பியது. நான் தலையைத் தாழ்த்திக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏய் உன்னைத்தான், சீனர்களைப் போல இடுங்கிய கண் உள்ளவளே என்னை நிமிர்ந்து பார்!" அவர் உறுமினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சடுதியில் நான் தலை உயர்த்திப் பார்த்தேன். என் நாடி நரம்புகள் புடைத்துக்கொண்டன. என்னை வரிசையிலிருந்து முன்னே வரச் சொன்னவர் "சைனா லெப்ட்-ரைட்- சைனா லெப்ட்-ரைட்" என எனக்குக் கட்டளையிட்டார். நான் எல்லோர் கண் முன்னும் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருந்தது. 'சைனா' என்ற புதிய விநோதமான பெயர் எனக்கு ஒரு பிரபல்யத்தை எனது சக போராளிகளிடம் பெற்றுத் தந்தது. பல குழந்தைகள் என்னுடன் சிநேகிதம் பாராட்டத் தொடங்கினர். பாஷை இடம் கொடுத்த வரைக்கும் நாங்கள் பேசிக்கொண்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'கிகாண்டா', 'சுவாஹிலி' ஆகிய இரண்டு மொழிகளையும் நான் வேகமாகப் பயில வேண்டியிருந்தது. எனது மொழியான 'கினியான்கோலே'யை வெகுசிலராலேயே இங்கு புரிந்து கொள்ள முடிந்தது. இங்கு அதிகமான குழந்தைகள் 'பகண்டா' இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 'கிகாண்டா' மொழி பேசுபவர்கள். 'சுவாஹிலி' ஓர் இனக்குழுவின் மொழியல்ல. முசேவெனி என்பவர் இதனை உகண்டாவின் தேசிய மொழியென அறிவித்திருந்தார். இதற்கு இரண்டு காரணங்களை அவர் முன்வைத்தார். ஒன்று பொது மொழியை நிறுவுவது, மற்றது இனக்குழு அடையாளங்களை இல்லாதொழிப்பது. அவர் இனக் குழுக்களுக்கு இடையிலான வித்தியாசங்களை மக்களிடமிருந்து அகற்றிவிட முயன்றார். "நாங்கள் எல்லோரும் ஒரு பொதுவான விடயத்திற்காக - எங்கள் விடுதலைக்காக மட்டுமே- போராட வேண்டும் " என்பதே முசேவெனியின் முழக்கமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சைனா என்ற சிறுமி நீண்ட காலம் இராணுவப் பயிற்சியைப் பெறவில்லை. அவள் போராளிச் சிறுமியாகக் குறிப்பிடத்தக்களவு திறமையைக் காட்டியதற்காகவோ அல்லது மிக விரைவாகத் தனது பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றாள் என்பதற்காகவோ அல்லாமல் NRA யின் போர் முனைகளில் போராளிகள் அவசரமாகத் தேவைப்பட்டார்கள் என்ற காரணத்தினாலேயே போர் முனைக்கு அனுப்பப்பட்டாள். AK 47 துப்பாக்கியையே இன்னும் சரிவரத் தூக்க முடியாத சிறுமிகளில் ஒருத்தியான நான் ஒரு படைத் தளபதியின் பிரத்தியேக ஆயுத உபகரணங்களையும் பொருட்களையும் தூக்கிச் செல்லும் பணிக்கு நியமிக்கப்பட்டேன். நான் தளபதியின் ரவைக் கூடுகளையும் அவரின் சமையல் பாத்திரங்களையும் சுமந்து போர்முனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.15.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.15.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115477249575130838?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115477249575130838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115477249575130838&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477249575130838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115477249575130838'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/24.html' title='குழந்தைப் போராளி - 24'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115452407780636318</id><published>2006-08-02T16:14:00.000+02:00</published><updated>2006-08-05T11:52:05.986+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 23</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2032.6.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier%2032.4.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;அம்மா&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff99ff;"&gt;நா&lt;/span&gt;ங்கள் நீண்ட தூரம் நடந்ததன் பின்பாக இரண்டு பெண்கள் தூரத்தில் நடந்து வருவது தெரிந்தது. " ஆஹா நல்லது! அங்கே வருபவர்களில் ஒருத்தி உனது அம்மா" என எனது பஸ் நண்பர் சத்தமிட்டார். நான் அதிர்ந்து போய் வந்த வழியே திரும்பி ஓடிவிடலாமா என நினைத்தேன். அந்தப் பெண்கள் எங்கள் பக்கத்தில் வந்துவிட்டார்கள். எனது நண்பர் அவர்களில் ஒரு பெண்ணிடம் என்னைக் காண்பித்து நான் அவரைத்தான் தேடி வந்திருப்பதாகச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;நானும் அந்தப் பெண்ணும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அவரின் பார்வையில் நான் உறைந்து போனேன். பற்றீசியா படத்தில் காட்டிய பெண்ணிற்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லாத வித்தியாசமான தோற்றம். வயது வேறு அதிகமாயிருந்தது. உனது அப்பாவின் பெயர் என்ன? உனது சகோதரர்களின் பெயர்கள் என்ன? என அவர் கேள்விகளை அடுக்கினார். எனது மறுமொழிகளுக்கு ஒவ்வொரு முறையும் அவர் தனது புருவங்களை தூக்கினாரே தவிர வேறொன்றும் சொல்லவில்லை. என்னுடன் வந்தவரை அவர் அனுப்பிவிட எத்தனிக்க எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. நான் அந்த மனிதருடனேயே திரும்பிப் போய்விடலாமா என யோசித்துக் கொண்டு நிற்கச் சிரித்தபடியே அந்தப் பெண் எனது கைகளைப் பிடித்துக்கொண்டார். தனது பெண் குழந்தைகளில் தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பவள் எந்தக் குழந்தையென அவருக்கு நிச்சயமாகவே தெரிந்திருக்கவில்லை. அவரின் முகத்தில் அணு அணுவாய் மகிழ்ச்சி தொற்றி அது அவர் முகமெங்கும் பூரணமாய்ப் படர்ந்தது. அவர் எனது கையை வாஞ்சையுடன் பிடித்துக்கொண்டே நடக்கத் தொடங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அந்த நாய் எனது குழந்தைகளை ஒருமுறை தன்னும் பார்க்க என்னை&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/csoldiers74.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/csoldiers74.jpg" border="0" /&gt;&lt;/a&gt; அனுமதிக்கவில்லை என்னால் உன்னை அடையாளமே கண்டுகொள்ள முடியவில்லை மகளே" அப்பாவைக் குற்றம் சாட்டியவாறே அவர் வேகமாக நடந்தார். நான் அமைதியாக அவருடன் நடந்தேன். இவர் எனது தாய். நான் உண்மையாகவே எனது அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்.&lt;br /&gt;மலர்களும் நிழல் தரும் மரங்களும் நிறைந்த பெரிய தோட்டத்தின் மத்தியிலிருந்த பெரிய வீடொன்றிற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். அம்மா வேலையாட்களைக் கூப்பிட்டுக் கன்றொன்றை வெட்டி விருந்து சமைக்குமாறு உத்தரவிட்டார். அதன் பின்பு என்னைத் தனியாக விட்டுவிட்டு வந்த வழியிலேயே அம்மா திரும்பிச் சென்றார். வீட்டினுள் நுழைவதற்கு முன்பாக வீட்டை ஒருமுறை சுற்றி வந்தேன். வீட்டினுள் நுழைந்து அம்மாவின் கணவர் இருக்கின்றாரா என ஒவ்வொரு அறையாக எட்டிப் பார்த்தேன். வீட்டினுள் யாருமே இருக்கவில்லை. ஒரு அறையினுள் சென்றபோது மேசை மேல் பணம் கிடப்பதைப் பார்த்தேன். சில நிமிடங்கள் பணத்தைப் பார்த்துக்கொண்டே நின்றேன். திரும்பிப்போக எத்தனிக்கையில் 'ஏதாவது பிரச்சனைகள் வந்தால் பணம் உதவி செய்யும்' என எனது உள்மனம் சொல்லியது. கொஞ்சம் பணத்தினை எடுத்து வைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் அம்மா ஆண்களும் பெண்களுமாக ஒரு கூட்டத்தையே அழைத்து வந்தார். பெண்கள் பானைகளுடன் தங்கள் வேலையை ஆரம்பிக்க ஆண்கள் நெருப்பை மூட்டத் தொடங்கினர். அம்மா என நம்பப்பட்ட அந்தப் பெண் கூட்டத்தினரிடையே செல்வதும் ஓடி ஓடிக் கதைப்பதுமாகயிருந்தார். அந்தக் கூட்டத்தினிடையே என் பெயர் பலமாக அடிபட்டது.மெதுவாக இருள் பரவத் தொடங்கியது. விருந்தினர்களில் சிலர் மேசையில் உட்கார்ந்தனர். எஞ்சியவர்கள் தோட்டத்தில் உட்கார்ந்திருந்தனர். எல்லோருமே என்னைப் பார்த்துச் சிநேகிதமாகச் சிரித்தனர். ஆனாலும் அச்சம் என்னைவிட்டு அகன்றதாகயில்லை. இவர்கள் என்னைப் பார்த்து மகிழ்கின்றார்களா? அல்லது என்னையே தின்றுவிடப் போகிறார்களா? குழந்தைகளைச் சாப்பிடும் மனிதர்கள் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். மறுபுறத்தில் பார்தால் மேசை மீது இருக்கும் உணவை அவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பது தெரிந்தது. எல்லோருக்கும் போதுமான அளவு உணவு வகைகள் மேசையில் குவிந்து கிடப்பதால் தற்சமயத்துக்குக் கவலையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;விருந்து முடிவடைந்து எல்லோரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்செல்ல இரவு வெகு நேரமாயிற்று. இப்போது இந்தப் பெண்ணுடன் நான் தனிமையில் விடப்பட்டுள்ளேன். இவர் தான் எனது அம்மா என உறுதியாகவே நம்பலாம். அம்மா என்னைப் படுக்கைக்குக் கொண்டுவந்து விட்டுவிட்டுத் தனது படுக்கை அறைக்குச் சென்றார். படுக்கையில் படுத்துக்கொண்டே விருந்துக்கு வந்திருந்த மனிதர்களைப் பற்றியும் அவர்கள் திரும்பி வந்து என்னைச் தின்பார்களோ என்றும் சிந்தித்தவாறே படுக்கையில் புரண்டுகொண்டிருந்தேன். வீட்டில் கேட்கும் சிறிய சத்தங்களை எல்லாம் கூர்ந்து கவனித்தேன். யாரோ கத்தியைத் தீட்டுவது போலல்லவா சத்தம் கேட்கிறது? தோட்டத்தில் காலடிச் சத்தமா கேட்கிறது? எல்லாச் சத்தங்களும் அடங்கியும் என் பதற்றம் குறையவில்லை. அது வரவரக் கூடிக்கொண்டே போயிற்று. ஒரு கணத்தில் சத்தம் போடாமல் எழுந்து மெதுவாகத் தோட்டத்தினுள் சென்றேன். பிறகு விறுவிறுவென வெளியே நடக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த வழியால் சென்றால் நேற்றிரவு சந்தித்த அந்த முதியவரின் வீட்டிற்குச் செல்லலாம்? பிரதான சாலையை நினைவில் கொண்டுவந்தேன்.அவருக்கு என் கதை முழுவதையும் சொல்லி அவரின் வீட்டிலேயேயே நான் நிரந்தரமாகத் தங்கிவிடலாம். அவருக்கான பணிவிடைகளையும் வீட்டு வேலைகளையும் என்னால் செய்ய முடியும். அந்த இரவில், அந்த அந்நியமான வழியில் நிலவும் நட்சத்திரங்களும் தான் எனக்கு நம்பிக்கை அளித்தன. தெருவிளக்குகளிலும் பார்க்க நட்சத்திரங்கள் தான் பிரகாசமாயிருந்தன. அவைகள் எனக்குத் துணைவரும் என நம்பிக்கொண்டு நடந்தேன். சிறிது நேரம் நடந்த பின்பு நான் போகும் வழி சரியானதல்ல எனத் தோன்றியது. அந்த முதியவரின் வீடு இன்னும் வரவில்லை. திரும்பி வந்த வழியே போவது நல்லதா? அல்லது இரவென்றபடியால் இடம் வேறுமாதிரித் தெரிகிறதா? நான் தொடர்ந்தும் நடந்தேன். களைப்பு என்னைத் தெளிவாகச் சிந்திக்கவிடவில்லை. கடந்த இரண்டு நாட்களாக ஒரு பெரிய பெண்ணப் போல வேசம் கட்ட வேண்டியிருந்தது. இப்போதோ ஒரு சோம்பேறியைப் போல இலக்கின்றி அலைந்து கொண்டிருக்கிறேன். நான் எங்கு செல்லவேண்டும்? மயக்க மருந்தை உட்கொண்டதைப் போலத் தலை சுற்றியது. ஆனால் நான் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் தொடருந்து நிலையமொன்றை வந்தடைந்தேன். ஏறும் தளத்தில் நின்று கொண்டு அடுத்ததாக என்ன செய்யலாமென யோசித்தேன். ஒன்றுமே புலப்படாததால் அடுத்து வந்த ரயிலில் ஏறிக்கொண்டேன். அது எங்கு போகிறது? நான் எங்கு போகிறேன்?எதுவுமே எனக்குத் தெரியவில்லை. ஒரு பயணச் சீட்டை வாங்கியபின் தூங்கிப் போனேன். புகையிரதம் ஒரு தரிப்பிடத்தில் நின்ற போது எனது தூக்கம் மெல்லக் கலைந்தது. &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.14.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.14.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115452407780636318?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115452407780636318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115452407780636318&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452407780636318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452407780636318'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/23.html' title='குழந்தைப் போராளி - 23'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115452357562173342</id><published>2006-08-02T16:12:00.000+02:00</published><updated>2006-08-05T11:50:28.650+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 22</title><content type='html'>&lt;p align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2032.5.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier%2032.3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ffff00;"&gt;அம்மாவைத் தேடி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff0000;"&gt;&lt;strong&gt;எ&lt;/strong&gt;&lt;/span&gt;னக்கு மெதுவாக உடல் தேறி வந்தது. அதுகூட அப்பாவின் மனைவிக்குப் பிடிக்கவில்லைப் போலும். அவர் புயலுக்குப் பின் தோன்றும் கொடூரமான அமைதி போல அலைந்து கொண்டிருந்தார். அப்பாவும் அமைதியாகவே இருந்தார். என்னுடன் சிறிது அன்பாகக் கூடயிருந்தார். அவர் எனது முறிந்த விரல்கள் குணமாகும் வரை காத்திருந்தார் போலும். விரைவிலேயே பாடசாலை விடுமுறை வந்தது. நாள் முழுதும் வீட்டிலிருப்பதை நினைக்கவே பயமாயிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/march1.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/march1.jpg" border="0" /&gt;&lt;/a&gt;விடுமுறைக்கு முந்தைய நாளில் மகிழ்வும் துக்கமும் கலந்த உணர்வுடன் பாடசாலைக்குச் சென்றேன். எல்லோரும் பாடசாலை மண்டபத்தில் கூடியிருந்தனர். மாணவர்களின் பெற்றோர்களும் அங்கு வந்திருந்தனர். என்னருகில் யாருமில்லை. மாணவர்களின் பெறுபேறுகள் அறிவிக்கப்படத் தொடங்கும் போது என் மனதை அச்சம் படிந்த நம்பிக்கை சூழ்ந்திருந்தது. நான் வகுப்பின் முதன் மாணவியானால் எனக்கும் பரிசு கிடைக்கும். தலைமையாசிரியர் மேடையிலேறி முதலாம் இடங்களைப் பிடித்திருந்த மாணவ மாணவிகளுக்கு நன்றி கூறினார். தராதர அறிக்கை வாசிக்கும் நேரமும் வந்தது. இரண்டு பெயர்கள் அறிவிக்கப்பட்டன. மூன்றாவதாக எனது பெயரும் வாசிக்கப்பட்டது. எனக்குப் பாடப்புத்தகங்கள், வண்ணம் தீட்டும் பென்ஸில்கள் பரிசாகக் கிடைத்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தலைமைசிரியர் விடுமுறையை அறிவித்ததும் நாங்கள் மரபான விளையாட்டொன்றைத் தொடங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு மரக் கிளையைத் தேடி எடுத்துக்கொண்டோம். எங்களுக்குப் பிரியமில்லாத ஒவ்வொருவருக்காவும் ஒரு சிறிய கிளையை மண்ணில் நாட்ட வேண்டும். அடுத்த பருவ காலத்தை மாணவர்கள் மன்னித்தல் மறத்தலுடன் தொடங்குவதே இந்த விளையாட்டின் நோக்கம். அது முடிவடைந்ததும் எனது தோழிகளுடன் கதைத்துக் கொண்டே வீட்டை நோக்கிச் சென்றேன். வழியில் என்னை இடைமறித்த சோபியா சிற்றன்னையும் அவரது தாயாரும் வீட்டின் முன்னால் தெருவில் கோபத்துடன் எனக்காகக் காத்திருப்பதாகவும் நான் வீட்டிற்கு நேரங் கழித்துச் செல்வதால் அவர்கள் அப்பாவிடம் சொல்லி என்னைத் தண்டிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் என்னிடம் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கண்ணீருடன் போராடிய நான் செய்வதறியாது எனது உண்மையானத் தாயைத் தேடிப் பற்றீசியாவின் வீட்டை நோக்கிப் போனேன். வழி முழுவதையும் எனது கண்ணீரால் நனைத்தபடியே நடந்து சென்றேன். பற்றீசியாவும் அவரது இரண்டு மகள்களும் வீட்டின் முன் புறத்தில் நின்றிருந்தனர். என்னைக் கண்டதும்&lt;br /&gt;"நீ இங்கு வந்தது உனது அப்பாவிற்குத் தெரியுமா?" என்பதே பற்றீசியாவின் முதற் கேள்வியாக இருந்தது. இல்லையெனத்&lt;br /&gt;தலையை அசைத்துக்கொண்டே எனது முறிந்த விரல்களை அவருக்குக் காட்டி "என்னை எனது உண்மையான அம்மாவிடம் கூட்டிச் செல்லுங்கள்" எனப் பற்றீசியாவிடம் மன்றாடினேன். பற்றீசியா தலையைக்குனிந்து கொண்டே "இல்லை ...என்னால் முடியாது உனது அப்பாவை நினைத்தால் எனக்கு அச்சமாயிருக்கிறது. நீ உடனடியாக உன் வீட்டுக்குத் திரும்பிப் போய்விடு" என்றார்.&lt;br /&gt;"என்னை அங்கு திருப்பி அனுப்பினால் விசம் குடிப்பேன்" என்று உறுதியான குரலில் சொன்னேன். பற்றீசியாவின் மகள்கள் என்னைத் தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றனர். இரவுணவு முடிந்ததும் பற்றீசியா எனது அம்மாவின் படத்தைக் காட்டினார். நான் தோற்றத்தில் அம்மாவையே உரித்து வைத்திருப்பதாகக் கூறி அம்மாவிடம் எப்படிச் செல்ல வேண்டுமென்று வழியையும் விபரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;1984ம் ஆண்டு, அப்போது எனக்குப் பத்து வயது, பற்றீசியா பேருந்து நிலையம் வரை என்னுடன் வந்து பயணச் சீட்டொன்றும் வாங்கித் தந்து என்னை வழியனுப்பி வைத்தார். ஓடும் பஸ்சினுள் இருந்து கொண்டு கடைசித் தரிப்பிடத்தில் அம்மா எனக்காகக் காத்திருப்பது போலக் கற்பனை பண்ணிக்கொண்டேன். என் கண்ணீரை என்னால் நிறுத்தமுடியவில்லை.&lt;br /&gt;நடு வழியில் பஸ் இராணுவச் சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டது. எல்லாப் பயணிகளும் பஸ்சிலிருந்து இறங்கி வரிசை கட்டி நின்றோம். என்னைப் பயம் பிடித்துக் கொண்டது. இராணுவத்தினர் பயணிகளைச் சோதனையிடத் தொடங்கினர். கைப்பைகளும் பயணப் பொதிகளும் சோதனைக்குள்ளாயின. சில பயணிகள் துப்பாக்கியின் பின் புறத்தால் அடிக்கப்பட்டனர். யாரிடம் அடையாள அட்டை இல்லையோ அவர் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்டுப் பற்றைகளின் பின்னால் இழுத்துச் செல்லப்பட்டார். பயங்கரவாதிகள் எல்லாப் பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் கடத்தத் திட்டமிட்டிருப்பதால் அந்தப் பாதையில் போக்கு வரத்துத் தடை செய்யப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்தார்கள். பஸ் சாரதி எல்லோருக்கும் பயணக் கட்டணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தொடங்கினார். இந்த அமளிக்குள் நான் எனது பயணச் சீட்டைத் தொலைத்துவிட்டிருந்தேன். எவ்வளவு கெஞ்சிக்கேட்டும் எனது பணத்தைத் திருப்பித் தர பஸ் சாரதி மறுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது பக்கத்தில் நின்றிருந்த மனிதர் நான் ஏன் அழுகின்றேன் எனக் கேட்டார். நான் அவருக்கு அம்மாவைத் தேடிப் புறப்பட்டதைப் பற்றிச் சொன்னேன்." உனது அம்மாவின் வீடு எங்கேயுள்ளது என உனக்குத் தெரியுமா?" என அவர் கேட்க நான் ஆம் எனத் தலையசைத்தேன். அவர் எனது அம்மாவின் பெயரைக் கேட்டார். நான் அம்மாவின் பெயரை உச்சரித்ததும் எனக்கொரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம்! அந்த மனிதருக்கு என் அம்மாவைத் தெரிந்திருந்தது. அம்மாவின் கணவர் நகரசபையில் முக்கிய பதவியை வகிப்பவரென்றும் மிகவும் செல்வாக்கான மனிதரென்றும் அவர் கூறினார். அம்மாவின் கணவர் செல்வாக்கு மிக்கவராயின் அம்மா அதனைப் பயன்படுத்தி ஏன் தனது குழந்தைகளைக் காப்பற்றிக்கொள்ளவில்லை? எனக்கு எரிச்சலாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சில மணித்தியாலங்கள் நடந்ததன் பின்பாக சந்தை போன்ற ஓர் இடத்தினை அடைந்தோம். எனது புதிய நண்பர் என்னை வெளியே விட்டுவிட்டு உணவு விடுதி ஒன்றில் புகுந்து கொண்டார். எனக்கும் பசியாக இருந்தது. எனவே பசியை மறக்கப் பராக்குப் பார்க்கலாமெனப் புறப்பட்டேன். சிறிது தூரத்திலேயே காவல் நிலையமொன்றும் சில கட்டடங்களுமிருந்தன. பற்றீசியா சொன்ன அடையாளங்களை அவை ஒத்திருந்தன. காவல் நிலையத்தின் முன்னால் இரண்டு பெண்கள் நின்று கொண்டிருந்தனர். நான் அவர்களிடம் அம்மாவைப் பற்றி விசாரித்தேன். அவர்களுக்கு அம்மாவைத் தெரிந்திருக்கவில்லை. எனவே மீண்டும் சந்தையடிக்கே திரும்பினேன். என்னை விட்டுவிட்டுச் சாப்பிடச் சென்ற புதிய நண்பருக்காகக் காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தின்பின் பஸ்ஸில் பயணம் செய்த மற்றப் பிரயாணிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து பற்றைக் காடுகள் வழியாக நடக்கத் தொடங்கினோம். அதுதான் குறுக்குப் பாதை எனச் சொல்லப்பட்டது. அந்தப் பாதை முடிவின்றி நீண்டுகொண்டே சென்றது. ஆங்காங்கே சில பற்றைகள், சில மரங்கள், வெறுமை என எங்கள் பயணம் சலிப்பூட்டியது. இந்த நடைப் பயணத்தில் எனது மனமும் உடலும் தளர்ந்து போயின. நான் நீண்ட தூரம் நடந்திருந்ததால் எனது கால்களில் வலியெடுத்தது. வேகமாக நடக்கமுடியாது மற்றவர்களிடமிருந்து பின் தங்கத் தொடங்கிய நான் ஒரு கட்டத்தில் முற்றாகத் தளர்ந்து போய்த் தரையில் உட்கார்ந்து கொண்டேன். எனது புதிய நண்பர் என்னை எழவைக்க முயற்சிகள் செய்து களைத்துப் போய் என் கன்னத்தில் பளீரென ஒர் அறை விட்டார். அந்த அடி எனக்கு வழிகாட்ட நான் தொடர்ந்து நடக்கத் தொடங்கினேன். எனது கால்களின் வலியைப் பொருட்படுத்தாது தொடர்ந்து நடக்க என்னை நானே கட்டாயப்படுத்திக் கொண்டேன். ஒரு 'ரோபோ'வைப் போல ஒருகால் மாறி ஒருகாலென நடந்து சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருளில் ஒரு வீட்டின் முன்னால் வந்து நின்றோம். என்னுடன் வந்தவர் நான் அங்கு இரவைக் கழிக்கலாமெனக் கூறினார். அந்த வீடு ஒரு முதியவருக்குச் சொந்தமானது. அவர் அங்கே தனியாக வசிக்கிறாராம். எனக்குச் சரியாக ஒன்றும் விளங்கவில்லை. களைப்பு எனது சிந்தனையை மழுங்கடித்துவிட்டிருந்தது.அந்த முதியவரும் என்னிடம் ஒரு வார்த்தை தன்னும் பேசவில்லை. அவர் மேசையில் உணவை வைத்தார். இருவருமே அமைதியாகச் சாப்பிட்டோம். இந்த அமைதி எனக்கு நிம்மதியாக இருந்தது. சாப்பிட்டதும் என் கண்கள் சொக்கிப் போயின. நான் அந்த நிமிடத்திலேயே தூங்கிவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் நான் புத்துணர்ச்சியுடன் இருந்தேன். அந்த முதியவரைக் கவனமாகப் பார்த்தேன். குள்ளமான உருவமுடைய அவர் ஆடைகளைத் தாறுமாறாக அணிந்திருந்தார். அவரின் தலை வழுக்கையாக இருந்தது. அவரின் எஞ்சியிருந்த முடிகள் நரையோடிக் கிடந்தன. நாங்கள் காலையுணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கதவு தட்டும் சத்தம் கேட்டது. என்னை இங்கு அழைத்து வந்திருந்த மனிதர் உள்ளே வந்தார். முதியவருக்கும் அவரின் உபசரிப்புக்கும் நன்றி கூறி நான் எனது வழிகாட்டியுடன் புறப்பட்டேன். பழத் தோட்டங்களினூடாகப் பிரதான வீதிக்கு நடந்து செல்லும்போது அந்த முதியவருக்கு என் இருதயத்தால் நன்றிகளைச் சொல்லிக் கொண்டே நடந்தேன். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.13.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.13.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115452357562173342?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115452357562173342/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115452357562173342&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452357562173342'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452357562173342'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/22.html' title='குழந்தைப் போராளி - 22'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115452333316795624</id><published>2006-08-02T16:08:00.000+02:00</published><updated>2007-01-03T01:00:35.893+01:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 21</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2032.4.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier%2032.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#993399;"&gt;இருளில் ஓர் ஒளிக்கீற்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#cc33cc;"&gt;ஒ&lt;/span&gt;ருவாரம் கழிந்தது, அப்பா திரும்பி வரவேயில்லை, சிற்றன்னையுமில்லை. பண்ணையில் எங்களது ஆட்சி தான். பாட்டி வழமைக்கு மாறாக அமைதியாக இருந்தார். நாங்கள் என்ன செய்கிறோமென அவர் கவனிக்கவில்லை. ஒருநாள் நாங்கள் வேட்டை முடிந்து திரும்புகையில் மாஹியை வழியில் சந்தித்தோம். தனது ஆடைகளுக்காகவும் சில மிட்டாய்களுக்காகவும் எங்களது காசைக் கரியாக்கிய எங்கள் சகோதரி. இம்முறையும் அவள் மிட்டாய்களைக் கொண்டு வந்திருந்தாள். இம்முறை தான் அழகாக இருக்கிறாளா என அவள் எங்களிடம் கேட்கவில்லை. அப்பா கைது செய்யப்பட்டதைப் பற்றி அவளுக்குச் சொல்வதற்கு நாங்கள் மிக ஆர்வமாயிருந்தோம். அப்பாவிற்கு நடந்ததைச் சொல்லி முடித்த போது அவள் "அப்பா பெரியதொரு குற்றத்தைச் செய்திருக்கிறார் அதனால் அவர் நீண்ட நாட்கள் சிறையிலிருப்பார்" எனச் சொன்னாள். நாங்கள் பாடசாலையிலிருந்து அப்பாவால் நிறுத்தப்பட்டதை அறிந்ததும் "சிற்றன்னையின் குழந்தைகளும் பாடசாலையிலிருந்து நிறுத்தப்பட்டனரா?" என மாஹி கேட்க இல்லையென்று தலையசைத்தேன். கொத்துவதற்கு முன்பு பாம்பு சீறுமே! அதேபோல மாஹி சீறினாள். அவளின் கண்கள் கோபத்தில் மின்னின. மாஹி எங்களை மீண்டும் நகரத்திற்கு அழைத்துச் சென்றாள். சில நாட்களிலேயே மறுபடியும் எங்களைப் பாடசாலைக்கு அனுப்பிவைக்க அவளால் முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child_soldier_194.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child_soldier_194.jpg" border="0" /&gt;&lt;/a&gt;மாஹி அப்பாவைப் பார்க்க விரும்பினாள். நான் அவளுடன் கூடச் செல்ல வேண்டும். அப்பா சிறையில் எப்படியிருக்கிறார் என்று பார்த்து விடுவதற்கு எனக்கு மிக மிக ஆசையாயிருந்தது. சிறை வாயிலில் நின்றிருந்த காவலர்கள் எங்களைக் கூர்ந்து கவனித்தனர். காவலர்களில் ஒருவன் மாஹியைக் கூப்பிட்டான். நான் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். மாஹியோ தயக்கமேயில்லாது அவனை நோக்கி அன்ன நடை போட்டுச் சென்றாள். தனது கவர்ச்சியான சிரிப்பால் அவனை மயக்கி நாங்கள் உள்ளே செல்வதற்கு லஞ்சமே கொடுக்காது அனுமதியும் வாங்கினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நிமிடங்களில் ஒரு காவலாளி அப்பாவை அழைத்து வந்தான். சாம்பல் நிற அரைக் காற்சட்டையும் அதே நிறத்தில் கட்டைக் கைச் சட்டையும் உடுத்தியிருந்த அப்பாவின் தலை மொட்டையடிக்கப்பட்டிருந்தது. தரையில் உட்காரச் சொல்லி அப்பாவிற்கு காவலாளி கட்டளையிட்டான். அப்பா வெட்கம் பிடுங்கித் தின்னக் கூனிக் குறுகியபடி தரையில் உட்கார்ந்தார். நாங்கள் அவருடன் இருந்த முழு நேரமும் அவர் தன் தலையைக் குனிந்தவாறே இருந்தார். அவர் என்னுடன் இரண்டொரு வார்தைகள் மட்டுமே பேசினார். மாஹியிடம் தான் அவர் கூடுதலாகப் பேசினார். அப்பா மாறியிருக்கின்றாரா எனக் கண்டு பிடிப்பதிலேயே என் கவனம் முழுவதுமிருந்தது. ஆனால் நான் அவரின் முகத்தில் ஒரு இறுக்கமான சிரிப்பைத் தவிர வேறெதையும் கண்டு பிடிக்கவில்லை. பேச்சு எங்கள் பாடசாலை, படிப்பு என வந்ததும் அப்பாவும் மாஹியும் கடுமையான வாய்த் தர்க்கத்தில் இறங்கினார்கள். எனக்கு அப்பாவைப் பார்க்க பரிதாபமாயிருந்ததால் நான் மாஹியை இந்த விவாதத்தை நிறுத்தச் சொல்லிக் கேட்டும் அவள் அடங்கவில்லை. காவலாளி அப்பாவை அவரது சிறைக் கூண்டுக்குத் திரும்பச் சொல்லிக் கட்டளையிட்டான். இதனால் அவரிடம் சரியாக விடைபெறக் கூட என்னால் முடியவில்லை. என் கண்களில் பொங்கி வந்த நீர் மாஹியின் கோபத்துக்குக் கட்டுப்பட்டு நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;மாஹி கம்பலாவிற்குச் சென்று விட்டாள். சிற்றன்னை என்னை வேண்டா வெறுப்பாக பாடசாலைக்குச் செல்ல அனுமதித்துக்கொண்டிருந்தார். ஆனால் தம்பி ரிச்சட் பண்ணைக்குத் திருப்பி அனுப்பப்பட்டான். புதுப் பாடசாலை சுவாரஸ்யமாக இருந்தது. எனது பழைய பாடசாலையின் ஆசிரியர்களைவிட இங்கே ஆசிரியர்கள் புரிந்துணர்வு உள்ளவர்களாக இருந்தார்கள். சிறிது காலத்திலேயே நான் வகுப்பின் முதன்மை மாணவியானேன். ஆனால் சக மாணவர்களுடனான உறவில் சிக்கலுக்கு மேல் சிக்கல் ஏற்பட்டது. அவர்கள் எனது இனக் குழுவைத் தீவிரமாக வெறுத்தார்கள்.எனது முகவெட்டும் உதடுகளின் அமைப்பும் வெளிறிய தோலும் என்னைச் சக மாணவர்களிடமிருந்து புறம்பானவளாக - ஒரு துற்சியென - அடையாளம் காட்டிக்கொண்டேயிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மாஹி வீட்டைவிட்டு போன பின்பு சிற்றன்னை கிழமைக்கு ஒன்றாக மாடுகளை விற்கத் தொடங்கினார். எனது பாடசாலைக் கட்டணத்தைக் கட்டுவதற்கு பணம் தேவைப்படுகிறது என்பது அவரது வாதம். அவரின் சகோதரிகள் அடிக்கடி எங்களின் வீட்டுக்கு வந்து போகத் தொடங்கினார்கள். அப்பாவால் விரட்டியடிக்கப்பட்ட சிற்றன்னையின் தாய் ஜேனும் சிற்றன்னையின் சகோதரி கிறிஸ்ரினாவும் ஒவ்வொரு மாலையும் வீட்டிற்கு வரத் தொடங்கினர். எங்களின் பணத்தைத் தாராளமாக அவர்கள் தின்றார்கள். கடைசியில் கிறிஸ்ரினா எங்கள் வீட்டிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றன்னை எப்போதாவது ஒருமுறை தான் சிறைச்சாலைக்குச் சென்று அப்பாவைப் பார்த்து வந்தாள். அப்பா சிறையிலிருந்து விடுதலையாகாமலேயே போகலாம், அதே போல சிற்றன்னை அப்பாவின் பணம் முழுவதையும் அபகரித்துக்கொண்டு என்னை வீட்டைவிட்டும் விரட்டியடிக்கலாம். அப்பா ஒரு தீய மனிதர். அவர் சிறையிருப்பது நியாயமானது. அது அவராகவே தேடிக்கொண்டதும்தான். ஆனால் சிற்றன்னையிடமிருந்தும் 'தட்டிச் சுத்தும்' சிற்றன்னையின் குடும்பத்திடமிருந்தும் என்னைக் காப்பாற்றக் கூடியவரும் அவர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பாடசாலையில் நான் சிரமப்படத் தொடங்கினேன். எனக்குப் பாடங்களில் கவனம் செலுத்துவது இயலாத காரியமாக இருந்தது. படிப்பில் மற்ற மாணவர்களிடமிருந்து நான் பின் தங்கினேன். ஆசிரியர்கள் எனது நிலை பற்றி விசாரித்தபோது என்னால் அவர்களுக்குப் பதிலெதையும் தரமுடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் பாடசாலையிலிருந்து திரும்பி வந்தபோது, நான் மாஹி வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவளை வரவேற்கக் கூட மறந்து எனது பாடசாலைப் பையை வீசி எறிந்துவிட்டு எல்லோரிடமும் அவளது வரவை மகிழ்வாகச் சத்தமிட்டு அறிவித்தேன். எனது எதிரிகளுக்கும் அவள் வரவு தெரியவந்தது. மாஹி பலம் பொருந்தியவள், உறுதியானவள், பல தடவைகள் என்னைச் சிற்றன்னையிடமிருந்து காப்பாற்றியவள். அன்று இரவுக்குள்ளாகவே மாஹி சிற்றன்னையுடன் தனது தர்ம யுத்தத்தைத் தொடங்கி விட்டாள். மாடுகளை விற்பதைச் சிற்றன்னை நிறுத்தாவிட்டால் அவளை அடிக்கப் போவதாகச் சிற்றன்னையை மாஹி எச்சரித்தாள். அவள் அதைச் செய்யக் கூடியவளும் கூட. மாஹி வீட்டு நிர்வாகத்தைத் தனது கைகளில் எடுத்துக்கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வாரங்களின் பின் அப்பா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். சிறைச்சாலையிலிருந்து அப்பாவை மாஹிதான் கூட்டி வந்தாள். மறுபடியும் நான் பாடசாலைக்குச் செல்வது தடைப்படலாம் என எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. ஆனால் வீட்டிற்கு வந்த அப்பா ஒரு நல்ல தகப்பனாக இருக்க உண்மையிலேயே முயன்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரது வேலை பறிபோயிருந்தது. புதிதாக வேலை எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. அப்பா மிதமிஞ்சிக் குடிக்கத் தொடங்கிச் சதா காலமும் போதையிலேயே கிடந்தார். ஒரு இரவில் எங்கள் எல்லோரையும் தன்னருகில் கூட்டி வைத்துப் போதையில் எங்களது எதிர்காலம் பற்றிய தனது 'தீர்க்க தரிசனத்தை'உரைத்தார். "எல்லோரும் என்னை நன்றாகப் பாருங்கள்... நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்" அவரால் சரியாகக் கூட நிற்கமுடியவில்லை. சகோதரன் ரேயில் தொடங்கிய அவர் " மகனே நீ ஒரு வைத்தியனாவாய், பமிலா நீ தாயாவாய், இம்மானுவேல் நீ தகப்பனாவாய்" சிறிது நேரம் பேசாமலிருந்த அவர் பின்பு என்னைப் பார்த்து "நீ விமான ஓட்டியாவாய் மகளே" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள் அப்பா தான் சிறையிலிருந்த நேரத்தில் சிற்றன்னை பக்கத்து வீட்டிலிருந்த இளைஞனுடன் உடலுறவு வைத்துக்கொண்டதாகச் சிற்றன்னையைக் குற்றம் சாட்டினார். "வீடு முழுவதும் விந்துக்களின் நாற்றமாயிருக்கிறது" எனக் கத்திக்கொண்டே சிற்றன்னையப் பிடித்து வெளியே இழுத்துச் சென்று தோட்டத்தில் வைத்து அடிக்கத் தொடங்கினார். ஒரு வாரத்தில் பழைய வேலை அவருக்குத் திரும்பவும் கிடைத்ததும் குடிப்பதை அவர் நிறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிற்றன்னை மீண்டும் தனது பழைய தந்திரத்தை உபயோகிக்கத் தொடங்கினார். இன்று இரவுணவை நான் தயாரிக்க வேண்டுமாம், அவர் திருமதி டெரிக்கைப் பார்க்க வெளியே போகிறாராம். நான் அவர் தயாரிக்கும் மஞ்சள் நிறமான ஆணத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். அந்த ஆணம் மிகவும் ருசியானது. நான் வேலையைக் காட்ட ஆரம்பித்தேன். மீன் கொழுப்புடன் சுவையான மசாலாத் தூள் சிறிதளவு சேர்த்தேன். உப்பைக் கவனமாகக் கையாண்டேன். திரும்பி வந்த சிற்றன்னை சமையலறைக்குச் சென்று பார்வையிட்டார். அவர் குறை எதுவுமே சொல்லவில்லை. எனக்குப் பெருமை பிடிபடவில்லை. எல்லோரும் மேசையில் கூடியிருந்தோம். நான் சமைத்தது பற்றிச் சிற்றன்னை யாருக்கும் எதுவுமே சொல்லவில்லை. உணவு பரிமாறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;"இது என்ன மயிர்ச் சாப்பாடு?" மனைவியைப் பார்த்து அப்பா கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உனது மகளைக் கேள்" இது சிற்றன்னையின் பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் மகளைக் கேட்க வேண்டும்? நீ தானே எனது மனைவி"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் என் சிநேகிதி வீட்டிற்குச் சென்றிருந்த போது உன் மகள் நான் சொல்லாமலேயே சமையலறையில் தன் கைப் பக்குவத்தைக் காட்டியிருக்கிறாள்" சிற்றன்னை கூசாமற் பொய் சொன்னார். அதைக் கேட்டதும் அப்பா என் பக்கம் திரும்பி "உன்னை யார் சமைக்கச் சொன்னது?" என்று கத்தினார். நான் தரையைப் பார்த்துக்கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தேன். அப்பா ரேயிடம் தோட்டத்திற்குச் சென்று மிளகாய் பிடுங்கி வரும்படி சொன்னார். மிளகாய்களை அந்த ஆணத்துடன் கலந்து சாப்பிடச் சொல்லி எனக்குக் கட்டளையிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் உதை கிடைக்கப்போவது நிச்சயம். "சாப்பிடு!" என்ற கட்டளை உரக்கவும் பயமுறுத்தும் விதத்திலும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. நான் கல்லுப் போல அசையாமல் அமர்ந்திருந்தேன். அப்பா தனது அறையிலிருந்து பிரம்பை எடுத்து வந்தார். என்னைத் தரையில் படுக்கும்படி அப்பா உத்தரவிட்டார். நானோ நாற்காலியிலேயே அசையாது உட்கார்ந்திருந்தேன். அப்பா தனது கைகள், கால்கள், பிரம்பு, சமையலறைப் பாத்திரங்கள் என எல்லாவற்றையும் என்னைத் தாக்குவதற்குப் பிரயோகித்தார். நான் கைகளால் எனது கண்களைப் பாதுகாக்கப் போராடிக்கொண்டே ஓலமிட்டு அழுதேன்."அப்பா அவளை விட்டுவிடுங்கள் நீங்கள் அவளைக் கொன்றுவிடப் போகிறீர்கள்" எனச் சிற்றன்னையின் பிள்ளைகள் அப்பாவைக் கெஞ்சினார்கள். உடனடியாகவே அவர்களைப் படுக்கைகளுக்குச் செல்லுமாறு அப்பா உத்தரவிட்டார். நான் சமையலறையில் தனியாக விடப்பட்டேன். சற்று நேரங் கழித்து ரேயும் பமிலாவும் வந்து எனது இரத்தத்தைக் கழுவ உதவி செய்து என்னைப் படுக்கைக்கு அழைத்துச் சென்றனர். பமிலா என்னுடன் படுத்துக் கொள்வதாகச் சொன்னது எனக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்தது. இருவருமே நீண்ட நேரமாக அப்பாவைப் பற்றியும் சிற்றன்னையைப் பற்றியும் பேசிக்கொண்டோம். அவர்கள் இருவரையும் தானும் தீவிரமாக வெறுப்பதாகப் பமீலா என்னிடம் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள் காலையில் நான் பாடசாலைக்குப் புறப்படுகையில் "பாடசாலையில் உன் காயங்களைப் பற்றிக் கேட்டால் மரத்திலிருந்து தவறி விழுந்ததாக நீ சொல்ல வேண்டும்" என அப்பா என்னை எச்சரித்தார். மறுத்தால் மீண்டும் உதை கிடைப்பது நிச்சயம். நான் மெல்ல மெல்லத் தத்தித் தத்திப் பாடசாலைக்குச் சென்றேன். எல்லாப் பிள்ளைகளும் என்னைச் சுற்றி நின்று எனக்கு என்ன நடந்ததெனக் கேட்டனர். என்னால் சொல்ல எதுவும்முடியவில்லை. கண்ணீர் என் கன்னங்களில் வழிந்தோடியது. அவர்கள் ஓர் ஆசிரியரை என்னிடம் கூட்டி வந்தனர். அவரும் என்ன நடந்ததென்பதை அறிய விரும்பினார். எனது மரத்தால் விழுந்த கதையை அவர் நம்பவில்லை. அவர் தலைமை ஆசிரியரிடம் என்னைக் கூட்டிச் சென்றார். தலைமை ஆசிரியர் "இந்த விசாரணை ஓர் இரகசியமான விசாரணை, நீ சொல்வது எதுவும் இநத அறையை விட்டு வெளியே போகாது" எனச் சொல்லியும் நான் மெளனமாகத் தலையைக் குனிந்தவாறே நின்றிருந்தேன். தலைமையாசிரியரும் விடுவதாகயில்லை. இறுதியில் நான் நடந்ததைக் கூறினேன். தலைமையாசிரியர் உடனடியாகவே ஒரு கடிதமெழுதி அதை அப்பாவிடம் சேர்ப்பிக்குமாறு என்னிடம் கொடுத்தார். வீட்டுக்குத் திரும்பிய நான் அப்பாவிடம் கடிதத்தைக் கொடுத்ததுமே அப்பா உறுமத் தொடங்கினார். நான் அச்சத்துடன் தோட்டத்திலேயே காத்திருந்தேன். அப்பா பதில் கடிதமெழுதித் தலைமையாசிரியரிடம் கொடுக்கும்படி என்னிடம் தந்தார். என்னைத் தனது வீட்டிலேயே வைத்திருந்து படிப்பிக்க விரும்புவதாகத் தான் எனது அப்பாவிற்கு கடிதம் எழுதியிருந்ததாகத் தலைமையாசிரியர் என்னிடம் சொன்னார். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.12.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.12.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115452333316795624?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115452333316795624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115452333316795624&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452333316795624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452333316795624'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/21.html' title='குழந்தைப் போராளி - 21'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115452294326816616</id><published>2006-08-02T16:00:00.000+02:00</published><updated>2006-08-05T11:35:19.266+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 20</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier%2032.3.jpg"&gt;&lt;img style="CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/child-soldier%2032.0.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="left"&gt; &lt;/div&gt;&lt;div align="left"&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;கைது செய்யப்பட்ட அப்பா&lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#33cc00;"&gt;ஒ&lt;/span&gt;ரு சனிக்கிழமை காலையில் மாடுகளைக் கணக்கெடுத்தபோது பண்ணயில் இன்னொரு பிரச்சினை ஆரம்பமாயிற்று. பதினைந்து மாடுகள் குறைந்திருந்தன. பண்ணையாட்கள் பாட்டியிடம் ஓடினர். அவர் இந்தச் செய்தியைக் கேட்டதுமே "மைக் எங்கே போய்த் தொலைந்தான்?" என ஆத்திரத்துடன் கத்தினார். மைக் தான் மாடுகளின் பராமரிப்பிற்குப் பொறுப்பானவர். சிலர் மைக்கைத் தேடிச் செல்ல ஆயத்தமாகையில் மைக்கே அங்கு வந்து சேர்ந்தார். ஏன் எல்லோரும் இங்கு கூடி நிற்கிறார்கள் என்ற கேள்வி அவரின் முகத்தில் இருந்தது. பாட்டி "நீ குற்றமற்றவன் போல் நடிக்காதே" என மைக் மீது எரிந்து விழுந்தார். திருட்டுப் பழி அவர் மேல் விழும்வரை அங்கு நடப்பதொன்றையும் மைக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. தான் மாடுகளைத் திருடவில்லை எனத் திரும்பத் திரும்பச் சொன்ன மைக் "அப்படித் திருடியிருந்தால் நான் ஏன் இங்கு திரும்பிவர வேண்டும்?" எனக் கேட்டார். பாட்டி மைக்கை நம்பவேயில்லை. அப்பாவைக் கூட்டி வர ஆள் அனுப்பப்பட்டது. நானும் ரிச்சட்டும் பண்ணையை விட்டு ஓடிப்போய் விடும்படி மைக்கிற்கு 'புத்தி' சொன்னபோது மைக் பரிதாபமாக "நானும் உங்களைப் போல துற்சி இனத்தவன் தான் உங்கள் அப்பா என்னைப் புரிந்து கொள்வார், தன் இனத்தவர்களிடமே திருடுவது சரியல்லவே" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் அப்பா பண்ணைக்குப் பொலிஸ்காரர்களோடு வந்து சேர்ந்தார்.&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/1772%20.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/1772%20.jpg" border="0" /&gt;&lt;/a&gt; மைக்கின் நியாயமும் மன்றாட்டமும் அப்பாவின் காதுகளில் ஏறவில்லை. வந்த பொலிஸ்காரர்களில் ஒருவன் காலை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டே நின்றான். ஏதோ எரியும் நெருப்பின் மீது அவன் நிற்பது போல இருந்தது. மைக்கை யாருமே நம்பவில்லை.பொலிஸார் மைக்கைத் தரையிலே தள்ளிச் செருப்புக் கால்களால் மிதித்தார்கள். முடிவில் பொலீசார் அவரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். அன்றிரவு அப்பா என்னையும் ரிச்சட்டையும் இனி மாடுகளை மேய்ப்பதற்குப் போக வேண்டாமெனவும் திருடர்கள் எங்களைத் தாக்கலாமெனவும் சொல்லிக்கொண்டிருந்தார். நான் மைக்கைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன். இழுத்துச் சென்றவர்கள் அவரை இன்னும் அடித்துக் கொண்டிருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலையில் அப்பா ஒரு பண்ணையாளுடன் 'களவு கொடுத்த' மாடுகளைத் தேடிப் போனார். திருடர்களில் ஒருவன் அப்பாவைக் கொன்றால் நன்றாக இருக்குமென நினத்துக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வெறுங்கையுடன் திரும்பி வந்தார்கள். இதற்கிடையில் மைக் விடுதலை செய்யப்பட்டார். அப்பாவின் கண்களில் நான் கண்டதெல்லாம் பழிவாங்கும் வெறிதான். அவர் தனது வேலையாட்களிற்கு மைக் பற்றித் தகவல் தரச் சொன்னதுடன் அயல் பண்ணைகளில் உள்ளவர்களுக்கும் பணம் கொடுத்துத் தகவல் தர ஏற்பாடு செய்திருந்தார். மைக்கை எல்லோரும் தேடத் தொடங்கினர்.&lt;br /&gt;மறுநாள் நாங்களெல்லோரும் மாட்டுக் கொட்டடியில் நின்றபோது ஒருவர் வந்து மைக் தனது பண்ணைக்கு வேலை தேடி வந்திருப்பதாகச் சொன்னார். உடனடியாக அப்பா வேலையாட்களைச் சேர்த்துக்கொண்டு கயிற்று வளையமொன்றையும் தூக்கிக் கொண்டு மைக்கைத் தேடிச் சென்றார். நாங்கள் மதியம் கழித்து வீடு திரும்பியபோது மைக்கை மீண்டும் கண்டோம். மைக் அடையாளமே தெரியாதவாறு உருக்குலைந்து கிடந்தார். அவர் உடுத்திருந்த உடைகள் இரத்தத்தில் தோய்ந்து கிடந்தன. அவரின் கைகளிரண்டும் முதுகுக்குப் பின்னே சேர்த்துக் கட்டப்பட்டிருந்தன. அப்பாவும் அவரது கைக்கூலிகளும் மைக்கைச் சுற்றிவர நின்றிருந்தனர். எங்களைக் கண்ட மைக் குடிப்பதற்கு ஏதாவது தருமாறு கேட்க தம்பி ரிச்சட் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வந்தான். மைக் தனது தலையைத் தூக்க எத்தனிக்க அப்பா ரிச்சட்டிடமிருந்து பால் பாத்திரத்தைப் பறித்து அவன் மீதே வீசினார். "நீ தானே எனது மாடுகளைத் திருடினாய்? மரியாதையாக உண்மையை ஒத்துக்கொள்!" அப்பா கத்திக் கொண்டே நீண்ட இரும்புக் குழாயை எடுத்து மைக்கின் முதுகில் தாறுமாறாக அடித்தார். மைக் ஓங்காளித்து வாந்தியெடுத்தார். அவரின் வாயிலிருந்து இரத்தம் தோய்ந்த தசைத் துணுக்குகள் தெறித்து விழுந்தன. அவரின் அலறல்கள் என்னை நடுங்க வைத்தன. வீட்டினுள் சென்று ஒளிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென எல்லாம் ஓய்ந்து பயங்கர அமைதி நிலவியது. என் எல்லாத் தைரியங்களையும் திரட்டிக்கொண்டே வெளியே வந்து பார்த்த போது மைக் தரையில் கோணல் மாணலாக மல்லாந்து கிடந்தார். அவரின் உடலில் அசைவில்லை. அப்பாவைப் பார்த்தேன், அவரின் கண்களில் அச்சம் தெரிந்தது. அவர் என் கண்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொண்ட மாதிரித் தெரிந்தது. அவர் பதற்றத்துடன் வேலையாட்களைக் கூப்பிட்டு மைக்கை ஒரு தள்ளுவண்டியில் ஏற்றிச் சென்று காட்டில் பாறைகளிடையே போட்டு விட்டு வரும்படி உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பண்ணைக்குப் பொலிஸ்காரர்கள் வந்தார்கள். இவர்கள் முதலில் மைக்கைக் கைது செய்து கொண்டு போன பொலிஸ்காரர்களல்ல. மைக் மீண்டும் திருட வந்ததாகவும் வேலையாட்கள் அதனைக் கண்டு அவனைப் பிடித்து அடிக்க மைக் எதிர்பாராத விதமாக இறந்து போய்விட்டதாகவும் அப்பா பொலிஸாருக்குச் சொன்னார். இந்த அப்பட்டமான பொய்யைக் கேட்டவுடன் நான் அப்பாவை எரித்து விடுவது போல் பார்த்தேன். பார்வை கொல்லுமாயின் நிச்சயமாக அப்பா சாம்பலாகியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வீட்டினுள் சென்றவுடன் நான் வந்திருந்த பொலிஸாருக்கு உண்மையில் என்ன நடந்ததெனச் சொல்லிவிட்டு என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாமென அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். அப்பாவின் கைகளில் விலங்கு மாட்டி அவர்கள் இழுத்துச் சென்றனர். இம்முறை அவரால் தப்பிக்க முடியவில்லை. பாட்டி அவரது மகனைப் பொலிஸார் இழுத்துச் செல்வதைப் பார்த்து பைத்தியம் பிடித்தது போல அலறத் தொடங்கினார். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். இனி நானும் ரிச்சட்டும் நாங்கள் விரும்பியபடி வாழலாம். &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.11.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.11.jpg" border="0" /&gt;&lt;/a&gt; &lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115452294326816616?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115452294326816616/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115452294326816616&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452294326816616'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115452294326816616'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/08/20.html' title='குழந்தைப் போராளி - 20'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115367270645968588</id><published>2006-07-24T14:24:00.000+02:00</published><updated>2006-07-28T20:33:55.006+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 19</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier33.6.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier33.3.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#99ff99;"&gt;சிங்கத்தின்&lt;/span&gt; &lt;span style="color:#33ff33;"&gt;குகைக்குள் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#66ffff;"&gt;ஒ&lt;/span&gt;ரு வாரத்தின் பின்பு பாட்டியிடமிருந்து ஒரு செய்தி வந்தது. பாடசாலைக்கு நான் இனி போகப் போவதில்லையானால் என்னைப் பண்ணைக்கு அனுப்பிவிடுமாறு பாட்டி கேட்டிருந்தார். மறுநாளே அப்பா என்னைப் பண்ணைக்கு அழைத்துச் சென்றார். பண்ணையையும் பாட்டியையும் குறித்த துன்பங்கள் நிறைந்த பழைய நினைவுகள் பயணம் முழுவதும் என்னை அலைக்கழித்தன. பண்ணையில் பாட்டி விருந்து சமைத்து வைத்திருந்தார். என்னால் சாப்பிடவே முடியவில்லை. மறுநாள் அப்பா நகரத்திற்குத் திரும்பிப் போனார். துயரிலும் விரக்தியிலும் நான் அல்லாடிக் கொண்டிருந்தபோது எனக்கு சிறிதேனும் ஆறுதலைத் தர மைக் வந்தார். மைக் பண்ணை வேலையாள். அவர் நெடுநெடுவென வளர்ந்த உயரமான மனிதர். அவர் அழகாகச் சிரிக்கும் போது அவரின் வெண்ணிறப் பற்கள் பளீரிட்டன. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவர் அன்புள்ளம் கொண்டவர். மெல்ல மெல்ல மைக் மீது எனக்கு நம்பிக்கை வளரத் தொடங்கியது. இவரிடம் நான் என் கவலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். இவரை நான் நம்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எனது சகோதரன் ரிச்சட்டும் பண்ணைக்கு அனுப்பப்பட்டான். எங்கள் வேலைகள் முடிந்ததும் நான்,ரிச்சட், மைக் மூவரும் வீட்டின் பின்னே அமர்ந்திருந்து பல கதைகளைப் பேசிக்கொள்வோம். ஒருமுறை மைக்கின் குடும்பம் பற்றி நான் கேட்டேன். தனக்குக் குடும்பம் இல்லையென மைக் சொன்னதை நான் நம்பவில்லை. குடும்பத்தைப் பற்றி அவர் கதைக்க விரும்பவில்லை. நான் விடாமல் கேட்டுக்கொண்டேயிருக்க மைக் சோர்வுடன் "அதைப் பற்றிப் பேச நான் விரும்பவில்லை" எனச் சொல்லிக்கொண்டே எழுந்து போய்விட்டார். 'மைக்கின் குடும்பமும் நமது குடும்பம் போல பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமோ?' என ரிச்சட்டிடம் கேட்டேன். இரவுணவிற்காக அழைத்த பாட்டியின் குரல் அப்போதைக்கு எங்கள் பேச்சைத் துண்டித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அப்பா சில மனிதர்களுடன் பண்ணைக்கு வந்தார். இவர்கள் எங்கள் கால் நடைகளை வாங்கி விற்கும் வியாபாரிகள். அப்பா அன்றிரவு பண்ணையிலேயே தங்கி விட்டார். மறு நாள் மேய்ச்சல் நிலத்திலிருந்து திரும்பி வந்த ரிச்சட் மாட்டுக் கன்றொன்று காணாமற் போய்விட்டதாகப் பதற்றத்துடன் பாட்டியிடம் சொன்னான். அதைக் கேட்டதும் பாட்டி போட்ட கூச்சலால் பண்ணை வீட்டின் கூரையே பொறிந்து விழும் போலிருந்தது. வீட்டின் பின்புறத்தில் வேலியைச் சரி செய்து கொண்டிருந்த அப்பாவை நோக்கிப் பாட்டி நான்கு கால் பாய்ச்சலில் ஓடுவதைப் பார்த்தேன். அப்பா அதிலும் வேகமாக வீட்டினுள் புகுந்தார். அவரின் முகம் கடுங் கோபத்தால் விறைத்திருக்க அவர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார். ரிச்சட் முன்னெச்சரிக்கையாக வாசற் பக்கம் நகர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிங்கங்கள் மாட்டுக் கன்றினை இப்போது சாப்பிட்டு முடித்திருக்கும்&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/binary1%20.jpg"&gt;&lt;img style="FLOAT: right; MARGIN: 0px 0px 10px 10px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/binary1%20.jpg" border="0" /&gt;&lt;/a&gt; இல்லையா?" அப்பா தம்பியைப் பார்த்து உறுமினார். அவரிருந்த நாற்காலி பின் நகர்ந்தது. அறையில் மயான அமைதி நிலவியது. தம்பி மூச்சுப் பேச்சில்லாமல் பொம்மை மாதிரி நின்றிருந்தான்.&lt;br /&gt;"வேசி மகனே எனது மாட்டுக் கன்றைச் சிங்கத்திற்குத் தாரை வார்த்து விட்டாயே" சடுதியாக அப்பாவின் குரல் வெறியுடன் எழுந்தது. நான் பயத்தில் தரையில் மல்லாக்க விழுந்தேன். அப்பா பாய்ந்து சென்று வெட்டுக் கத்தியை எடுத்தது தான் தாமதம் தம்பி ஒரு மானைப் போல வெளியே தாவி ஓடத் தொடங்கினான். அப்பா கொலை வெறியுடன் கத்தியை உயர்த்திப் பிடித்தபடியே அவனைத் துரத்திக்கொண்டு ஓடினார். நானும் அவர்களின் பின்னால் ஓடத்தான் முயற்சித்தேன். ஆனால் அச்சத்தில் என் கால்கள் பின்னிக்கொண்டன. அப்பா எனது தம்பியை நிச்சயமாகக் கொல்லத்தான் போகிறார். நான் பாட்டியின் பக்கம் திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். அவரின் கண்களை ஊடுருவிப் பார்க்குமளவிற்கு எனக்குத் தைரியம் இருந்தது. பாட்டியால் அப்பாவைத் தடுத்து நிறுத்த முடியும் என நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அழுகையை நிறுத்துமாறு உணர்சியற்ற குரலில் சொன்ன பாட்டி"உனது கண்ணீர் பாலா? இல்லை இரத்தமா?" எனக் கேட்டார். அவர் என்ன கேட்கிறார் என்று எனக்கு விளங்கவில்லை. ஒன்றுமே சொல்லாது படுக்கைக்குச் சென்றேன். காத்திருப்பதைத் தவிர வேறெதுவும் செய்யாமுடியாது. சிறிது நேரங் கழித்துத் திரும்பிவந்த அப்பா இரத்தம் தோய்ந்த வெட்டுக்கத்தியை எனக்குக் காட்டித் தான் ரிச்சட்டைக் கொன்றுவிட்டதாகக் கூறினார். அந்தக் கணத்தில் அச்சம் என்னை விட்டுப் போயிற்று. எங்கிருந்தோ வந்த தைரியம் என் ஆன்மாவை நிறைத்தது. இனி இழப்பதற்கு என்னிடம் எதுவுமே இல்லை. நான் அழவில்லை.இநத உலகத்தில் இனி நான் தனியானவள் என்ற உணர்வே என்னுள் இனம் புரியாத வைராக்கியத்தை ஊட்டிற்று. இனி யாராலும், எதனாலும் என்னை அழவைக்க முடியாது. நான் படுக்கையில் கிடந்தவாறே வற்றிய கண்களுடன் ரிச்சட்டை நினைத்துக்கொண்டேன். நானும் அவனும் விளையாடி மகிழ்ந்திருந்த தருணங்களை நினைத்துப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் அதிகாலையிலேயே நான் எழுந்து என் சகோதரனின் உடலைத் தேடிப் புறப்பட்டேன். சிறிது நேரத் தேடுதலின் பின்பு எறும்புப் புற்றின் மேல் யாரோ விழுந்து கிடப்பது போலத் தெரிந்தது. அருகே சென்று பார்த்த போது அது யாரோ அல்ல எனது தம்பி தானெனத் தெரிந்து கொண்டேன். நான் எதையும் கேட்பதற்கு முன்னமே ரிச்சட் திரும்பி தனது இரத்தம் தோய்ந்த புட்டத்தை எனக்குக் காண்பித்தான். அவன் உயிருடன் இருப்பதைக் கண்டதும் நான் அவனை இறுகத் தழுவிக்கொண்டே மனப் பாரம் அகன்றவளாகப் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினேன். அவனை முத்தமிட்டேன். அவன் உயிருடன் இருப்பது எனக்கு மிக மிக முக்கியமானது. அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு சிறிது உணவும் குடிப்பதற்குப் பாலும் வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் எடுத்து வரச் சென்றேன். அதன் பின்பு அப்பாவை நான் முகத்துக்கு முகம் சந்திக்க நேரும் போதெல்லாம் கோபத்துடன் அவரைப் முறைக்க நான் மறந்ததில்லை. அவர் எங்களைவிட்டு நகரத்துக்குச் செல்லும் வரை இது தொடர்ந்தது. &lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/continu-1.10.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/200/continu-1.10.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/30095908-115367270645968588?l=csoldiers.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://csoldiers.blogspot.com/feeds/115367270645968588/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=30095908&amp;postID=115367270645968588&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115367270645968588'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/30095908/posts/default/115367270645968588'/><link rel='alternate' type='text/html' href='http://csoldiers.blogspot.com/2006/07/19.html' title='குழந்தைப் போராளி - 19'/><author><name>ஷோபாசக்தி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='23' src='http://2.bp.blogspot.com/_XbNObD6rYcY/S5fdJz4xNII/AAAAAAAAEUE/aKERV5ik_pg/S220/13635_211184355972_638170972_4597973_8043450_n.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-30095908.post-115367222751270754</id><published>2006-07-24T14:19:00.000+02:00</published><updated>2006-07-24T16:43:02.080+02:00</updated><title type='text'>குழந்தைப் போராளி - 18</title><content type='html'>&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child-soldier33.5.jpg"&gt;&lt;img style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/400/child-soldier33.2.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;"&gt;&lt;span style="color:#ffcc66;"&gt;சிற்றன்னையின்&lt;/span&gt; &lt;span style="color:#ffff66;"&gt;வெற்றி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#ffff66;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:180%;color:#ff6600;"&gt;ஹெ&lt;/span&gt;லன் எங்களை விட்டுப் பிரிந்தும், அம்மாவைத் தேடிச் சென்றும் ஒரு வாரமாகிவிட்டது. அவளை மீண்டும் காண்பேனென்று நான் எண்ணியிருக்கவில்லை. ஆனால் அவள் மீண்டும் வந்து சேர்ந்தாள். அவள் அம்மாவைக் கண்டாளா? என்ற கேள்விக்கு அவள் முகத்திலேயே பதிலிருந்தது. தோல்வி துல்லியமாகவே அவளின் முகத்தில் தெரிந்தது. அவளின் முயற்சியும் பலனின்றிப் போயிற்று. பற்றிசியா நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அவர் எப்போது திரும்பி வருவாரென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஹெலன் முற்றோனுடனும் யூடித்துடனும் சிறிது காலம் பற்றிசியாவிற்காக் காத்திருந்துவிட்டுத் திரும்பி வந்திருக்கிறாள். இம் மறுமொழியைக் கேட்டதும் எனக்கு ஆத்திரம் பொங்கியது. "உதவி தேவையென்றால் கூனிக் குறுகிக்கொண்டு மீண்டும் வருவார்கள்" என்ற அப்பாவின் சொற்கள் என் நினைவில் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;" நீ ஒரு நாயைப் போல இங்கே தான் சுற்றிச் சுற்றி வருவாய் என்பது எனக்குத் தெரியும்" என அப்பா ஹெலனைப் பழிக்க ஹெலன் தலையைக் குனிந்தவாறிருந்தாள். ஒரு துயரப் புன்னகை அவளின் உதடுகளில் நெளிந்தது. ஆனால் அப்பா இன்னும் தனது உரையை முடிக்கவில்லை.&lt;br /&gt;"நீ எங்கும் போகலாம், ஆனால் எப்போதும் இங்கு தான் திரும்பி வரவேண்டும். உனக்கு வேறு கதியில்லை வீடென்று உனக்கிருப்பது இது ஒன்றுதான்." எனது சகோதரிகள் வீட்டை விட்டுப் போனால் அப்பாவிற்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் அவர்கள் திரும்பி வந்தால் எந்த வழியிலாவது அவர்களைப் பழிவாங்கியே தீருவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://photos1.blogger.com/blogger/1376/3221/1600/child_soldier_193%20.0.jpg"&gt;&lt;img style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://photos1.blogger.com/blogger/1376/3221/320/child_soldier_193%20.jpg" border="0" /&gt;&lt;/a&gt;இரண்டு நாட்கள் எந்தவிதச் சச்சரவுகளுமின்றிக் கழிந்தன. மூன்றாவது நாள் ஒரு புகைப்படக்காரர் வீட்டிற்கு வந்திருந்தார். நான் ஹெலனிடம் நானும் அவளும் எனது சிற்றன்னை பெற்ற சகோதரிகளுமாகச் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வோமா எனக் கேட்டேன். இதுவரை நான் புகைப்படமெடுத்துக் கொண்டதேயில்லை. படத்தில் நான் எவ்வாறு இருப்பேனென்று பார்க்கவும் எனக்கு ஆவலாயிருந்தது. ஆனால் நிலைமை வேறுமாதிரியாக இருந்தது. புகைப்படக்காரர் ஹெலனை மட்டுமே படம் பிடித்தார். புகைப்படக்காரர் போனதுமே அப்பா தனது நண்பரின் மகனொருவன் ஹெலனை மணக்க விரும்புவதாக ஒரு செய்தியைச் சொன்னார். என்னால் இந்தச் செய்தியின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஹெலன் வீடு திரும்பியதையிட்டு அப்பா மகிழ்கிறாரா? அல்லது கூடிய சீக்கிரத்தில் அவளை வீட்டைவிட்டு விரட்ட முயல்கிறாரா? ஹெலனிடம் வீட்டுப்பாடத்தில் உதவி செய்யும்படி கேட்டேன். அப்போது தான் நாங்களிருவரும் நிம்மதியாகபேசிக்கொள்ள முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பா சொன்னவனை உனக்குத் தெரியுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் இதுவரை அவனைப் பார்த்ததில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;"முன்பின் தெரியாத ஒருவனை மணந்து கொள்ள உனக்குப் பயமாக இல்லையா?"&lt;br /&gt;&lt;br /&gt;'பொஸ்' என நாங்கள் அழைக்கும் கிழவன் முன்பு என்னிடம் முறை தவறி நடந்து கொண்டதை நான் நினைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஹெலன் ஆண்கள் நல்லவர்களல்ல, அவர்களை நம்பமுடியாது. நீ அவனைக் கல்யாணம் செய்துகொண்டால் நடக்கக் கூடாதவை எல்லாம் நடக்கலாம்." என்னை ஒருமுறை உற்றுப் பார்த்துவிட்டு&lt;br /&gt;&lt;br /&gt;"எக்காரணம் கொண்டும் நான் அவனை மணந்துகொள்ளப் போவதில்லை" எனக் ஹெலன் சொன்னாள்.&lt;br /&gt;அப்பாவிடமும் இதே பதிலைத்தான் ஹெலன் சொன்னாள். அதிலிருந்து அப்பா எந்த நேரமும் அவளுடன் எரிந்து விழுந்து கொண்டும் அவளைத் துன்புறுத்துவதுமாகவே இருந்தார்.&lt;br /&gt;ஹெலனின் வேலைப்பழு ஏறிக்கொண்டே போனது. ஓர் ஒட்டகம் மாதிரி அவள் வேலை செய்து கொண்டிருந்தாள். நான் பாடசாலை முடிந்து வந்ததும் என்னாலான உதவிகளை அவளுக்குச் செய்தேன். அப்பா வேலையால் திரும்பி வந்ததுமே ஹெலனை உணவு தயாரிக்கச் சொல்வார். எனக்குத் தெரிந்தளவில் கணவன் மனைவியைத் தான் சமையல் செய்யச் சொல்லவேண்டும். பிள்ளைகள் தண்ணீரோ தேனீரோ தரலாம். அவரது நடத்தை ஏதோ அவரின் மனைவி செத்து விட்டாள் என்பது போலிருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவரின் மனைவி உயிருடன் தான் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் ஹெலன் பக்கத்து வீட்டுப் பெண்களுடன் எங்கேயோ வெளியே போயிருந்தாள். இரவுணவு தயாரிக்கும் நேரமாகியும் அவள் வீட்டுக்கு வரவில்லை. சிற்றன்னையே அன்றிரவில் முணுமுணுத்துக் கொண்டு சமையல் செய்தார். ஹெலன் திரும்பி வந்ததுமே அவர் தனது கோபத்தைக் காட்டினார். " பிசாசே எங்கே ஊர் மேயப் போனாய்?" எனச் சிற்றன்னை கொக்கரிக்க ஹெலன் கட்டுக்கடங்காத ஆத்திரத்துடன் சிற்றன்னையுடன் மோதினாள்.&lt;br /&gt;"உனது கணவனுக்கு நீ தான் சமைத்துக் கொடுக்க வேண்டும். நான் அவரது மகள்... ஏன் நான் ஒவ்வொரு நாளும் அவரின் உணவைத் தயாரிக்க வேண்டும்? வாயைப் பொத்திக்கொண்டு போவதுதான் உனக்கு நல்லது." ஹெலனின் சீற்றம் சிற்றன்னையின் அகங்காரத்தைக் குறைக்காவிடினும் ஹெலன் சொல்வது ஓரளவு உண்மை எனபது அவருக்குப் புரிந்திருக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா வாசற்படியில் கால் வைத்திருக்கமாட்டார், சிற்றன்னை கண்ணீருடன் ஓடிப்போய் அவர் முன்னே நின்று முறையிட்டுப் புலம்பத் தொடங்கினார். நடந்ததற்கும் அவர் முறையிட்டுப் புலம்பியதற்கும் சம்பந்தமே இல்லை. அப்பா என்னைப் பார்த்து என்ன நடந்ததெனக் கேட்டார்.' நடந்த உண்மையைச் சொன்னால் நீ படாத பாடுகளைப் படுவாய்' எனச் சிற்றன்னையின் அனல் பறத்தும் கண்கள் என்னை எச்சரித்தன. இந்தச் சிக்கலிலிருந்து நான் தப்பிப்பதற்கான ஒரே வழி பொய் சொல்வதுதான். நான் இவர்களது சண்டையைப் பார்க்கவே இல்லையெனச் சாதித்தேன். இப்போது அப்பா ஹெலனைக் கூப்பிட்டார். அவளுக்குத் தண்டனை கொடுப்பதே அவரின் நோக்கம். ஹெலனோ கோபத்தின் அரசியாக நின்றிருந்தாள். ஒரு கூட்டம் தேனீக்களை உயிருடன் விழுங்கியவள் போல அவள் துடித்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt;"நீ உனது மனைவியின் பொய்களை மாத்திரமே நம்புகின்றாய், நீ எப்படிப்பட்ட தகப்பன்? பிள்ளைகளைப் பற்றிய எந்தக் கவலையோ பரிவோ உனக்கில்லை, ஆனால் அடிப்பதற்கும் வதைப்பதற்கும் மாத்திரம் நீ என்றுமே பின் நிற்பதில்லை."&lt;br /&gt;ஹெலனின் துணிவு என்னைப் பயத்தால் நடுங்கச் செய்தது. என்னால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. ஹெலனின் சீற்றத்திற்குப் பின் பெருமழை பெய்து ஓய்ந்தது போல அங்கே அமைதி நிலவியது. எனக்கு - ஏன் எல்லோருக்குமே - ஹெலன் உண்மையைத் தான் பேசிக்கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ஒரு மாதிரியாகத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் பார்வையை அப்பாவிடம் உயர்த்தினேன். அப்பாவின் முகம் ஆத்திரத்தில் உப்பி வீங்கியிருந்தது. அதுவே அந்த இடத்திலிருந்து என்னைத் துரத்தப் போதுமானதாயிருந்தது. நான் மெதுவாக அங்கிருந்து நழுவ முற்பட்ட போது ஹெலன் அப்பாவை நோக்கி&lt;br /&gt;" என்னை அடிப்பதற்கு மட்டும் நினைக்காதே! நான் இன்னும் சிறு பிள்ளையல்ல, நீ என்னை அடித்தால் நானும் உன்னைத் திருப்பி அடிப்பேன். இனி எப்போதும் என்னை அடிப்பதை நினைத்தும் பார்க்காதே!" எனச் சவால் செய்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் இருண்ட பக்கத்தை என் சகோதரியைத் தவிர வேறொருவரும் வெளிச்சம் போட்டுக் காட்டத் துணிந்ததில்லை. அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வெகு நேரமாக வெட்கத்துடன் போராடிக் கடைசியில் அவர் ஹெலனை வீட்டைவிட்டு வெளியேறும்படி கத்தினார். ஹெலனோ " முடியாது, நான் இங்கேதான் இருப்பேன். என்னைக் கொல்ல விரும்பினால் இப்போதே நீ என்னைக் கொல்லலாம்... நீ ஏன் என்னைப் பெற்றாய்? நீ எனது உண்மையான தந்தை இல்லையா? நீ எனது உண்மையான தந்தை இல்லையென்றால் எனக்கு மகிழ்ச்சி தான். நீ உண்மையான தந்தையாய் இருந்தால் நான் இங்கிருந்து போகப்போவதில்லை" எனப் பதிலுக்குக் கத்தினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா அவளைத் இழுத்துத் தரையில
